Tuesday, May 13

செய்திகள்

VV ENTERTAINMENTS சார்பில் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஆடை அலங்கார போட்டி

VV ENTERTAINMENTS சார்பில் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஆடை அலங்கார போட்டி

செய்திகள்
சமூக ஆர்வலரும், நடிகருமான விஜய்விஷ்வா அவர்களின் விவி என்டர்டைன்மெண்ட் மற்றும் மாமதுரையர்கள் எம் ஆர் பிரமோட்டர்ஸ் & STAR trust T குருசாமி உடன் இணைந்து நம்ம ஊரு வைப்ஸ் சிறப்பு சித்திரை ஆடை அலங்கார்ர திருவிழாவை நடத்தியது. மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பணசாமி, முருகன் போன்ற சாமி வேடமணிந்து கலந்து கொண்டது காண்போரை நெகிழச் செய்தது. இந்த கோலாகல விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனர் திரு.ஜே.கே.முத்து,, தபோவன் திரு.தீனதயாளன், சமுத்ரா செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் முத்தாய்ப்பாக குழந்தைகளின் கண்கவர் பாட்டு போட்டி மற்றும் நடனம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாமதுரையர் அமைப்பின் அகில.உலக தலைவர் க.திருமுருகன் அவர்களுக்கு வாழ...
ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ் 

ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ் 

சினிமா, செய்திகள்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் - சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர்.இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின்நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும்  பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். “ இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சி...
 தென்னிந்திய அளவில் நடைபெற்ற முதல் டென்பின் பவுலிங் போட்டி! – கிஷான்.ஆர் மற்றும் ஹிட்டாசா சிசோடியா பட்டங்கள் வென்றனர்

 தென்னிந்திய அளவில் நடைபெற்ற முதல் டென்பின் பவுலிங் போட்டி! – கிஷான்.ஆர் மற்றும் ஹிட்டாசா சிசோடியா பட்டங்கள் வென்றனர்

விளையாட்டு
பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி! முதலாவது தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார். இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார். மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார். ...
லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 போட்டியில் வெற்றி பெற்றது

லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 போட்டியில் வெற்றி பெற்றது

விளையாட்டு
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 பட்டம் பெறும் இறுதிப் போட்டியில், லோயோலா கல்லூரி கால்பந்து அணி STEDS HCLF SFC அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக டாக்டர் ஆர். ஆனந்த குமார், IAS, மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியின் சிறப்பம்சங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 18 முன்னணி அணிகள் மூன்று மாதங்கள் நீண்ட இந்த போட்டியில் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முன்னணி நான்கு அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் லோயோலா கல்லூரி மற்றும் STEDS HCLF SFC அணிகள் தீவிரமாக மோதின. விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள் 1. மிஸ்டர் நவநீதன், Managing Director, Motodoctor App 2. மிஸ்டர் சாண்டி, இந்தியாவின் புகழ்...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

செய்திகள்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும் 'துகில்' எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். 'துகில்'- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்கள...
”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

செய்திகள்
நடிகர் பிளாக் பாண்டி தலைமையில் நடைபெற்ற விழா சமூகத்தில் மாற்றம் உருவாக்கும் நிகழ்வாக மாறியது சென்னை, “இயன்றதை செய்வோம்! இணைந்தே செய்வோம்!” என்ற தத்துவத்தில் செயல்பட்டு வரும் “உதவும் மனிதம்” அறக்கட்டளை, அதன் சிறப்புவிழாவை நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிளாக் பாண்டி தலைமையில் சென்னையில் வெகுவிமர்சையாக நடத்தியது. இந்த விழாவில் மொத்தம் 300 பயனாளிகள் பன்முக நலத்திட்ட உதவிகளை பெற்றனர். நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. தியாகி ஐயா ஆவார். வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகள்: 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதும் உபகரணங்கள் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் உணவுப்பொருட்கள் 30 பார்வையற்ற நபர்களுக்கு வியாபார உபகரணங்கள் (ரூ.3000 மதிப்பு) 20 பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு பவர் கண்ணாடிகள் ...
.உறுப்பினர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்திய தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம்

.உறுப்பினர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்திய தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம்

அழகும் ஆரோக்கியமும்
.அழகுக்கலை கலைஞர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் மேம்பாடு, மேலும் திறமையானவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல நல்ல நோக்கங்களுக்காக தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம் (TBIEA) கடந்த மார்ச் 19ஆம் தேதி சென்னையில் துவங்கப்பட்டது. துவக்க நாளிலேயே இந்த சங்கத்தில் சுமார் 100 உறுப்பினர்கள் வரை இணைந்தனர். தொடர்ந்து பலரும் ஆர்வமுடன் இதில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக கடந்த வாரம் சென்னை ராயல் பிளாசா டவரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெடரல் வங்கி கிளையின் மேலாளர் P.ஆனந்தி, சான்றிதழ் பெற்ற தொழில் முறை ஒப்பனை கலைஞரும் பயிற்சியாளருமான செல்டன் ஆர்டிஸ்ட்ரி மற்றும் பூக்கள் உருவாக்குவதில் பல்வேறு விதமான சாதனைகளுக்கு சொந்தக்காரரும் வழிகாட்டியுமான C.பிரபாவதி ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் அரசு சான்...
சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.

சினிமா, செய்திகள்
இராம வீரப்பனின் " கிங் மேக்கர் " ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த  ஆவணப்படம் மிக  பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது . தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக  வரலாற்றில்  முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட  திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா த...
முன்னணி நடிகர் தனுஷ் “DCutz By Dev” சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!

முன்னணி நடிகர் தனுஷ் “DCutz By Dev” சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!

அழகும் ஆரோக்கியமும், செய்திகள்
DCutz By Dev" சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ் முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , "DCutz By Dev" எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் "DCutz By Dev" மூலம், பரந்த அளவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார். DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பண...
ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

செய்திகள்
ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான கராத்தே வீரரும் நடிகருமான ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: கராத்தே வீரரும், வில்வித்தை வீரரும், இளைஞர்களுக்கு பல கலைகளை கற்றுத் தந்த கலைஞரும், திரையுலகில் நடிகராகவும் வலம் வந்தவருமான ஷிகான் ஹுசைனி அவர்களுடைய மறைவு மனதிற்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய உடல் உறுப்புகளை அவர் தானம் செய்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது, கண்களில் கண்ணீரை பெருக்குகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், கலையுலகத்தை சேர்ந்த ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையு...