Sunday, May 31

செய்திகள்

ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

சினிமா, செய்திகள்
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப, பிரபல பாடகர் வேல்முருகனின் மூத்த மகள் ரக்க்‌ஷனா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் என்பவர் 40 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்த நிலையில், ரக்க்‌ஷனா இதை முறியடித்துள்ளார். பத்தே வயதான ரக்க்‌ஷனா ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய சர்வதேச கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளளார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ரக்க்‌ஷனா இன்று சந்தித்து கின்னஸ் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறு வயதிலேயே ரக்க்‌ஷனா படைத்துள்ள சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், அவரை வெகுவாகப் பாராட்டினார். திமுக இளைஞர் அணி செய...
ஆஹா தமிழ் OTT தளத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஹா நிறுவனர்கள் அழைப்பு

ஆஹா தமிழ் OTT தளத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஹா நிறுவனர்கள் அழைப்பு

சினிமா, செய்திகள்
தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 % பொழுதுபோக்கை வழங்க தயாராகியுள்ளது. இன்று, ஆஹா நிறுவனர்கள் திரு அல்லு அரவிந்த் மற்றும் ஜூபல்லி ராமு ராவ், தமிழக முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில் விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தனர். நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் கொண்டாட்டத்திற்கான இந்த புதிய துவக்கத்தை கேட்டு மகிழ்ந்து, உற்சாகம் அடைந்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி வருகையால் தமிழ் பொழுதுபோக்கு உலகம் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டது....
அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள் !!

அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள் !!

சினிமா, செய்திகள்
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று "தளபதி" மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி , அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA  அவர்களின் ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும்  இன்று பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது ....
இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

சினிமா, செய்திகள்
உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
உழவன் ஃபவுண்டேஷனின் “உழவர் விருதுகள் – 2022”

உழவன் ஃபவுண்டேஷனின் “உழவர் விருதுகள் – 2022”

சினிமா, செய்திகள்
உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை  உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே  உழவன் ஃபவுண்டேஷன். ​உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது. பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி   வருகிறது. ​நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது.மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் ப...
தமிழ்நாடு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு  நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த  டைரக்டர் மாரிசெல்வராஜ் மற்றும்  நடிகர் பஹத் பாசில்

தமிழ்நாடு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டைரக்டர் மாரிசெல்வராஜ் மற்றும் நடிகர் பஹத் பாசில்

சினிமா, செய்திகள்
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் பஹத் பாசில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம் ; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்

வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம் ; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்

சினிமா, செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான 'மக்களை தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும். நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவா...
இன்று சென்னை அடையார் “மெட்ராஸ் பொங்கல்” உணவகத்தை திரைப்பட தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு தொடங்கி வைத்தார்

இன்று சென்னை அடையார் “மெட்ராஸ் பொங்கல்” உணவகத்தை திரைப்பட தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு தொடங்கி வைத்தார்

சமையல், சினிமா, செய்திகள்
தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த "Madras Pongal" தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் யாருக்கு என்ன பயன்..! ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.ஆனால் மிகவும் எளிய முறையில் (25-02-2022) அன்று நமது "Madras Pongal" நிர்வாக இயக்குநர் திரு.JP அவர்களின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான திரு.S.R.பிரபு அவர்களின் பொற்கரங்களால்திறப்பு விழாகண்ட நம்ம"Madras Pongal" உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,மதியம் சாப்பாடு வகையில் உ...
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 – 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!

சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 – 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!

சினிமா, செய்திகள்
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 - 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா! சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் "டத்தோ" ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர். தலைவர் - ராதாரவி பொதுச்செயலாளர் -T.N B கதிரவன் பொருளாளர் - A. சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு இயக்குநர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார். துணைத்தலைவர் பதவிகளுக்கு - K மாலா, M.ராஜேந்திரன், M.நாராயணபாபு இணை செயலாளர் பதவிகளுக்கு- T கோபி, துர்கா சுந்தர்ராஜன், MSK குமரன் செயற்குழு உறிப்பினர் பதவிகளுக்கு ஷாஜிதா, டி பிரமிளா, யோகேஷ்வரி, பிரதீப், பாரதிராஜா, ஹெச்.ஆர். முரளிதரன்,ஈ.எம்.எஸ்.முரளி, விஜயலக்‌ஷ்மி, ...
கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகை தந்து தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*

கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகை தந்து தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*

சினிமா, செய்திகள்
*பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகிறார் தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்* 2022 கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்குப் பொன்விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972இல் வெளிவந்தது. இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சினையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 22 இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ‘வைரமுத்து இலக்கியம் 50’ ஐ வாசகர்களோடு கொண்டாட, கவிஞர் வைரமுத்து பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் கையொப்பமிடுகிறார். ...