Sunday, August 30

செய்திகள்

69 ஆண்டுகள் கடந்தும் நினைவில் கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினத்தில் நடிகர் சங்கம் மரியாதை!

69 ஆண்டுகள் கடந்தும் நினைவில் கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினத்தில் நடிகர் சங்கம் மரியாதை!

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 69 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்துக்கு இன்று ( 30.08.2026 ) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு M. நாசர், செயற்குழு உறுப்பினர் திரு. ஹேமச்சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு. சௌந்தரராஜா, திரு.தாசரதி, திரு.K. K. சரவணன், நடிகர் சங்க மேலாளர் திரு. தாமராஜ் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்....
எல்.கே.சுதீஷ் M .P  மகள் ஜானுஸ்ரீ – அகில் ரவிக்குமார் நிச்சயதார்த்தம்! திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல், திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

எல்.கே.சுதீஷ் M .P மகள் ஜானுஸ்ரீ – அகில் ரவிக்குமார் நிச்சயதார்த்தம்! திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல், திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

சினிமா, செய்திகள்
தேமுதிகவின் பொருளாளரும் , ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்நிகழ்வில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் மற்றும் தேமுதிகவின் பொதுச் செயலாளரும், விருத்தாச்சலம் தொகுதியின் எம்எல்ஏ ஆன பிரேமலதா விஜயகாந்த்,விஜயகாந்த் அவர்களின் மூத்த மகனும் தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளருமான விஜய பிரபாகரன், இளைய மகன் நடிகர் சண்முக பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை,மா சுப்பிரமணியம், சைதை துரைசாமி, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ்,சேவியர் பிரிட்டோ, கண்ணன் ரவி, பஞ்சு சுப்பு, நடிகர் சதீஷ்,இயக்குன...
50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம்

50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம்

செய்திகள்
சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக,  (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அதன்படி,...
*காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்*

*காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்*

சினிமா, விளையாட்டு
*காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்* காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் பெருமையுடன் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார். மேலும், “இந்த வெற்றியின் மூலம் நீங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கும் நமது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். குறிப்பாக, நமது தமிழ...
*முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நன்றி…*

*முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நன்றி…*

சினிமா, செய்திகள்
*முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நன்றி...* மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு 2.50 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த செய்தித்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. இது “ஒரு படைப்பாளிக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய கவுரவம்“ - ஆர் .வி.உதயகுமார் ....
*“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு..

*“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு..

சினிமா, செய்திகள்
*“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு...மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!* அரசுப் பள்ளி மாணவர்களை ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக சபாநாயகர் தகவல்! புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள NFDC-யில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தத் திரையிடலில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மண...
*ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்* ‌

*ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்* ‌

செய்திகள்
*ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்* ‌ நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, இதற்கு சாட்சியாக அமைந்தது. குறிப்பாக, 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், மியூசிக் அகாடமியில் புதிய வரலாற்றை மாயா எஸ். கிருஷ்ணன் உருவாக்கியுள்ளார். நிகழ்ச்சி நாளன்று அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பியது. மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிர...
சென்னையில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மாபெரும் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு  நடைபெற்றது!

சென்னையில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மாபெரும் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு நடைபெற்றது!

செய்திகள்
*முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னை மாநகரில் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை நடத்தியது!* *சென்னை, ஆகஸ்ட் 1:* 2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகள...
எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்..

எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்..

செய்திகள்
எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்.. ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி மற்றொன்று தேசிய நெடுஞ்சாலைகளில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு மத்திய அமைச்சர்கள் பின்வருமாறு பதிலை கூறினார்கள்.. மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ், மிஷன் வாத்சல்யா திட்டத்தின் செயல்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் மீளிணைப்பு நடைமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த...
சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி – அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார்

சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி – அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார்

விளையாட்டு
சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி - அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் சார்பில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் மையத்தில் முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அபிஷேக் டி மற்றும் ஆனந்த் ராகவ் மோதினர். மூன்று ஆட்டங்களில் சிறந்த இரண்டு ஆட்டங்கள் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அபிஷேக் டி முதல் ஆட்டத்தை 191-185 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தை 189-135 என்ற கணக்கிலும் வென்று 2-0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அரையிறுதிச் சுற்றில் அபிஷேக் டி, விஷ்ணு எம்-மை 214-166, 196-194 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ...