Friday, April 24

Author: admin

Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன்  இயக்கத்தில்,நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”  படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன்  இயக்கத்தில்,நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”  படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

சினிமா
விஜய் ஆண்டனி நடிக்கும் "ரத்தம்" படத்தின் பரபரப்பான இரண்டாவது லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போலவே, இந்த இரண்டாவது லுக் வித்தியாசமானதாக, ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் இந்தப் படத்திற்கு வலுவான தாக்கத்தையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது. இயக்குனர் CS.அமுதன் கூறுகையில்.., ‘ரத்தம்’ படம்  இதுவரை தமிழ் திரையில்  சொல்லப்படாத கதையை விவரிக்கும் ஒரு  க்ரைம் டிராமா. இத்திரைப்படம் நாம் தினமும் பார்க்கும் ஒன்றை  தான் முன்வைக்கிறது, ஆனால் சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம்  ஒரு போதும் உணரவில்லை என்பதே உண்மை. ‘ரத்தம்’ படத்தை CS அமுதன் இயக்கியுள்ளார் மற்றும் Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, G.தனஞ்செயன், B.பிரதீப், ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்...
‘மஹா’- திரைப்பட விமர்சனம்

‘மஹா’- திரைப்பட விமர்சனம்

சினிமா
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ள‘மஹா’ படத்தில் நடிகர் சிலம்பரசன் , நடிகை ஹன்சிகா ,குழந்தை மானஸ்வி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை- ஜிப்ரான், ஒளிப்பதிவு- லக்ஷ்மன் ‘மஹா’ படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்பது இங்கு ஹைலைட் ஆன தகவல் ஆகும் முக்கிய கதாபாத்திரத்தில்,விமானப் பெண்ணாக வரும் ஹன்சிகா மோத்வானி, பைலட் சிலம்பரசனை காதலிக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. போதைக்கு அடிமையாகி இருக்கும் ஒருவன் தொடர்ந்து குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வருகிறான். அவனை பிடிக்க காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார் .மஹாவின் மகள் ஐஸ்வர்யா காணாமல் போகிறாள...
பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும்-பிரபுதேவா உற்சாகம்

பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும்-பிரபுதேவா உற்சாகம்

சினிமா
‘‘‘ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகு...
வடிவுடையான் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம்  ” நாக பைரவா “

வடிவுடையான் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் ” நாக பைரவா “

சினிமா
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரித்துள்ள பான் இந்தியா படமான பாம்பாட்டம் படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்.இதைத் தொடர்ந்து தற்போது V.C.வடிவுடையான் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும்" நாக பைரவ " படத்தை பான் இந்தியா படமாக தயாரிக்கிறார்.இணை தயாரிப்பு - பண்ணை A.இளங்கோவன் தயாரிப்பு - V.பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், எழுதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குகிறார் V.C.வடிவுடையான். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது....
மாணவர்களுக்கு ஓராண்டு கட்டணத்தைச் செலுத்தும் ‘ஆஹா’வும், ‘மாமனிதன்’ விஜய் சேதுபதியும்

மாணவர்களுக்கு ஓராண்டு கட்டணத்தைச் செலுத்தும் ‘ஆஹா’வும், ‘மாமனிதன்’ விஜய் சேதுபதியும்

சினிமா
தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெறவேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும். இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார். ஆடி மாதம் என்றாலே தமிழ் மக்களுக்கு தள்ளுபடி என்றதொரு விசயமும் உடன் நினைவுக்கு வரும். தமிழகத்தின்...
எண்ணித் துணிக திரைப்பட இசை வெளியீடு !!

எண்ணித் துணிக திரைப்பட இசை வெளியீடு !!

