Monday, August 31

செய்திகள்

திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

இலக்கியம், செய்திகள்
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு,இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார், துணைவேந்தர் திருவாசகம், V.P. குமார், பேராசிரியர் ஆதிரா முல்லை உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்
 #2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான #பொங்கல்

 #2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான #பொங்கல்

சமையல், செய்திகள்
SAI INSTITUTIONS பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித்துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படுத்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா,நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவ படத்தை வெண்ணை சிற்பமாக மிகவும் தத்துருவமாக செதுக்கியவர், மேலும் அவர் ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்,அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆரோக்கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவதும் இதுவே முதல் முறையாகும். இன்று காலை, சாய் நிறுவனத்தின் முன் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில், மண் பானை விறகுகளுடன் கூடிய உலக சாதனை முயற்சியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆரோக்கியமான 100 வகை பொங்கல்திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை அடையாறு துணை கமிஷனர்...
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார்

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார்

செய்திகள்
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார் ஜனவரி 13 வெள்ளி முதல் ஜனவரி 22 ஞாயிறு வரை, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அப்பாஸ் கல்ச்சுரல் சென்னை நகரில், நன்கு அறியப்பட்ட நுண்கலைகளை ஊக்குவிக்கும் ஓரு நிறுவனம். கடந்த 41 ஆண்டுகளாக, 2500-க்கும் மேற்பட்ட நாடகம், நாட்டியம், கர்நாடக மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்து, பல்வேறு துறைகளின் முன்னணி கலைஞர்களோடும் கைகோர்த்து, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். ஆண்டுக்கொரு முறை நிகழும் அப்பாஸ் கலைவிழா, கடந்த 30 ஆண்டுகளாக சிறப்புற நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நடப்புது போல், இந்த ஆண்டும் ஜனவரி 13 முதல் 22 வரை, தொடர்ந்த...
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

இலக்கியம், செய்திகள்
தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட எஸ் பி சக்ரபோர்த்தி என்கிற சோமன்.சக்ரபோர்த்தியின் பெற்றோர் மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறினர். சென்னையில் பிறந்து, அயன்புரத்தில் வளர்ந்த இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை குறித்து பேசிய சக்ரபோர்த்தி, "சிறு வயது முதலே தமிழ் மொழி மீது எனக்கு தீவிர பற்று ஏற்பட்டது. பள்ளி பருவத்தில் திருக்குறளில் உள்ள மனப்பாடச் செய்யுள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின்னர் திருக்குறளின் மொழிப் பெயர்ப்புகளைப் படிக்கும்போது, திருக்குறளை மிகவும் எளிமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிலர் இன்னுமொரு மொழிபெயர்ப்பு எதற்கு என்றும் ஐயம் எழுப்பினர். ஆனால், தமிழ் மொழிப் பற்...
சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு 2022

சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு 2022

செய்திகள்
சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் சார்பில் சில்லறை வர்த்தக சிறப்பு மையத்தினர்(Centre of Excellence - Retail) 22.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்டம் 2022 என்ற நிகழ்ச்சியைக் கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, நடிகர் மற்றும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் திரு.திருச்சி சரவணக்குமார் அவர்களும் எல்.கே.எஸ் ஜூவல்லரியின் நிர்வாகப்பங்குதாரர் திரு.சர்ஃபராஸ் சையத் அகமது அவர்களும் விருந்தினர்களாகத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்நிகழ்ச்சியில், ஷசுன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராணி மனோகரன் அவர்கள் திரைக்கதையில், மாணவிகள் நடித்து, காட்சி ஊடகவியல் துறையினரால் எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று ஒள...
“XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

“XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

செய்திகள், விளையாட்டு
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் திரு கலைச்செல்வன், திரு சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது இந்த போட்டியின் முதல் நாளில் (டிசம்பர் 30, 2022) திரைப்பட இயக்குனர் திருமதி கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா, தொழிலதிபர் திரு சூர்யபிரகாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பி...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

சினிமா, செய்திகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவினில் வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வருடங்கள் இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் செய்தித்துறை அமைச்சர் திரு....
மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

செய்திகள்
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா சென்னையில் ஞாயிறு மாலை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பாக செய்திருந்தார். சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் இந்த நூற்றாண்டின் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை என்று நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு கூறினார். "கண்டசாலா அவரது இசையால் இன்னும் வாழ்கிறார். இந்திய இளைஞர்கள் அவரது வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்த விழாவில் அவரது பாடல்களைக் கேட்டதும் என் குழந்தைப் பருவ ஞாபகங்கள் வந்து விட்டன. எந்த சந்தேகமும் வேண்டாம் இந்த நூற்றாண்டின் இசை மேதை கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். பல தலைமுறையினர் அவரின...
30 குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் படிப்பு செலவை ஏற்று 30-வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்

30 குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் படிப்பு செலவை ஏற்று 30-வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்

செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, 30 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் கல்வி உதவிகளை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த 30 பயனாளிகளில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகள் ஆகியோர் உள்ளனர். கிளாசிக் கிச்சன் நிறுவனர் மற்றும் தலைவரான சுரேஷ் பாபு பாபுஜி கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணைந்து பயணித்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றா...
மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

செய்திகள்
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா மேற்கொண்டுள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் டிசம்பர் 4 அன்று சென்னை மியூசிக் அகாடெமியில் இந்நிகழ்வை துவக்கி வைக்கின்றனர். இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும். தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார். அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்ப...