சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி – அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார்
சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி - அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார்
தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் சார்பில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் மையத்தில் முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி நடத்தப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அபிஷேக் டி மற்றும் ஆனந்த் ராகவ் மோதினர்.
மூன்று ஆட்டங்களில் சிறந்த இரண்டு ஆட்டங்கள் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அபிஷேக் டி முதல் ஆட்டத்தை 191-185 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தை 189-135 என்ற கணக்கிலும் வென்று 2-0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அரையிறுதிச் சுற்றில் அபிஷேக் டி, விஷ்ணு எம்-மை 214-166, 196-194 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ...









