Sunday, July 12

செய்திகள்

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

கல்வி, செய்திகள்
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் நோக்கம்  பெண்களுடைய மனதின்  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K. குமாரவேல், இந்தியாவின் லைஃப் கோச்சிங் பயிற்சியாளர் புஜா புனீத் மற்றும் Successgyan India வின் நிறுவனர் சுரேந்திரன் ஜெயசேகர் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘ஒரு குழந்தை பிறந்தால், அது அழும் போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அந்த குழந்தை படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  வளர்வதை பார்த்து, ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல் இன்று, ஒரு தந்தையாக, எனது குழந்தை மல்லிகா ஒரு சிறந்த திறமை...
“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்த பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை  வாழ்த்தினார்.

“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்த பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை வாழ்த்தினார்.

சினிமா, செய்திகள்
Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ்  இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும் – நடிகர்சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்!

நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும் – நடிகர்சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்!

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: நடிகர் நாசர் பேசும்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் மிக மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக்குழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழுமூச்சாக செயலில் இறங்குவோம் என்றார். நடிகர் விஷால் பேசும்போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்பட...
அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது ; தொல்.திருமாவளவன்

அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது ; தொல்.திருமாவளவன்

சினிமா, செய்திகள்
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'முத்துநகர் படுகொலை'. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன என்பதை சொல்லும் 60 நிமிடம் கொண்ட ஒரு ஆவணப்படமாக இது உருவாகி உள்ளது. ஏற்கனவே 'மெரினா புரட்சி' என்கிற இதேபோன்ற ஒரு ஆவணப்படத்தில் மெரினா போராட்டத்தின் கடைசி நாளன்று ஏன் வன்முறை களமாக மாறியது, அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ். அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்ப...
பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு, கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி

பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு, கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி

செய்திகள்
Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து 'Keep a Bowl' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்பட்டது. தமிழகத்தின் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு, ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chair Person Savera Group of Hotels, ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சேவ் சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் சாயா தேவி, சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி உரையாற்றி, விருந்தினர்களை கௌரவித்தார். இந்நிகழ்வினில் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கூறியதாவது.., “சமீபத்தில், வானிலை ஆய்வுத் துறையினுடைய அதிகப்படியான தட்பவ...
 “பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022

 “பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022

செய்திகள், விளையாட்டு
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப்  சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். இந்திய முதுநிலை தடகள சம்மேளனம் (MAFI) தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன்,  42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன் நடத்துவது,  மிகவும் பெருமையான தருணமாகும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களை கடந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், நோய் தொற்றிலிருந்து மீள்தன்மை பெற்று, விளையாட்டு உலகமும் முதுநிலை தடகள இயக்கமும் தொடர்ந்து செயல்படுவதையும் உறுதிசெய்து, மீண்டும் போட்டிகள் திறப்பதற்கும், நம்மை மீட்டெடுப்...
ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!

சினிமா, செய்திகள்
ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில்,தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது… நமது திரைத்துறையை சார்ந்த திருமதி ரோஜா அவர்கள் ஆந்திராவில் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சராகி இருப்பது நமது திரைத்துறைக்கும், தெலுங்கு திரைத்துறைக்கும் பெருமை. இந்த நிலைக்கு வர, அவரின் பெரும் உழைப்பு காரணம் என்பது நீங்கள் அறிந்ததே. அவ...
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

சினிமா, செய்திகள்
சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.   சென்னை மாநகர காவல்துறை, 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்....
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

சினிமா, செய்திகள்
23 ஏப்ரல் 2022 இலண்டன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.முன்னதாக ஐக்கிய England தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக England பாராளுமன்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவிற்கு England பாராளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் அவர்கள் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் 2022 நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் England தமிழ்துறை குழுவினருடன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, நன்கொடைக்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினருக்கு வழங்கினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. ...
நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்…

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்…

சினிமா, செய்திகள்
தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது, இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்....