முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து
முதல் மரியாதைக்கு
இறுதி மரியாதை
- கவிப்பேரரசு வைரமுத்து
பிதாமகனே
போய்விட்டாயா?
கிராமத்து ராஜாவே
இறந்துபட்டாயா?
எங்கள்
மண் வாசனையில்
இன்று சாவு மணக்கிறதா?
அடைத்துக் கிடந்த
திரையுலகக் கதவுகளைத்
திறந்தவெளிக்குத்
திறந்துவிட்டவனே!
ஆகாயத்திற்கு அடுத்து
அதிக நட்சத்திரங்களை
அறிமுகம் செய்தவனே!
என்னையும்
சுயமரியாதையோடு
சுடரொளி வீசச்செய்தவனே!
உடன்பிறப்பே
ரத்தத்தின் ரத்தமே என்ற
தலைவர்களின் மொழிக்கு இணையாக
என் இனிய தமிழ்மக்களே
என்ற ரத்தினச் சொற்களுக்கு
முத்திரை சேர்த்தவனே!
நீ மாயக்காரன்
புழுதியைப் பொன்செய்தாய்
சினிமாவின் நிறம்
வெள்ளையென்று இருந்ததை
கருப்பென்று மாற்றிய
கலையாளன் நீ!
இடிந்த சுவர்களும்
உடைந்த மனிதர்களும்
கிழிந்த வாழ்க்கையும்
உன் கலையின் கச்சாப் பொருட்கள்
இந்தக் கரட்டுப்பட்டியைத்
தில்லி நகரத்திற்கு கொண்டுசேர்த்த
அல்லிநக...