சினிமா
Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது.., “ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“ ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது.., “இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த படம் இப்ப...
‘மஹாவீர்யர் -விமர்சனம்

‘மஹாவீர்யர் -விமர்சனம்

சினிமா
‘ருத்ர மஹாவீர உக்ரசேனராக இருக்கும் லாலுக்குத் தீராத விக்கலினால் பிரச்னைகள் ஏற்பட்டு அதன் காரணமாய் அவர் தன்னுடைய ஆட்சியை கூட சரியாக நிர்வகிக்க முடியாத நிலை சூழ்நிலை அமைகிறது தன்னுடைய பிரச்னையிலிருந்து விடுபட ஒரு பேரழகியை கொண்டு வருமாறு தன் அமைச்சருக்கு ( ஆசிப் அலி) அரசர் உத்தரவிடுகிறார்.நவீன காலத்தில் சுவாமி அபூர்ணாநந்தன் மீது (நிவின் பாலி) கோயிலின் சிலை ஒன்றைத் திருடியதாக குற்றம் சுமத்தப்பட, வழக்கு கோர்ட்க்கு வர நீதிபதி (சித்திக்) முன் நிறுத்தப்படும் சுவாமி குற்றவாளியா அல்லது குற்றம் அற்றவரா என்ற வழக்கு படத்தின் எஞ்சிய கதையை கொண்டு செல்கிறது அபூர்ணாநந்தனாக நிவின் பாலி அமைச்சர் வீரபத்ரனாக ஆசிப் மற்றும் ஷான்வி ஸ்ரீவஸ்தவாவும் திறம்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரமான மகாராஜாவாக நடித்திருக்கும் லால் மற்றும் சித்திக் நீதிபதியாக நடித்...
ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு “நினைவெல்லாம் நீயடா” படக்குழுவினர் வாழ்த்து!!

ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு “நினைவெல்லாம் நீயடா” படக்குழுவினர் வாழ்த்து!!

சினிமா
ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு "நினைவெல்லாம் நீயடா" படக்குழுவினர் வாழ்த்து!! இசைஞானி இளையராஜா பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவி ஏற்க டெல்லி செல்கிறார். இளையராஜாவுக்கு அவர் இசையமைப்பில் உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படக்குழு சார்பில் ஆளுயுர ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, இயக்குநர் ஆதிராஜன் , நடிகர் பிரஜன், நடிகை சினாமிகா, ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி, இனண இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்....
“சிவி-2”-விமர்சனம்

“சிவி-2”-விமர்சனம்

சினிமா
கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கத்தில் கே.சுந்தர் தயாரிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் “சிவி”. திகிலின் உச்சம் தொட்டு சக்கைபோடு போட்ட படம். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கத்தில் இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன் “சிவி-2” திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ், சுவாதி, யோகி, தாடி பாலாஜி, சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் கதை, 2007ல் வெளியான “சிவி” படத்தின் தொடர்ச்சி என்பதால். “சிவி” படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள அமானுஷ்யத்தையும் சில காலேஜ் ஸ்டுடண்ட்ஸ், மக்களிடம் யூட்யூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள். அப்போது இவர்களை இயக்கும் தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அள்ளிவிடுகிறார். அப்போது அவர்களுக...
‘தேஜாவு’-விமர்சனம்

‘தேஜாவு’-விமர்சனம்

சினிமா
வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் தேஜாவு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இதில் அருள்நிதி, மதுபாலா, அச்யுத்குமார், ஸ்மிருதி வெங்கட், சேதன், ராகவ் விஜய், காளி வெங்கட், மைம்கோபி,, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-பி.ஜி.முத்தையா, பாடல்கள்-விவேகா, படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த், கலை-வினோத் ரவீந்திரன், சண்டை-பிரதீப் தினேஷ் காவல் நிலையத்துக்கு வரும் ஒரு எழுத்தாளர், தான் எழுதும் கதையில் வரும் பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர்களிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கேட்கிறார்.ஆனால் அதனை காவல் நிலையம் சீரியஸ் ஆக எடுத்துகொள்ளவில்லை மர்ம கும்பலால் பெண் ஒருவர் கடத்தப்பட காணாமல் போன பெண்ணைப் பற்றிய ஒரு வழக்கு விஷயமாக அவரை விசாரணை செய்கிறது ...