Wednesday, June 17

சினிமா

 EINFACH STUDIOS, பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ 2023 கோடை விடுமுறையில் வெளியாகிறது

 EINFACH STUDIOS, பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ 2023 கோடை விடுமுறையில் வெளியாகிறது

சினிமா
தயாரிப்பாளர்கள் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமாரின் Einfach Studios-ன் 'கொன்றால் பாவம்' படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார்- சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளனர். இந்தப் படம், 2023 கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ மோகன் பாபுவின் கன்னட நாடக கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் இதன் தெலுங்கு ரீமேக்கினை எழுதி தயாள் பத்மநாபன் இயக்கி உள்ளார். ஆஹா ஒரிஜினல்க்காக அல்லு அர்ஜூன் இதன் தெலுங்கு வெர்ஷனை தயாரித்துள்ளார். வரலக்‌ஷ்மி சரத்குமார் & சந்தோஷ் பிரதாப் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், க...
‘“கடைசி காதல் கதை”-விமர்சனம்

‘“கடைசி காதல் கதை”-விமர்சனம்

சினிமா
கதையின் நாயகனாய் ஆகாஷ் பிரேம் குமார்மற்றும் புகழ், விஜே ஆஷிக் என நண்பர்கள்.  நாயகன் ஆகாஷு ன் காதலியாக ஏனாக்‌ஷி ,இவர்களுக்குள் நிபந்தனை காதல், அந்த நிபந்தனையை நாயகன் மீற அது காதலில் பிரிவை தர நாயகன் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார் பின்பு அங்கிருந்து வெளியே வரும் நாயகன் இனி காதல் தோல்வியால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, உலகில் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதை மீதி படத்தில் சொல்வது தான் ‘கடைசி காதல் கதை.’. கதையின் நாயகனாய் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமாரும் ,அறிமுக நடிகை ஈனாக்‌ஷி கங்குலி, நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், மைம் கோபி,சாம்ஸ்,என பல நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டகேரக்டர்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்திர...
ராங்கி-விமர்சனம்

ராங்கி-விமர்சனம்

சினிமா
கதையின் நாயகியாக, தனியார் ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தையல் நாயகி என்ற பாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் கதைக்கு சிறப்பான திரைக்கதை அமைத்து அதை நிறைவான படமாக்கி உள்ளார் இயக்குனர் சரவணன். த்ரிஷாவின் அண்ணன் மகள் அனஸ்வரா ராஜன் மீது ஃபேஸ்புக் கணக்கு மூலம் வாலிபன்ஒருவன் விடுக்கும் மிரட்டலை பற்றிய விசாரணையில் தையல் நாயகி ஈடுபடுகிறார் விசாரணை வெளிநாடு தொடர்புகள் வரை நீளுகிறது இதனை பரபரப்பான செய்தியாக்கி கொள்கிறார் தையல் நாயகி (த்ரிஷா) ,அதன் பின் ஏற்படும் திருப்பமான சூழல்களிலிருந்து த்ரிஷா எப்படி மீண்டார் என்பதே படத்தின் கதை. ஏற்கனவே கதையின் நாயகியாக த்ரிஷா பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவர்து திரை பயணத்தில் குறிப்பிட்ட சொல்லக்கூடிய படமாகத்தான் அமையும். த்ரிஷாவுக்கு அடுத்ததாக அவரது அண்ணன் மகளாக உள்ள அனஸ...
செம்பி -விமர்சனம்

செம்பி -விமர்சனம்

சினிமா
மைனா , கும்கி , படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு பாட்டி ,பேத்தி கதையை முன்னிலை படுத்தி , தன்னோட பாணியை பின்னணியாக்கி செம்பியாக உருவாக்கி இருக்கிறார் பிரபு சாலமன் . மகளையும், மருமகனையும் தீ க்கு பலிகொடுத்துவிட்டு தன்னுடைய பேத்திய பொத்தி வெச்சி கோவை சரளா வளக்குறாங்க . மலையில கிடைக்குற பொருளை வெச்சி வயிறையும், வாழ்க்கையும் கஷ்ட்டப்பட்டு கடந்து போறாங்க . இப்படித்தான் ஒரு நாள் தேன் எடுத்து கடையில பேத்திய கொடுக்க சொல்றாங்க . மலையில் இருந்து கீழ வர வழியில 10 வயது சிறுமிய 3பேர் பாலியல் பலாத்காரம் செய்றங்க. ஹாஸ்பிடல்ல சேர்த்தஉடனே போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் போகுது . இன்ஸ்பெக்டர் ஆகாஷ் விசாரணை செய்றாரு. அப்போதான் எதிர்க்கட்சி தலைவர் மகனும் , அவனது நண்பர்களும் குற்றவாளிகள் தெரியுது . நேர்மை மாதுரி நடிச்ச ஆகாஷ் குற்றவாளிகள் கிட்ட பேரம் பேசி முடிக்குறாரு . தன் பேத்திக்கு எப்படியாவது நியாயம் கி...
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார்  வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில்   ‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில்   ‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு

