நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை
பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும் 'துகில்' எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
'துகில்'- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்கள...









