Wednesday, July 15

இலக்கியம்

*ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து*

*ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து*

இலக்கியம், சினிமா
*ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து* *இலக்கியத்துக்கு பல்கலைக்கழகம் வேண்டும் ஏற்புரையில் கோரிக்கை* *இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.* ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்: “தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத்திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வை...
முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து

இலக்கியம், சினிமா
முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை - கவிப்பேரரசு வைரமுத்து   பிதாமகனே போய்விட்டாயா? கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா? அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளைத் திறந்தவெளிக்குத் திறந்துவிட்டவனே! ஆகாயத்திற்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே! என்னையும் சுயமரியாதையோடு சுடரொளி வீசச்செய்தவனே! உடன்பிறப்பே ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ்மக்களே என்ற ரத்தினச் சொற்களுக்கு முத்திரை சேர்த்தவனே! நீ மாயக்காரன் புழுதியைப் பொன்செய்தாய் சினிமாவின் நிறம் வெள்ளையென்று இருந்ததை கருப்பென்று மாற்றிய கலையாளன் நீ! இடிந்த சுவர்களும் உடைந்த மனிதர்களும் கிழிந்த வாழ்க்கையும் உன் கலையின் கச்சாப் பொருட்கள் இந்தக் கரட்டுப்பட்டியைத் தில்லி நகரத்திற்கு கொண்டுசேர்த்த அல்லிநக...
சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

இலக்கியம்
சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு பிரபல இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ என்ற புதிய நூல் இன்று சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் வீட்டில் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி அருகிலும் எளிய முறையில் வெளியிடப்பட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நேரடி அன்பைப் பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக மேலாளர் திரு. ராஜேந்திரன் இந்நூலினை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதியை நூலின் பதிப்பாசிரியர் ‘சந்தியா’ நடராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்திய மத்திய அரசின் சார்பில் இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வாக்குறுதியை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு திரு. எல். முருகன் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நூல...
*பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய “ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டுவிழா*

*பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய “ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டுவிழா*

இலக்கியம், சினிமா
*"ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்*   பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா - திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்கணும் எனத் திட்டமிட்டுப் படிப்பவர். அவர் பள்ளிப்படிப்பு படிக்கலை என அவரளித்த பேட்டிகளில் ஆதங்கப்படுடிருப்பார். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை, எங்க ஊர் தாத...
கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு.லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார்.*

கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு.லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார்.*

இலக்கியம்
*சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 13.04.2026 (மாலை), கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு.லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார்.* வலமிருந்து இடமாக : திரு.ஆர். பத்மநாபன், திரு.பால சீனிவாசன், திரு.பி.வி.வைத்தியலிங்கம், திரு.ரவி தமிழ்வாணன், திரு.செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு.லஷ்மிநாதன், திரு.நிகில் முருகன், திருமதி.வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி.ஸ்ரீதேவி துரை அரசு, திரு.அந்தமான் கிருஷ்ணமூர்த்தி கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில் நிகழ்ச்சியில் கவிஞர் லஷ்மிநாதன் அவர்களின் தொடர் தமிழ்ப் பணிகளையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்தரும் பேராதரவும் ஊக்கமும் கருதி “சுடர்கவி” எனும் விருது வழங்கப்பட்டது. கவிஞர், எழுத...
மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்க அறிவிப்பு.

மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்க அறிவிப்பு.

இலக்கியம்
*MILLION DOLLAR PUBLICATION* *(மில்லியன் டாலர் பதிப்பகம்)* தேதி: 13 ஏப்ரல் 2026 பொருள்: ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்க அறிவிப்பு. வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க "மில்லியன் டாலர் பப்ளிகேஷன்" தனது பயணத்தை இனிதே தொடங்குகிறது. இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே எங்களின் முதன்மை நோக்கம். நிறுவனர் திரு. யுவராஜ் கணேசன் அவர்களின் வழிகாட்டலில், இப்புதிய முன்னெடுப்பைத் திறம்பட வழிநடத்திச் செல்ல பின்வரும் நிர்வாகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது: நிர்வாகக் குழு: பதிப்பாளர்: திரு. யுவராஜ் கணேசன் துறைத் தலைவர்: திரு. புளியந்தோப்பு மோகன் முதன்மைப் பொறுப்பாசிரியர்: திரு. ஷாஜன் கவிதா தலைமை வடிவமைப்பு:...
கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து

இலக்கியம், சினிமா
*கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து* இந்திய இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து அவர் பேசியதாவது: “வைரமுத்து ஞானபீட விருது பெற்றார் என்று சொல்லப்படுவதைக் காட்டிலும், இது தமிழுக்கே ஞானபீடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார். மேலும், “கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது,” என்றும் கூறினார். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், MDMK தலைவர் திரு. வைகோ, மக்களவை உறுப்பினர்கள் மாண்புமிகு ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் த...
கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய “தொட்டனைத்தூறும் மணற்கேணி” கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை மியூசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெற்றது

கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய “தொட்டனைத்தூறும் மணற்கேணி” கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை மியூசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெற்றது

இலக்கியம்
*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய “தொட்டனைத்தூறும் மணற்கேணி” கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை மியூசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெற்றது.* இயக்குநர் லிங்குசாமி நூலை வெளியிட, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குநர் வசந்த பாலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் ஐ.நா. அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. கண்ணன், ஊடகவியலாளர் கார்த்திகேயன், சூழலியல் எழுத்தாளர் கோ. லீலா, பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், மொழிபெயர்ப்பாளர் பிரேமா ரவிச்சந்திரன், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் ஜின்ன அஸ்மி, டிஸ்கவரி பப்ளிகேஷன் மு. வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ...
கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த ‘தயை’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த ‘தயை’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இலக்கியம், சினிமா
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த 'தயை' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புனே நகரத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் புனே பாரதி வித்யாபீட் பல்கலை கழகத்தின் பதிவாளர் ஜெயக்குமார் புத்தகத்தை வெளியிட புனே நகரத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் சத்தியநாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிஞர் #சீனுராமசாமி, புனே நகரத் தமிழ் சங்க உறுப்பினர்கள் ரங்கராஜன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை புனே நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அருள் செல்வன் துணைத் தலைவர் பாஸ்கர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்....
கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார்.

கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார்.

இலக்கியம், சினிமா
49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது 49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்து விஜய் மில்டன் கவிதைகள் நூலை வெளியிட்டது. காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா, இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது. ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார். புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார், " இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,'ரோஜா கனவு', 'வெள்ளைப் புறாக்கதை' போன்ற ...