உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே உழவன் ஃபவுண்டேஷன்.
உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது.
பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறது.
நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது.மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் ப...
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் பஹத் பாசில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.
அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான 'மக்களை தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும்.
நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவா...
தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த "Madras Pongal"
தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ
அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் யாருக்கு என்ன பயன்..!
ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.ஆனால் மிகவும் எளிய முறையில் (25-02-2022) அன்று நமது "Madras Pongal" நிர்வாக இயக்குநர் திரு.JP அவர்களின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான திரு.S.R.பிரபு அவர்களின் பொற்கரங்களால்திறப்பு விழாகண்ட நம்ம"Madras Pongal" உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,மதியம் சாப்பாடு வகையில் உ...
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 - 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!
சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் "டத்தோ" ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர்.
தலைவர் - ராதாரவி
பொதுச்செயலாளர் -T.N B கதிரவன்
பொருளாளர் - A. சீனிவாசமூர்த்தி
ஆகியோருக்கு இயக்குநர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார்.
துணைத்தலைவர் பதவிகளுக்கு - K மாலா, M.ராஜேந்திரன், M.நாராயணபாபு
இணை செயலாளர் பதவிகளுக்கு- T கோபி, துர்கா சுந்தர்ராஜன், MSK குமரன்
செயற்குழு உறிப்பினர் பதவிகளுக்கு ஷாஜிதா, டி பிரமிளா, யோகேஷ்வரி, பிரதீப், பாரதிராஜா, ஹெச்.ஆர். முரளிதரன்,ஈ.எம்.எஸ்.முரளி, விஜயலக்ஷ்மி, ...
*பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகிறார் தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*
2022 கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்குப் பொன்விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972இல் வெளிவந்தது. இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சினையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 22 இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
‘வைரமுத்து இலக்கியம் 50’ ஐ வாசகர்களோடு கொண்டாட, கவிஞர் வைரமுத்து பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் கையொப்பமிடுகிறார்.
...
மக்களின் தலைவன் நெல்சன் மண்டேலா
வாழும் போதும் சரி, வாழ்க்கைக்கும் பின்னும் சரி, வாழும் மனிதர்கள் சிலபேர்தான் இந்த வையகத்தில் உண்டு என்று சொல்லலாம் அவர்கள் தனக்கென வாழாமல் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள், அப்படிட்ட மாபெரும் தலைவனாய் வாழ்ந்தவர்தான் நெல்சன் மண்டேலா.
மண்டேலா, 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் பகுதி நேரத்தில் சட்டக்கல்வியும் படித்தார்.
தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அவர்களுக்காக குரல் கொடுத்த மண்டேலா 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் நடைபெற்றுவதை அறிந்து கொண்ட மண்டேலா தீவிரமான அரசியலுக்குள் ஈ...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் "கிராமிய இசை கலாநிதி" என்கிற பட்டம் வழங்கப்பட்டதோடு தர்மபுரம் ஆதினத்தினுடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம், சிவாலயங்களுக்கு ஆஸ்த்தானபாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
"ஆன்மிக காவலர் " அகர்சந்த் அவர்கள் "தொழிலாளர் துறை அமைச்சர் " சி. வெ. கணேசன், "இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் "கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர். வேல்முருகன் அவர்களுக்கு "கிராமிய இசை கலாநிதி ...
'புத்தம் புது காலை' என்ற தமிழ் தொடர் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று 'புத்தம் புது காலை விடியாதா' என்ற அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்தத் தொடரை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்துடன் மிகவும் தொடர்புபடுத்தக் கூடியதாக படைப்புகள் இருந்ததால் பார்வையாளர்களுக்கு, கதைகளை காட்சிப்படுத்துவதில் இயக்குநர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. எதிர்மறையான விளைவுகளை மட்டும் சிந்திக்காமல், லாக்டவுனை நேர்மறையான முறையில், அனைத்து கதைகளும் விவரிக்கிறது.
சமீபத்தில் வெளியான தொகுப்புகளில் சிறந்ததாக புத்தம் புது காலை விடியாதா குறிப்பிட்டு பாராட்டப்படுவது தொடர்பாகவும், இயக்குநர்கள் கதைகள் மற்றும் அவற்றை படமாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசுகிறார்கள். தலைசிறந்...