அஜித்குமார் – அனுஷ்கா – த்ரிஷா நடிப்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’திரைப்படத்தை கவுதம் மேனன் திறம்பட இயக்கியிருந்தார் இந்தப் படத்தில் அருண் விஜய், விக்டர்மனோகரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி ,தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ,ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார், தற்போது இந்தத் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி என்னை அறிந்தால் படத்தின் இயக்குநரான கவுதம் மேனனை நடிகர் அருண் விஜய் சந்தித்திருக்கிறார்.
மகிழ்வான இந்த சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது.ஆண்டுகள் 7 ஆனால் என்ன? என்றைக்கும் ரசிகர்களுக்கும் அதில் பணிபுரிந்த கலைஞர்களுக்கும் என்னை அறிந்தால் படம் என்றும் மறக்கமுடியாத படம்தானே!