கண் கவரும் அணை கரிகாலன் கட்டிய கல்லணை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதையும், மக்கள் இன்னல்படுவதையும் கண்ட மாமன்னன் கரிகால சோழன் அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்து 1-ஆம் நூற்றாண்டில் அந்த ஆற்றின் மீது கட்டிய கல்லணையே இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க கல்லணை திருச்சிக்கு மிக அருகிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலும் உள்ளது.
கல்லணை, தற்போதுள்ள அணைகளில் மிக பழமையானது மற்றும் , தற்போதும் பயன்பாட்டில் உள்ள அணை என்ற தனி சிறப்புகளை கொண்டுள்ளது இந்தஅணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
பாசன காலங்களில் காவிரி, ...






