Sunday, April 12

செய்திகள்

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026

விளையாட்டு
கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA) சார்பில், கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி 26ம் தேதி முதல் 29ம் தேதி மார்ச் 2026 வரை, சென்னை வினாயகா மிஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமை, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு நெறிமுறைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். கேலோ இந்தியா அஸ்மிதா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டி, மகளிர் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முக்கிய மேடையாக அமைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு எடைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வீராங்கனைகள் உயர்ந்த தரமான திறமைகளை வெ...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் நேரடி போட்டிஇல்லை. தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையின்றி அழுத்தமான ஆதரவு.

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் நேரடி போட்டிஇல்லை. தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையின்றி அழுத்தமான ஆதரவு.

செய்திகள்
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது - கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்களின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருமித்த முடிவு. நாங்கள் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை எனவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், மதவாத சூழ்ச்சியில் இருந்து விழிப்புணர்வு பெறவும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன். என்னைப் புரிந்துகொண்டு சுயநலமின்றி என்னோடு பயணிக்கும் எனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகள...
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

சினிமா, விளையாட்டு
பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர். சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் 'ரோர் 26' நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார். ஏற...
‘ராஜாதிராஜ் யாத்ரா’, பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது

‘ராஜாதிராஜ் யாத்ரா’, பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது

செய்திகள்
சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெறுகிறது 'ராஜாதிராஜ் யாத்ரா' எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது. திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள‌ 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குக...
சென்னையில் ஜாய் ஆலுக்காஸ் தொடங்கி 18 வருடங்கள் முடிவடைந்த ஆண்டு மற்றும் ஜாய் ஆலுக்காஸ் அறக்கட்டளை நடத்திய  நிகழ்வில் 50 குடும்பங்களுக்கு வீடுகளை ஜாய் ஆலுக்காஸ் சேர்மன் வழங்கினார்

சென்னையில் ஜாய் ஆலுக்காஸ் தொடங்கி 18 வருடங்கள் முடிவடைந்த ஆண்டு மற்றும் ஜாய் ஆலுக்காஸ் அறக்கட்டளை நடத்திய நிகழ்வில் 50 குடும்பங்களுக்கு வீடுகளை ஜாய் ஆலுக்காஸ் சேர்மன் வழங்கினார்

செய்திகள்
*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண்...
தொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்!

தொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்!

செய்திகள்
தொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்! சென்னை, மார்ச் 13, 2026: ஜேப்பியார் பல்கலைக்கழகம் சார்பில் ’தொழில்துறைக்குள் வளாகமா அல்லது வளாகத்திற்குள் தொழில்துறையா?’ என்ற தலைப்பில் ’Jeppiaar Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னணி கல்வியாளர்கள், தொழில்துறையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், மனிதவள நிபுணர்கள் மற்றும் புதுமையாளர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். கல்வி அறிவையும், தொழில்துறை அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் கற்றல் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம். இதுமட்டுமல்லாது தொழ...
*நடிகர், ரேசர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார்*!

*நடிகர், ரேசர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார்*!

சினிமா, விளையாட்டு
*நடிகர், ரேசர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார்*! சர்வதேச ரேசரும் நடிகருமான அஜித் குமார் தற்போது மகிந்திராவின் ஃபார்முலா ஈ ரேஸ் கார் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இந்த பிராண்டின் ஃபார்முலா ஈ போட்டியாளரால் ஈர்க்கப்பட்ட சிறப்பு பதிப்பான எலக்ட்ரிக் ஆரிஜின் ஈஎஸ்யுவி காரை நடிகர் அஜித் குமார் தனக்கு சொந்தமாக்கியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் உள்ள ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான சோதனை ஓட்டத்தில், அஜித் குமார் ஜென் 2 ஸ்பெக் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ரேஸ் காரை ஓட்டினார். அப்போது சீசன் 7 உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அவர் பெற்ற அனுபவம், அவரது தொழில்முறை ரேசிங் பயணத்துக்கும் பிஈ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை தேர்வு செய்ததற்குமான தொழில்நுட்ப இணைப்பை காட்டுகிறது. இந்த தேர்வு மூலம் இந்தியாவின் இரண்டு ரேசி...
‘நலன் காக்கும் அணி’ சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்துகளை  தெரிவித்தார்கள்

‘நலன் காக்கும் அணி’ சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்

செய்திகள்
‘நலன் காக்கும் அணி’ சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி s தாணு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான T.ராஜேந்தர், இயக்குனர் SP முத்துராமன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாலா, தயாரிப்பாளர் L.K.சுதிஷ், தயாரிப்பாளர் சத்ய ஜோதி TG தியாகராஜன், தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குனருமான தயாகராஜன்,தயாரிப்பாளர் AM ரத்னம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமி, இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் SR பிரபு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சரண், இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் T.சிவா, Fefsi மற்றும் தமிழ்நாடு திரைப...
ஐயா நல்லகண்ணு  அவர்களுக்கு / நடிகர் சிவகுமார் அவர்களின் நினைவு அஞ்சலி

ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு / நடிகர் சிவகுமார் அவர்களின் நினைவு அஞ்சலி

செய்திகள்
*நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி* 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் ஐயா ஆர். நல்லகண்ணு. பள்ளி மாணவனாக விளங்கியபோதே ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தேசியத் தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் உரைகளைக் கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தானும் ஒரு உணர்வாளராக உருவெடுத்தார். பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த கம்யூனிஸ நூல்களைப் படித்த அச்சிந்தனைக்கு ஆட்பட்டார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்து முடித்து பட்ட வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பொதுவாழ்வில் மூழ்கி படிப்பைப் பாதியில் விட்டு விட்டார். 1945 இல் மதுரையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஜீவா ஆற்றிய உரை கேட்டு ஊக்கம் பெற்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு ஐயா மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு ஐயா மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்!

செய்திகள்
நல்லகண்ணு ஐயா மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்! அனுபவம் மிக்க, பண்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. போராளியாய் வாழ்ந்த, பொதுவுடமையின் பொக்கிஷம், எளிமையின் சின்னம், தோழமையின் தூண் சாய்ந்து விட்டது என்ற செய்தி, துயரத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றேன். இப்படிக்கு, திரைப்பட இயக்குனர், இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்...