வாரண்ட் – இணைய தொடர் விமர்சனம்
அடையாளம் என்கிறது அடுத்தவங்க கொடுக்கறது இல்ல, நாமதான் நம்ப அடையாளத்தை உருவாக்கிக்க வேண்டும் என்னும் கருத்தை, ஒரு சாதாரண போலீஸ் அவமானப்பட்ட இடத்திலேயே அடையாளத்தை ஏற்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சியும் ,போராட்டமும் நிறைந்ததுதான் இந்த வாரண்ட் நெடுந்தொடரின் கதையின் கரு.
தன் மகன் பிரசாந்த் பாண்டியராஜனை அரசு வேலையில் அமர்த்திப் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்படும் தந்தை பாலாஜி சக்திவேல் அதன் பொருட்டு, தன் மகனை எல்லா அரசு போட்டி தேர்வுகளையும் எழுத வைக்கிறார், ஆனால், அந்த முயற்சிகள் எல்லாவற்றிலும் பிரசாந்த் பாண்டியராஜுக்கு வெற்றி கிட்டவில்லை , அதன் பிறகு போலீஸ் கமிஷனரிடம் ஓட்டுநராக உள்ள உறவினர் ஒருவரது மூலமாக போலீஸ் வேலையில் சேருகிறார் பிரசாந்த் பாண்டியராஜ் .ஆனால் அங்கு சகத்துறையாளர்களின் கேலிக்கும், எள்ளிநகையாடலுக்கும் ஆட்படும் பிரசாந்த் பாண்டியராஜ் .ஒரு சூழலில் இந்த வேலையே நமக்கு வேண்ட...









