Friday, April 24

Author: admin

“எண்ணித் துணிக” திரைப்பட விமர்சனம்

“எண்ணித் துணிக” திரைப்பட விமர்சனம்

சினிமா
Rain of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” படத்தின் கதை ஆரம்பத்தில் வைரக் கொள்ளையில் துவங்கி பின் காதல் ட்ராக்கில் பயணிக்கிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்கள் ஒரு அமைச்சரிடம் வருகிறது. அதை கைப்பற்ற எண்ண அவை இருக்கும் நகை கடை மீது தாக்குதல் நடத்தப்படும்போது கொலையும் நட க்கிறது தன் காதலியைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் ஜெய். கொள்ளையர்கள் பிடிபட்டர்களா/ வைரம் கிடைத்ததா?, . ஜெய் பழிக்குப் பழி வாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. பலபடங்களில் காதல்நாயகனாய் நடித்திருந்த ஜெய் இந்தப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாய் வலம் வந்துள்ளார், இந்த வாய்ப்பை அவரும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் ...
மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி, சினிமா போல் தயாரித்துள்ள ஆல்பம் “ஜதி”

மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி, சினிமா போல் தயாரித்துள்ள ஆல்பம் “ஜதி”

சினிமா
முழுநீள திரைப்படம் பார்த்த திருப்தி கொடுக்கும் "ஜதி" ஆல்பம்! பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. கூடை சுமந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்ணின் சிறிய மகள், பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொள்கிறாள். மகளின் ஆசையை நிறைவேற்ற தாய் முயற்சிக்கும் போது, உன்னால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியாது. தகுதிக்கு மேல் ஆசைப்படாதே எனக்கூறி, விரட்டப்படுகிறார்கள். இதைப் பார்த்த மற்றொரு குரு, அந்தச் சிறுமியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்டு, அவளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அரங்கேற்றம் செய்து வைக்கிறார். மகளின் கனவை நிறைவேற்றும் தாயாக கோமதி நடித்துள்ளார். மகளாக சரண்யாஶ்ரீ நடித்துள்ளார். கற்றுக் கொடுக்கும் குருவாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் முரளி நடித்துள்ளார். ஒரு முழுநீள திரைப்படம் பார்க்கும் உணர்வை இயக்குனர் ரசல் ஏற்ப்படுத்தி உள்ளார்...
பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய ஆதித்யராம் குழுமம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய ஆதித்யராம் குழுமம்

செய்திகள், விளையாட்டு
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆதித்யாராம் குழுமத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) பிரிவான ஆதித்யராம் ஹெல்பிங் ஹேண்ட்ஸ், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகுதியுடையவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. சமீபத்தில், ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே சுரேஷ் மற்றும் ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கே சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்தார். மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய பாடி பில்டிங் மற்றும் பிஸிக் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் - 2022-இல் பங்கேற்க சுரேஷ் விரும்பினார்.ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்த...
வேல்ஸ் பட்டமளிப்பு விழா

வேல்ஸ் பட்டமளிப்பு விழா

கல்வி, செய்திகள்
சென்னை, பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பன்னிரெண்டாம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா 05.08.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார். வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்கள் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ச.ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் வரவேற்புரையாற்றி, 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வழங்கினார். இவ்விழாவில், புகழ்பெற்ற நான்கு ஆளுமைகளான பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராச...
பத்மஜா பிலிம் பேக்டரி  (Padmaja Film Factory) என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர். ஹனுமந்த் ராவு  தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படம் “இக் ஷு ” (IKSHU).

பத்மஜா பிலிம் பேக்டரி  (Padmaja Film Factory) என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர். ஹனுமந்த் ராவு  தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படம் “இக் ஷு ” (IKSHU).

சினிமா
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள பான் இந்தியா படம் "இக்ஷு " (IKSHU). விவி.ருஷிகா இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் படம் இது. படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ராம் அக்னிவேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். மற்றும் ராஜீவ் கனகலா, பாகுபலி பிரபாகர், சித்திரம் சீனு மற்றும் பலர் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது. ஐந்து மொழிகளில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்குப் பிறகு படத்தின் முதல் பிரீமியர் செய்யப்பட்டது. வணிக ரீதியாக அதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.படத்தின் OTT உரிமைக்காக பிரபல ott நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மீதமுள்ள வணிக நிகழ்...
இன்று கேரளாவில் வெளியாகும் தேஜாவு!

