Sunday, May 31

செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

செய்திகள்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும் 'துகில்' எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். 'துகில்'- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்கள...
”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

செய்திகள்
நடிகர் பிளாக் பாண்டி தலைமையில் நடைபெற்ற விழா சமூகத்தில் மாற்றம் உருவாக்கும் நிகழ்வாக மாறியது சென்னை, “இயன்றதை செய்வோம்! இணைந்தே செய்வோம்!” என்ற தத்துவத்தில் செயல்பட்டு வரும் “உதவும் மனிதம்” அறக்கட்டளை, அதன் சிறப்புவிழாவை நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிளாக் பாண்டி தலைமையில் சென்னையில் வெகுவிமர்சையாக நடத்தியது. இந்த விழாவில் மொத்தம் 300 பயனாளிகள் பன்முக நலத்திட்ட உதவிகளை பெற்றனர். நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. தியாகி ஐயா ஆவார். வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகள்: 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதும் உபகரணங்கள் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் உணவுப்பொருட்கள் 30 பார்வையற்ற நபர்களுக்கு வியாபார உபகரணங்கள் (ரூ.3000 மதிப்பு) 20 பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு பவர் கண்ணாடிகள் ...
.உறுப்பினர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்திய தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம்

.உறுப்பினர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்திய தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம்

அழகும் ஆரோக்கியமும்
.அழகுக்கலை கலைஞர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் மேம்பாடு, மேலும் திறமையானவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல நல்ல நோக்கங்களுக்காக தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம் (TBIEA) கடந்த மார்ச் 19ஆம் தேதி சென்னையில் துவங்கப்பட்டது. துவக்க நாளிலேயே இந்த சங்கத்தில் சுமார் 100 உறுப்பினர்கள் வரை இணைந்தனர். தொடர்ந்து பலரும் ஆர்வமுடன் இதில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக கடந்த வாரம் சென்னை ராயல் பிளாசா டவரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெடரல் வங்கி கிளையின் மேலாளர் P.ஆனந்தி, சான்றிதழ் பெற்ற தொழில் முறை ஒப்பனை கலைஞரும் பயிற்சியாளருமான செல்டன் ஆர்டிஸ்ட்ரி மற்றும் பூக்கள் உருவாக்குவதில் பல்வேறு விதமான சாதனைகளுக்கு சொந்தக்காரரும் வழிகாட்டியுமான C.பிரபாவதி ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் அரசு சான்...
சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.

சினிமா, செய்திகள்
இராம வீரப்பனின் " கிங் மேக்கர் " ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த  ஆவணப்படம் மிக  பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது . தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக  வரலாற்றில்  முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட  திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா த...
முன்னணி நடிகர் தனுஷ் “DCutz By Dev” சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!

முன்னணி நடிகர் தனுஷ் “DCutz By Dev” சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!

அழகும் ஆரோக்கியமும், செய்திகள்
DCutz By Dev" சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ் முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , "DCutz By Dev" எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் "DCutz By Dev" மூலம், பரந்த அளவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார். DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பண...
ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

செய்திகள்
ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான கராத்தே வீரரும் நடிகருமான ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: கராத்தே வீரரும், வில்வித்தை வீரரும், இளைஞர்களுக்கு பல கலைகளை கற்றுத் தந்த கலைஞரும், திரையுலகில் நடிகராகவும் வலம் வந்தவருமான ஷிகான் ஹுசைனி அவர்களுடைய மறைவு மனதிற்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய உடல் உறுப்புகளை அவர் தானம் செய்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது, கண்களில் கண்ணீரை பெருக்குகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், கலையுலகத்தை சேர்ந்த ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையு...
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

சினிமா, செய்திகள்
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று மாலை மறைந்த நடிகர்-இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்....
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ ஜிம்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ ஜிம்

அழகும் ஆரோக்கியமும், சினிமா
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம் இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் மெட்ராஸ் பிட்னஸ் எனும் பெயரிலான உடற்பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார். 'பிக் பாஸ்' புகழ் மணிகண்டன் ராஜேஷ் - ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த 'மெட்ராஸ் பிட்னஸ்' எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழங்கும் இந்த உடற்பயிற்சி கூட திறப்பு ...
சமூக ஊடக செயற்பாட்டாளர்களை SISMIA ஒருங்கிணைக்கும் – தலைவர் கவிஞர் விவேகா பேச்சு

சமூக ஊடக செயற்பாட்டாளர்களை SISMIA ஒருங்கிணைக்கும் – தலைவர் கவிஞர் விவேகா பேச்சு

செய்திகள்
ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தியது சோசியல் மீடியா தான் - SISMIA தலைவர் கவிஞர் விவேகா பேச்சு   தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் திரு.விவேகா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் LNH Creations திரு.கே.லஷ்மி நாராயணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைவர் கவிஞர் திரு. விவேகா, “இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கும் ஊடக உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது. சோசியல் மீடிய...
சுவாசப்புரட்சி : தன்னை உணர்தல்

சுவாசப்புரட்சி : தன்னை உணர்தல்

அழகும் ஆரோக்கியமும்
சுவாசப்புரட்சி : தன்னை உணர்தல்தன்னை உணர்வதற்காக 100க்கும் மேற்பட்ட காடுகள் மற்றும் மலைகள் வழியாக பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெற்ற அனுபவத்திலிருந்து தான் இந்த தியானத்தைக் கொடுக்கிறோம். வேறு எந்த புற நூல்களிலிருந்தோ, சித்தர் பாடல்களிலிருந்தோ எதுவும் பகிறப்படவில்லை. ஆன்மா அறுங்கோணச் சக்கரத்தின் நோக்கம்: சுவாசப்புரட்சி 1. சுவாசத்தைக் கவனித்தல்: குறுக்கீடு அல்லது கவனச்சிதறல் இல்லாமல் சுவாசத்தைக் கவனிப்பது 2. எண்ணத்தை ஒருநிலைப்படுத்துவது: உள் அமைதி மற்றும் சமநிலை நிலையை அடைதல். 3. தன்னை உணர்தல்: தனி மனிதன் தன் நிஜத்தை அறிதல் 4. வீடு தோறும் தவம்: அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக தியானப் பயிற்சியை மேற்கொள்ளுதல் நாங்கள் தனிப்பட்ட முறையில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயணித்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் மற்றும் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை...