Monday, May 25

Author: admin

‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு

‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு

சினிமா
நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக உங்களால் ‘மேகம்’ பாடலை மிஸ் செய்ய முடியாது. நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம்பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த் வசந்தா பாடி இசையமைத்துள்ளார், வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மேகம்’ பாடல் குறித்தும், கோவிந்த் வசந்தா குறித்தும் பேசும் இயக்குநர் பிருந்தா மாஸ்டர், “தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் முன்னணி பாடகராகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் அவரை அறிந்திருந்தோம். மேடையில் அவர் பலமுறை வழங்கிய தாய்க்குடம் ...
சிவகார்த்திகேயன் நடிப்பில்,  “SK 20” படத்தின் படப்பிடிப்பு  துவக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், “SK 20” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சினிமா
Suresh Productions-Sree Venkateswara Cinemas LLP-Shanthi Talkies வழங்கும்,ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில்,இசையமைப்பாளர் தமன் இசையில்,சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது ! 2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புகழ் ப...
இனி  அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்”  திரைப்படம் !

இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்” திரைப்படம் !

சினிமா
ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மற்றும் ஆர்வமிகு திரைப்பட காதலர்கள், இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ப்ரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி திரையிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘மகான்’, கன்னடத்தில் ‘மஹா புருஷா’ என்ற பெயரில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு முன்னதாகவே எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், திரைப்படக் காதலர்கள் வெகுஜன ரசிகர்கள் ஆகியோருக்கு, இந்தப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் என்பதற்கான முக்கிய அம்சங்கள் உங்களுக்காக இங்கே.. நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 60 வது படம் : திரையுலகில் பல சிறந்த கதைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மகான்' திரைப்படம் முன்னணி நட...
பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம் வழங்கிய தர்மபுரம் ஆதினம்

பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம் வழங்கிய தர்மபுரம் ஆதினம்

சினிமா, செய்திகள்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் "கிராமிய இசை கலாநிதி" என்கிற பட்டம் வழங்கப்பட்டதோடு தர்மபுரம் ஆதினத்தினுடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம், சிவாலயங்களுக்கு ஆஸ்த்தானபாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. "ஆன்மிக காவலர் " அகர்சந்த் அவர்கள் "தொழிலாளர் துறை அமைச்சர் " சி. வெ. கணேசன், "இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் "கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர். வேல்முருகன் அவர்களுக்கு "கிராமிய இசை கலாநிதி ...
அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!

அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!

சினிமா
சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம். தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரி...
இருமொழிகளிலும் இதயம் கவரும்  அழகான படைப்பு  “நித்தம் ஒரு வானம்”

இருமொழிகளிலும் இதயம் கவரும் அழகான படைப்பு “நித்தம் ஒரு வானம்”

சினிமா
Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” ! பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார். “நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. அசோக் செல்வன் நாயகனாக...
அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

சினிமா
  படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய். நடிகர் அருண் விஜய் ,தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் 'பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்....
என்னை அறிந்தால்’ படத்தின் 7ஆம் ஆண்டினை இயக்குனருடன் கொண்டாடிய அருண் விஜய்

என்னை அறிந்தால்’ படத்தின் 7ஆம் ஆண்டினை இயக்குனருடன் கொண்டாடிய அருண் விஜய்

சினிமா
அஜித்குமார் - அனுஷ்கா - த்ரிஷா நடிப்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’திரைப்படத்தை கவுதம் மேனன் திறம்பட இயக்கியிருந்தார் இந்தப் படத்தில் அருண் விஜய், விக்டர்மனோகரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி ,தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ,ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார், தற்போது இந்தத் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி என்னை அறிந்தால் படத்தின் இயக்குநரான கவுதம் மேனனை நடிகர் அருண் விஜய் சந்தித்திருக்கிறார். மகிழ்வான இந்த சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது.ஆண்டுகள் 7 ஆனால் என்ன? என்றைக்கும் ரசிகர்களுக்கும் அதில் பணிபுரிந்த கலைஞர்களுக்கும் என்னை அறிந்தால் படம் என்றும் மறக்கமுடியாத படம்தானே!...
யாரோ – விமர்சனம்

யாரோ – விமர்சனம்

சினிமா
யாரோ - விமர்சனம் ஊருக்கு வெளியே தனியாக இருப்பவர்களை கொலை செய்துவரும் சீரியல் கில்லர் செய்தியை கேட்கிறார் ஹீரோ . அது போலவே சில சம்பவங்களும் நடக்கிறது. எங்கே தனக்கும் அப்படித்தான் நடக்குமோ என்று ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் வேலை செய்கிறார் . நம்மையும் அதே பதட்டத்திற்குள்ளாக்கி முதல் பகுதி முடிவடைகிறது . இரண்டாம் பகுதி அப்படியே கதையும் , திரைக்கதையும் தலைகீழாக மாறுகிறது . அந்த சைக்கோ கில்லர் வேறுயாரும் இல்ல ஹீரோ தான். ஏன் ?, எதனால் ? என்று இரண்டாம் பகுதியில் சொல்கிறார்கள் . குறைவான கதாப்பாத்திரங்கள் கொண்டு , குறைந்த நேர அளவுக்குள் , விறுவிறுப்பாக எடுத்து இருக்கிறார் இயக்குனர்.படத்தின் ஹீரோ வெங்கட் ரெட்டி மொத்த பளுவையும் சுமந்து செல்கிறார். பல கெட்டப்பில் வருவது பொருந்தியிருக்கு .மற்ற கதாபாத்திரங்கள் வழக்கம் போலத்தான் .ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் படத்திற்கு பலம் .பாடல்,சண்டை,கா...
‘கணம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமை! – நடிகை அமலா

‘கணம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமை! – நடிகை அமலா

சினிமா
ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘கணம்’. இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் அம்மா பாடல் வெளியிடப்பட்டது. இதற்கு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அதன் பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. ‘கணம்’ படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர். முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட போது இதமாக, மென்மைய...