ரேகை- இணைய தொடர் விமர்சனம்
மனிதர்களில் சில பேர் என்னதான் ஒரே மாதிரி தோற்றத்துல காணப்பட்டாலும் ஒவ்வொருத்தருக்கும் அவங்களுடைய கைரேகை அப்படிங்கறது மாறுபட்டு தான் இருக்கும் அப்படிங்கறத யாருமே மறுக்க முடியாது .இப்ப ரேகை இணையத்தொடரோட கதைக்கு வருவோம் .மாணவர் விடுதியில் ஒரு இளைஞன் மர்மமான முறையில இறந்து கிடக்கிறான் . அந்தப் பகுதியின் அருகில் இருக்கிற குற்றாலம் காவல் நிலையத்தில் பாலஹாசன் இன்ஸ்பெக்டராக இருக்காரு , அவரே இந்த மரணத்தோட காரணம் என்ன ?அப்படிங்கறதை பற்றி புலன் விசாரணையில் இறங்குறாரு, அதே சமயத்துல வெவ்வேறு ஏரியாவுல மேலும் நாலு இளைஞர்கள் மரணமடைகிறதும் ,அவங்க எல்லாருடைய கைரேகையும் ஒரே மாதிரி இருக்கிற தகவலும் கிடைக்கப்பெறுகிறது ,இந்த கொலைகளை செய்தது யார் ? இந்த கைரேகையோட மர்மங்கள் என்ன ? இது எல்லாம் விரிவா எடுத்துச் சொல்வது தான் ரேகை சீரீஸ் ஓட எபிசோடுகள்.
தன்னுடைய கிரைம் கதைகள் மூலமாக எண்ணற்ற வாசகர்களை கொண்டிர...









