Sunday, May 31

செய்திகள்

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

சினிமா, செய்திகள்
சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் - நடிகர் கார்த்தி சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி. இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவனை பின்பற்றுபவர்களுக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன...
44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

விளையாட்டு
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான்! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா ”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறன் வேண்டும், அதிலும் விளையாட்டு திறன் என்பது மிக மிக முக்கியம், என்பதை தற்போதைய காலக்கட்டம் நிரூபித்து வருகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், வெற்றி, தோல்விகளை தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் ...
ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது.- ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகர் கார்த்தி  பாராட்டு

ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது.- ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகர் கார்த்தி பாராட்டு

இலக்கியம், செய்திகள்
”நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம், ரம்யாவுடைய 'Stop Weighting' புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் வெளியிட்டார்கள் பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில் தனது பாராட்டுக்குரிய பயணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். முதன்முறையாக, அவர் தனது முதல் புத்தகமான 'ஸ்டாப் வெயிட்டிங்' மூலம் ஒரு எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என நேர்மறையான வகையில் வாசகர்கள்  எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்துள்ளது. சரியான டயட் உணவு மு...
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா

ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா

கல்வி, செய்திகள்
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவை அவர்களின் வளாகத்தில் கொண்டாடியது. காலை 9-10 மணி முதல் ரங்கோலி போட்டியுடன் விழா தொடங்கியது, இதில் 15 துறைகள் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் பிஎஸ்சி சிஎஸ், ஷிப்ட் 1 மற்றும் பிகாம் சிஎஸ் ஷிப்ட் 2. பொங்கல் தயாரிப்பு போட்டி காலை 10-11:30 மணி, பி.காம் சிஎஸ், ஷிப்ட் 1 மற்றும் பிகாம் சிஏ, ஷிப்ட் 2ல் வெற்றி பெற்றனர். காலை 11:30 மணிக்கு பாரம்பரிய நடன வடிவங்கள், ஸ்டால்கள் மற்றும் விளையாட்டுகளுடன் நிகழ்வு தொடங்கியது. கும்மி, தப்பு, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற நடன வடிவங்கள் அரங்கேற்றப்பட்டன. ஸ்டால்களில் உண்ணக்கூடிய உணவுகள், பாரம்பரிய உணவுகள், நாஸ்டால்ஜிக் சாக்லேட்டுகள், அவர்களின் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் வகையில், பாத்திரங்கள், பாரம்பரி...
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில்  அவரது  திருவுருவ படத்திற்கு மரியாதை

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு, இன்று 17.1.2023 காலை 10.30 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகர் ராஜேஷ், தளபதி தினேஷ் மற்றும் M.A. பிரகாஷ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்....
திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

இலக்கியம், செய்திகள்
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு,இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார், துணைவேந்தர் திருவாசகம், V.P. குமார், பேராசிரியர் ஆதிரா முல்லை உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்
 #2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான #பொங்கல்

 #2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான #பொங்கல்

சமையல், செய்திகள்
SAI INSTITUTIONS பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித்துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படுத்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா,நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவ படத்தை வெண்ணை சிற்பமாக மிகவும் தத்துருவமாக செதுக்கியவர், மேலும் அவர் ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்,அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆரோக்கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவதும் இதுவே முதல் முறையாகும். இன்று காலை, சாய் நிறுவனத்தின் முன் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில், மண் பானை விறகுகளுடன் கூடிய உலக சாதனை முயற்சியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆரோக்கியமான 100 வகை பொங்கல்திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை அடையாறு துணை கமிஷனர்...
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார்

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார்

செய்திகள்
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார் ஜனவரி 13 வெள்ளி முதல் ஜனவரி 22 ஞாயிறு வரை, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அப்பாஸ் கல்ச்சுரல் சென்னை நகரில், நன்கு அறியப்பட்ட நுண்கலைகளை ஊக்குவிக்கும் ஓரு நிறுவனம். கடந்த 41 ஆண்டுகளாக, 2500-க்கும் மேற்பட்ட நாடகம், நாட்டியம், கர்நாடக மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்து, பல்வேறு துறைகளின் முன்னணி கலைஞர்களோடும் கைகோர்த்து, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். ஆண்டுக்கொரு முறை நிகழும் அப்பாஸ் கலைவிழா, கடந்த 30 ஆண்டுகளாக சிறப்புற நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நடப்புது போல், இந்த ஆண்டும் ஜனவரி 13 முதல் 22 வரை, தொடர்ந்த...
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

இலக்கியம், செய்திகள்
தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட எஸ் பி சக்ரபோர்த்தி என்கிற சோமன்.சக்ரபோர்த்தியின் பெற்றோர் மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறினர். சென்னையில் பிறந்து, அயன்புரத்தில் வளர்ந்த இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை குறித்து பேசிய சக்ரபோர்த்தி, "சிறு வயது முதலே தமிழ் மொழி மீது எனக்கு தீவிர பற்று ஏற்பட்டது. பள்ளி பருவத்தில் திருக்குறளில் உள்ள மனப்பாடச் செய்யுள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின்னர் திருக்குறளின் மொழிப் பெயர்ப்புகளைப் படிக்கும்போது, திருக்குறளை மிகவும் எளிமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிலர் இன்னுமொரு மொழிபெயர்ப்பு எதற்கு என்றும் ஐயம் எழுப்பினர். ஆனால், தமிழ் மொழிப் பற்...
சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு 2022

சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு 2022

செய்திகள்
சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் சார்பில் சில்லறை வர்த்தக சிறப்பு மையத்தினர்(Centre of Excellence - Retail) 22.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்டம் 2022 என்ற நிகழ்ச்சியைக் கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, நடிகர் மற்றும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் திரு.திருச்சி சரவணக்குமார் அவர்களும் எல்.கே.எஸ் ஜூவல்லரியின் நிர்வாகப்பங்குதாரர் திரு.சர்ஃபராஸ் சையத் அகமது அவர்களும் விருந்தினர்களாகத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்நிகழ்ச்சியில், ஷசுன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராணி மனோகரன் அவர்கள் திரைக்கதையில், மாணவிகள் நடித்து, காட்சி ஊடகவியல் துறையினரால் எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று ஒள...