குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்
குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை
சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமான குறுங்காலீஸ்வரர் கோவில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது
இந்த திருக்கோவிலின் வரலாற்றுக்கதைகள்
முன்னோரு காலத்தில் சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதியை தேரில் பவனி சென்றவாறு கடந்து போனபோது அந்த தேரின் சக்கரம் லிங்கத்தின் மீது ஏறி, குருதி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்ற மன்னன் அங்கு பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு,அதனை வணங்கி அங்கு கோவிலும் எழுப்பினான். மன்னரின் தேர்ச்சக்கரம் ஏறியதால் அந்த லிங்கத்தின் திருமேனி குறைந்து குறுகிய வடிவில் காணப்பட்டது ஆகவே இங்கு சிவன் குறுகியவடிவில் காட்சி தருவதால் அவருக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற திருப்பெயர் உண்டானது. “
இராமாயணகாலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் லவன் - குசன் என்ற தன் குழந்தைகளுடன் சீதை இந்த பகுத...









