“எண்ணித் துணிக” திரைப்பட விமர்சனம்
Rain of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக”
படத்தின் கதை ஆரம்பத்தில் வைரக் கொள்ளையில் துவங்கி பின் காதல் ட்ராக்கில் பயணிக்கிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்கள் ஒரு அமைச்சரிடம் வருகிறது. அதை கைப்பற்ற எண்ண அவை இருக்கும் நகை கடை மீது தாக்குதல் நடத்தப்படும்போது கொலையும் நட க்கிறது தன் காதலியைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் ஜெய். கொள்ளையர்கள் பிடிபட்டர்களா/ வைரம் கிடைத்ததா?, . ஜெய் பழிக்குப் பழி வாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பலபடங்களில் காதல்நாயகனாய் நடித்திருந்த ஜெய் இந்தப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாய் வலம் வந்துள்ளார், இந்த வாய்ப்பை அவரும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்
...