சினிமா
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில்   'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் 'விடுதலை' பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது. தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 'விடுதலை' பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும்  வெளியாக இரு...
முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர்

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர்

சினிமா
'வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்' பாடல் மூலம் தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதிக்கிறார் தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார். இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் தை மாதத்தில் வெளியிடவுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பிறக்கிறது ஆங்கில புத்தாண்டு 2023. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக, மன அமைதி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். புத்தாண்டு மலர்கின்ற இந...
வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில் பெருமையடைகிறேன் – நடிகர் கார்த்தி

வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில் பெருமையடைகிறேன் – நடிகர் கார்த்தி

சினிமா
நடிகர் கார்த்தியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்துகளில் கூறியிருப்பதாவது : 2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் "சர்தார்" ஆகிய மூன்று திரைப்படங்களும் எனது ரசிகர்கள், திரையுலகப் பிரியர்கள், எனது குடும்பம் மற்றும் அனைத்து வகையான பத்திரிகை மற்றும் ஊடகங்களால் மாபெரும் வெற்றிபெற்று, தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை எனது படங்களில் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், என்னுள் இருக்கும் கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற தனித்துவமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். உழவன் அறக்கட்டளையில் எனது சகோதர சகோதரிகள் ...
டிரைவர் ஜமுனா- திரை விமர்சனம்

டிரைவர் ஜமுனா- திரை விமர்சனம்

சினிமா
cabdriver ஆக இருந்த தன் அப்பாவை கொலை செஞ்சவங்ககள சாமான்ய குடும்பத்துல இருக்குற அவரின் மகள் எப்படி பழிவாங்குகிறாள் அப்படிங்கறதுதான் டிரைவர் ஜமுனா படத்தோட கதை கரு , call taxi driver ஆக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு pickup செய்ய வேண்டிய booking வருகிறது யாரையும் அவங்க கொலை செய்வாங்கன்னு தெரியாம அவங்களை pickupம் செய்றாங்க ...அரசியல்ல தனிப்பெரும் செல்வாக்கோடு இருக்கிற நரேனை கொல்ல வேண்டும் என்ற அசைன்மெண்டுடன் ஐஸ்வர்யாவோட வண்டியில அவங்க வர்றாங்க ..ஒருகட்டத்துல அவங்க யாருன்னு ஐஸ்வர்யாவுக்கு தெரிய வர பயத்துடன் பயணிக்கிறாங்க..தனி படை போலீஸ் ஐஸ்வர்யா போன் மூலமாக அந்த car ஐ follow பண்ணுறாங்க ...இந்த விஷயத்தை தெரிஞ்ச அந்த கும்பல் ஐஸ்வர்யாவையும், காரையும் தங்களோட கன்ட்ரோலுக்கு கொண்டு வராங்க... யாரை கொலை செய்ய போறோமிங்கற போட்டோவையும்,அட்ரஸையும் தவிர யார் சொன்னாங்க? எதற்காக சொன்னாங்க? அப்படின்னு தெரிய...
ஓ மை கோஸ்ட் – திரை விமர்சனம்!

ஓ மை கோஸ்ட் – திரை விமர்சனம்!

சினிமா
Oh My Ghost படத்தில் கதையின் நாயகனாய் வரும் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக உள்ளார் , அடல்ஸ் ஒன்லி கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அவருக்கு தர்ஷா குப்தா காதலியாக உள்ளார் ,அவருக்கு அமானுஷ்யமான கனவுகள்அடிக்கடி வருகின்றன, ஒரு கட்டத்தில் தர்சா குப்தாவின் உடலில் ஒரு பேய் புகுந்து விடுகிறது, உடனடியாக தன்னை அனகொண்ட புரத்திற்கு கூட்டிச் செல்லும்படி அது கேட்கிறதுஅதன் படி மூன்று பேரும் அங்கு செல்ல, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ஓ மை கோஸ்ட் படத்தின் மீதி கதை. இப்படத்தில் சதீஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ,சன்னி லியோன் தமிழில் முதன் முறையாக இந்த படத்தில் நடித்துள்ளதால், சன்னி லியோன் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை OMG ஏற்படுத்தி இருந்தது, யுவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரமேஷ் திலக், யோகி பாபு, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன், அர்ஜுனன், தங்க துரை மற்றும் பலரும் தங்களுக்கு கொடுக்க...
பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

சினிமா
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்...