27 ஆண்டுகள் சிறைவாசத்திற்க்கு பின் மண்டேலா விடுதலை பெற்ற நாள் பிப்ரவரி 11
மக்களின் தலைவன் நெல்சன் மண்டேலா
வாழும் போதும் சரி, வாழ்க்கைக்கும் பின்னும் சரி, வாழும் மனிதர்கள் சிலபேர்தான் இந்த வையகத்தில் உண்டு என்று சொல்லலாம் அவர்கள் தனக்கென வாழாமல் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள், அப்படிட்ட மாபெரும் தலைவனாய் வாழ்ந்தவர்தான் நெல்சன் மண்டேலா.
மண்டேலா, 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் பகுதி நேரத்தில் சட்டக்கல்வியும் படித்தார்.
தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அவர்களுக்காக குரல் கொடுத்த மண்டேலா 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் நடைபெற்றுவதை அறிந்து கொண்ட மண்டேலா தீவிரமான அரசியலுக்குள் ஈ...





