Saturday, February 15

செய்திகள்

‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

செய்திகள்
தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார் முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன் இந்நிகழ்வின் (MEBC)...
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.

செய்திகள்
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை இன்று( பிப்.8) காலை 7.30 மணிக்கு சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.வெளிநாட்டில்  அதிக சம்பளத்துக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடிகள் தொடர்ந்து நடக்கின்றன. சட்ட விரோதமாக செயல்படும் சில முகவர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறாரகள். இவர்கள் மீது,  மத்திய அரசின் புலம் பெயர்ந்தோர் நல அமைப்பு (PoE) நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மோசடி பேர்வழிகளிடம் மக்கள் ஏமாந்துவிடாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை எலியட்ஸ் கடற்கறையில் விழிப்புணர்வு நடை ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பொது மக்கள் என அனைவரும்  கலந்து கொண்டனர். நிகழ்வில் கிருஷ்ணமூர்த்தி, கமிஷனர், நான்...
தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!

தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!

செய்திகள்
தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மோசடி குறிப்பாக டேட்டா என்ட்ரி, சிஸ்டம் ஆபரேட்டர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதே போன்ற வேலைகளுக்கான மோசடிகள் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த வாக்கத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மோசடிகள் இதற்கு முன்பு பல இந்திய குடிமக்களை இணைய அடிமைத்தனம் மற்றும் சுரண்டலுக்கு இட்டுச் சென்றுள்ளது. PoE அலுவலகம் சட்டவிரோத முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மோசடி திட்டங்களுக்கு பலியாகாமல் தனிநபர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இந்த வாக்கத்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத...
அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

அழகும் ஆரோக்கியமும், செய்திகள்
அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கன்வாடி பணிகள் முக்கியமான முதல் 1000 நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டை பூஜ்ஜியமாக உறுதிப்பட...
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.-அஜித் குமார்

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.-அஜித் குமார்

சினிமா, செய்திகள்
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.  திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது....
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

சினிமா, செய்திகள்
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது....
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்டார்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்டார்

சினிமா, செய்திகள்
ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்டார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்! இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த எங்கள் 'ஹபீபி ' திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில்நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா அவர்களின் குரலிலில் யுகபாரதியின் வரிகளில் சாம் .C.S இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளோம். எங்களுடைய இந்த சீரிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இப்படப் பாடலை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், உடனிருந்த அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் பேரன்பும் நன்றியும்! இப்படிக்கு, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் ஹபீபி படக்குழுவினர்....
அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மலர்  அஞ்சலி

அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மலர் அஞ்சலி

செய்திகள்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.24) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், அறக்கட்டளை உறுப்பினர் குமாரி சச்சு , செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதா சேதுபதி, திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமச்சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.சௌந்தர ராஜா, திரு.தாசரதி, நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்....
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி, மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் ஆகியோர் டாக்டர் கே.டி.கே.மதுவின் சிலை மற்றும் இந்தியாவின் முதல் 360 டிகிரி தோல் மருத்துவ மையத்தை திறந்து வைத்தனர்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி, மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் ஆகியோர் டாக்டர் கே.டி.கே.மதுவின் சிலை மற்றும் இந்தியாவின் முதல் 360 டிகிரி தோல் மருத்துவ மையத்தை திறந்து வைத்தனர்!

அழகும் ஆரோக்கியமும்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி, மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் ஆகியோர் டாக்டர் கே.டி.கே.மதுவின் சிலை மற்றும் இந்தியாவின் முதல் 360 டிகிரி தோல் மருத்துவ மையத்தை திறந்து வைத்தனர்! முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் போன்ற மதிப்பிக்க பிரமுகர்கள் டாகர் கே.டி.கே.மதுவின் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இது இந்தியாவின் முதல் 360 டிகிரி டெர்மட்டாலஜி மையமாகும். டாக்டர். கே.டி.கே. மதுவின் மகள், பிரபல தோல் மற்றும் அழகுக்கலை மருத்துவரான பைரவி செந்திலின் கிளினிக் இது.டாக்டர். கே.டி.கே. மது தனது தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஒரு மரியாதைக்குரிய மருத்துவர் ஆவார். பின்தங்கிய சமூகங்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது முதல் எதிர்கால மருத்துவ நிபுணர்களுக்கு வழிகாட்டுவது வரை,...
ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

அழகும் ஆரோக்கியமும், செய்திகள்
மருத்துவ உலகில் ஒரு மைல்கல்: ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் உள்ள குழு, இந்தியாவில் உள்ள மிகச் சில நுரையீரல் தமனி நோயறிதல் வழக்குகளில் ஒன்றைக் குறிக்கும் வகையில், ஒரு முக்கிய செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 35 வயதான ஒரு பெண் கடுமையான நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலது இதய செயலிழப்புடன் இருந்தார். அவரது நுரையீரல் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல மருந்துகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர்களது சராசரி நுரையீரல் தமனி அழுத்தம் 85mmHg ஆக அதிகமாக இருந்தது. இதனால் அவர்களது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. ஒரு விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர்களுக்கு இடியோபாடிக் நுரையீரல் உயர் இத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையை, ஒரு பயனுள்ள மருத்துவ சிகிச்சை இல்லாத நிலை என்றே கூறலாம். ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவ குழு, மருத்துவ ஆராய்ச்ச...