இன்று கேரளாவில் வெளியாகும் தேஜாவு!

சினிமா
கடந்த மாதம் 22ம் தேதி அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் "தேஜாவு". வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிப்பில், பிஜி மீடியா ஒர்க்ஸ் PG முத்தையா இனை தயாரிப்பில் உருவான இப்படத்தினை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார்.   இப்படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக நேர்மறை கருத்துகளாலும் ஊடகங்களின் விமர்சனங்களாலும் இப்படம் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக 3ம் வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. மக்களின் ஆதரவால் இப்படம் 3 வாரம் கணிசமான திரையரங்குகளில் வெற்றி ஓட்டத்தை தொடர்வது படக்குழுவினரை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் இன்று இப்படம் கேரளாவில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாவது படக்குழுவினரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மது பாலா, சேத்தன், காளி வெங்...
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’ வைரலானது

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’ வைரலானது

சினிமா
'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது. இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி, “இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும். மேலும் ...
கார்த்தி கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்-விருமன் பட விழாவில்,இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு

கார்த்தி கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்-விருமன் பட விழாவில்,இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு

சினிமா
இது மதுரை மண். என் சொந்த மண். ரசனைக்குப் பெயர் போன மண். மதுரையில் ஒரு படம் ரசிக்கப்படுகிறது என்றால், உலகம் முழுவதும் ரசிக்கப்படும் என்று அர்த்தம். என் பெருமைக்குரிய இடம் மதுரை. மேடையில், நான் சம்பிரதாயத்திற்குத்தான் பேசுவேன். ஆனால், சில படங்கள் தான் மூச்சுமுட்ட அமுக்கி விடும். அதுமாதிரியான படம் தான் விருமன். இந்த படத்தின் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. இவர்கள் 4வது தலைமுறை பிள்ளைகள். சூர்யா, கார்த்தி என் வீட்டில் விளையாடிய பிள்ளைகள். இன்று அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. உதவி இயக்குனராக இருந்தபோது, சிவக்குமார் திருமணமாகி வந்தார். அவருடைய பிள்ளைகள் இப்படி வருவார்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒழுக்கமுள்ள சிறந்த மனிதர் சிவகுமார். ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தவர் சிவகுமார். வசதியாக இருந்தாலும், பள்ளிக்கு கார் கொடுத்து அனுப்ப மாட்டார். ஷங்கரைப் பார்த்து பிரமித்தவன் நான்....
சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா  பேச்சு

சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு

சினிமா
உங்களை 5 மணியிலிருந்து கட்டி வைத்திருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேச வேண்டியிருந்ததால் உங்களை அமைதியாக இருக்க சொன்னேன். ஆனால், இப்பொழுது உங்களுடைய முழு அன்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இது இன்று நேற்று உறவல்ல; 25 கால உறவுகள்! அதில் போட்ட ஒரு சில பேரை நான் நான் கூற முடியும். மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடாது. ஜோதிமுத்து, மனோஜ் போன்ற அனைவரும் 25 ஆண்டுகாலமாக இந்த உறவை கட்டிக் காப்பாற்றி இருப்பதை வார்த்தைகள் கூறி விட முடியாது. இந்த அன்பிற்கும் உறவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ராஜாவுடைய சொந்த ஊர் இதுதான். பள்ளிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு விடுமுறையில் செல்வது போல இங்கும் வந்திருக்கிறேன். அப்போது நான் நடிகன் கிடையாது. ஆனால், சித்தி பையன், பெரியம்மா பையன், மாமா பையன் என்று ராஜாவுக்குத் கொடுக்கும் அதே உறவை, எனக்கும் கொடுத்தார்கள். அதை நான் ...
‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. –  துல்கர் சல்மான்

‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. –  துல்கர் சல்மான்

சினிமா
'நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும் 'சீதா ராமம்' படத்தின் கதை, இதற்கு முன் நான் கேட்டிராத கதை. அதுபோன்ற காதல் கதை நாம் இதுவரை பார்த்ததில்லை.'' என 'சீதா ராமம்' படத்தின் நாயகனும், நடிகருமான துல்கர் சல்மான் தெரிவித்திருக்கிறார். மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான 'சீதா ராமம்' எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. ஸ்வப்னா சினிமா என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தயாரித்து, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியாகும் திரைப்படம் 'சீதா ராமம்'. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை ரசிகர்களிடத்தில் அ...