Thursday, May 28

செய்திகள்

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.

சினிமா, செய்திகள்
நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜுன் அவருக்கே சாரும். அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிவிஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்....
‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

செய்திகள்
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சி...
ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

சினிமா, செய்திகள்
ஒரு படத்தை பார்க்கத் தூண்டுவது அதன் தலைப்பு தான் என்பதை எனது முதல் படத்தில் உணர்ந்தேன் – இயக்குனர் போஸ் வெங்கட் இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி.. அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.கன்னிமாடத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.பருத்தி வீரன் படத்தில் ஒரு கலக்கு கலக்கி தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த அன்பு சகோதரர் சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார். சிறுவயதாக இருந்தாலும் இந்த ...
நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய பொருளாளர் நடிகர் கார்த்தி.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய பொருளாளர் நடிகர் கார்த்தி.

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாளான இன்று , நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவரிடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள். நடிகர் விஜயகாந்தைப் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது: விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்....
பிரபலங்கள் பாராட்ட, வாடிக்கையாளர்கள் வயிறும் மனதும் நிறைய, அண்ணா நகர் விமலம் மெஸ்ஸில் களைகட்டிய உணவு திருவிழா

பிரபலங்கள் பாராட்ட, வாடிக்கையாளர்கள் வயிறும் மனதும் நிறைய, அண்ணா நகர் விமலம் மெஸ்ஸில் களைகட்டிய உணவு திருவிழா

சமையல், செய்திகள்
அண்ணா நகர் விமலம் மெஸ் சார்பாக மாபெரும் உணவு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவின் சிறப்பம்சமாக மங்களூரியன் உணவு வகைகள் அறுசுவையுடன் பரிமாறப்பட்டன . ஜப்பான் கன்சுல் ஜெனரல் (தூதர்) டாகா மசாயுகி, டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ சி சண்முகம் மற்றும் தணிக்கையாளர் ராமலிங்கம், உள்ளிட்டோர் இந்த உணவு திருவிழாவில் கலந்துகொண்டு உணவின் ருசியையும், உபசரிப்பையும், ஏற்பாடுகளையும் வெகுவாக பாராட்டினார்கள். கலை உலக பிரபலங்கள் இயக்குநர் சுந்தர் சி, இயக்குநர் ராஜீவ் மேனன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் மோகன், டாக்டர் ஹரிஹரன், அபிஷேக், ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, பாடகி சௌந்தர்யா, பாடகர் க்ரிஷ், பார்வதி நாயர், விஜய் ஆதிராஜ் மற்றும் ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை ...
சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

செய்திகள், விளையாட்டு
சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க 75 வது இந்திய சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் “இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவசம் அணிந்து” ஆசியா/இந்திய அளவிலான சாதனை நிகழ்ச்சியை (Asia and India Book of Records) 12.08.2022 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தியது. இந்நிகழ்வில் மாணவர்களை ஈடுபடுத்தியதன் வாயிலாக இக்கல்வி நிறுவனம் சாதனை மிக்க இளைய தலைமுறையினரை உருவாக்கியுள்ளது. இச்சாதனை நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 79 பள்ளிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 75 மாணவர்கள், எமது ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் 3000 மாணவியருடன் இணைந்து, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவச...
9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் –  13 ஆகஸ்ட் 2022

9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் –  13 ஆகஸ்ட் 2022

விளையாட்டு
9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் -  13 ஆகஸ்ட் 2022 அபிஷேக் சாம்பியன் பட்டம் வென்றார் ஆகஸ்ட் 13, 2022 சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுலில் முடிவடைந்த நிப்பான் பெயிண்ட் 9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அபிஷேக் துதாசியா அக்ரமுல்லா பெய்க்கை (353-351) தோற்கடித்தார். இரண்டு கேம்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், அக்ரம் முதல் ஆட்டத்தை அபிஷேக்கை (207-191) 16 எனும் எண்ணிக்கையில் முடித்தார். ஆட்டம் 2 இல், கடைசி சட்டத்தில் இரட்டை எண் அடிக்க வேண்டிய அக்ரம் அதை ஒரு விஸ்கர் மூலம் தவறவிட்டார் மற்றும் கேம் 2 (146-160) என்ற எண்ணிக்கையில் தவறவிட்டார் மற்றும் இறுதியில் இரண்டு கேம் பின்ஃபாலில் குறுகிய இரண்டு பின்களில் ஆட்டத்தை இழந்தார். முந்தைய நாள், இரண்டு கேம்களின் ஒட்டுமொத்த பி...
டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

இலக்கியம், செய்திகள்
சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில், பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12 அன்று திறந்து வைத்தார்.இவ்விழாவிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்தது பெரும் ஊக்கமாக அமைந்தது. மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பு நல்லகண்ணு அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தான் தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்ற தகவலை அவரிடம் தெரிவித்தார். தமது பேச்சில் இதை பற்றி குறிப்பிட்ட நல்லகண்ணு, சுதந்திர போராட்ட வீரரும் மாபெரும் பத்திரிகையாளருமான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் வ...
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில்  இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா

சினிமா, செய்திகள்
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில் மாமனிதன் ஆஹா ஓடிடியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை தொடர்ந்து பெற்று வரும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழாவும், சின்னத்திரை கலைஞர்கள் நிகழ்ச்சியும் ஒருங்கிணைப்பாளர் ஜெனனி பாலு முன்னிலையில் மாவட்ட அதிகாரிகள் தலைமையில் நடந்தது....
வினியோகஸ்தர்கள் சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்!

வினியோகஸ்தர்கள் சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்!

சினிமா, செய்திகள்
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், அரிமா சங்கம் கோல்டு, அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நடைபெற்ற மருத்துவ முகாமை திரைப்பட நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கிவைத்து பேசினார். இந்த விழாவில் அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான பூச்சி முருகன் , வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், கவுன்சிலர்கள் சிற்றரசு, மதன்மோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சங்கத்தின் தலைவர் கே.ரா...