Sunday, May 31

செய்திகள்

தமிழ்க்காரியின் கவிதைகள் இலையுதிர்காலத்திலும் நறுமணம் வீசும் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

தமிழ்க்காரியின் கவிதைகள் இலையுதிர்காலத்திலும் நறுமணம் வீசும் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

இலக்கியம், செய்திகள்
அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா 23.06.2022 அன்று லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் ஆகிய 2 நூல்களும் அந்தரி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை வழங்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதுரை நகைச்சுவை மன்ற தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர் மைய இயக்குனர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர். விழாவில் கலந்து கொண்ட...
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

சினிமா, செய்திகள்
அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்தார். இன்று காலை 10 மணிக்கு சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். பிரபல உடல்நல நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஆதிஜோதிபாபு மூலமாக பஞ்சபூத மருத்துவமுறையினால் மருந்தில்லா மருத்துவமுறையை அறிமுகப்படுத்தி இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமுகாம் காலை முதல் மாலை ...
சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்

கல்வி, செய்திகள்
சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர் சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும் சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர்.   2017-ம் ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ராம்கி ஐஏஎஸ் அகாடமி, மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அண்ணாநகரில் 13-வது பிரதான சாலையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. நிபுணர்களின் சிறப்பு பயிற்சி மற்றும் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் ஆகியவை இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை இது ந...
எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேச்சு

எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேச்சு

இலக்கியம், செய்திகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2022   கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டி இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது முதல் பரிசு 25000 இரண்டாவது பரிசு 15,000 மூன்றாவது பரிசு 10,000 மேலும் ஐம்பது கவிதைகளுக்கு தல ஆயிரம் ரூபாய் இந்த ஐம்பத்தி மூன்று கவிதைகளும் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் நூலாக வெளியிடப்படும் இந்த ஆண்டு வாடியது கொக்கு என்ற தலைப்பில் நூல் வெளியாகிறது முதல் பரிசு பெற்ற கவிதைகள் ஒரு வரியில் ஒவ்வொரு ஆண்டும் நூலின் தலைப்பாக வைக்கப்படும். இவ்வாண்டு முதல் பரிசை பெறுபவர் மலேசியாவைச் சேர்ந்த நடா. இரண்டாம் பரிசு ஆரணி இரா. தயாளன். மூன்றாம் பரிசு சென்னையைச் சேர்ந்த ஜி. கஜபதி *நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் பரிசுகள் வழங்கி நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிற...
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

கல்வி, செய்திகள்
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் நோக்கம்  பெண்களுடைய மனதின்  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K. குமாரவேல், இந்தியாவின் லைஃப் கோச்சிங் பயிற்சியாளர் புஜா புனீத் மற்றும் Successgyan India வின் நிறுவனர் சுரேந்திரன் ஜெயசேகர் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘ஒரு குழந்தை பிறந்தால், அது அழும் போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அந்த குழந்தை படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  வளர்வதை பார்த்து, ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல் இன்று, ஒரு தந்தையாக, எனது குழந்தை மல்லிகா ஒரு சிறந்த திறமை...
“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்த பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை  வாழ்த்தினார்.

“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்த பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை வாழ்த்தினார்.

சினிமா, செய்திகள்
Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ்  இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும் – நடிகர்சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்!

நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும் – நடிகர்சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்!

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: நடிகர் நாசர் பேசும்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் மிக மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக்குழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழுமூச்சாக செயலில் இறங்குவோம் என்றார். நடிகர் விஷால் பேசும்போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்பட...
அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது ; தொல்.திருமாவளவன்

அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது ; தொல்.திருமாவளவன்

சினிமா, செய்திகள்
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'முத்துநகர் படுகொலை'. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன என்பதை சொல்லும் 60 நிமிடம் கொண்ட ஒரு ஆவணப்படமாக இது உருவாகி உள்ளது. ஏற்கனவே 'மெரினா புரட்சி' என்கிற இதேபோன்ற ஒரு ஆவணப்படத்தில் மெரினா போராட்டத்தின் கடைசி நாளன்று ஏன் வன்முறை களமாக மாறியது, அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ். அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்ப...
பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு, கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி

பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு, கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி

செய்திகள்
Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து 'Keep a Bowl' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்பட்டது. தமிழகத்தின் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு, ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chair Person Savera Group of Hotels, ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சேவ் சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் சாயா தேவி, சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி உரையாற்றி, விருந்தினர்களை கௌரவித்தார். இந்நிகழ்வினில் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கூறியதாவது.., “சமீபத்தில், வானிலை ஆய்வுத் துறையினுடைய அதிகப்படியான தட்பவ...
 “பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022

 “பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022

செய்திகள், விளையாட்டு
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப்  சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். இந்திய முதுநிலை தடகள சம்மேளனம் (MAFI) தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன்,  42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன் நடத்துவது,  மிகவும் பெருமையான தருணமாகும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களை கடந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், நோய் தொற்றிலிருந்து மீள்தன்மை பெற்று, விளையாட்டு உலகமும் முதுநிலை தடகள இயக்கமும் தொடர்ந்து செயல்படுவதையும் உறுதிசெய்து, மீண்டும் போட்டிகள் திறப்பதற்கும், நம்மை மீட்டெடுப்...