Wednesday, May 27

செய்திகள்

*“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!*

*“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!*

சினிமா, விளையாட்டு
 ‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உரு...
திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!

திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!

சினிமா, செய்திகள்
Ballpark Padel Club-க்காக Ceri Digital நடத்திய சண்டே ஸ்மாஷ் லீக்! இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது. டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2...
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள்இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள்இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

செய்திகள்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), R. தங்கவேலு மற்றும் பொதுச் செயலாளரான ஆ. அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் உடன் சென்றிருந்தார்கள்....
உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ்  எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;

உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ்  எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;

செய்திகள், விளையாட்டு
மே 29 -சர்வதேசஎவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் ஆசிஷ் யு, தனது சாதனையுடன் இளைஞர்களுக்கு புதிய முத்திரை பதித்துள்ளார்.ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், தனது தந்தை திரு. யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வென்றுள்ளார். பள்ளி கல்வியை முடித்ததும் (2024-இல் பன்னிரண்டாம் வகுப்பு), ஒரு வருட இடைவெளியில் அவருடைய பயிற்சி துவங்கியது (டிசம்பர் 2023). அனுபவப் பயணம், அடிப்படை மற்றும் மேம்பட்ட மலை ஏறுதல் பயிற்சிகளை A தரத்தில் முடித்துள்ளார். இதன் பின்னர், ஹிமாலயன் பகுதியில் பல சவாலான நடைபயணங்களையும் மேற்கொண்டார். ஆசிஷின் சாதனை: • ஆசிஷ் தனது அணியின் தலைவர் – உலகின...
SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

செய்திகள், விளையாட்டு
தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது. சிறந்த வீரர்களைக் கொண்ட 12 அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன. இந்த சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் தலைவர், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, பிரபல நடிகர் ரவி மோகன், SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குநருமான L.T. ஆனந்த், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் உள்ளி...
கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி

கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி

சினிமா, செய்திகள்
கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: எட்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக கேளிக்கை வரி பாதியாக குறைப்பு. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு. தமிழக அரசு கேளிக்கை வரியை குறைத்திருக்கிறது, தமிழ் திரைப்பட உலகின் வலியை குறைத்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள். T. ராஜேந்தர், எம்.ஏ. ‍‍-...
VV ENTERTAINMENTS சார்பில் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஆடை அலங்கார போட்டி

VV ENTERTAINMENTS சார்பில் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஆடை அலங்கார போட்டி

செய்திகள்
சமூக ஆர்வலரும், நடிகருமான விஜய்விஷ்வா அவர்களின் விவி என்டர்டைன்மெண்ட் மற்றும் மாமதுரையர்கள் எம் ஆர் பிரமோட்டர்ஸ் & STAR trust T குருசாமி உடன் இணைந்து நம்ம ஊரு வைப்ஸ் சிறப்பு சித்திரை ஆடை அலங்கார்ர திருவிழாவை நடத்தியது. மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பணசாமி, முருகன் போன்ற சாமி வேடமணிந்து கலந்து கொண்டது காண்போரை நெகிழச் செய்தது. இந்த கோலாகல விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனர் திரு.ஜே.கே.முத்து,, தபோவன் திரு.தீனதயாளன், சமுத்ரா செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் முத்தாய்ப்பாக குழந்தைகளின் கண்கவர் பாட்டு போட்டி மற்றும் நடனம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாமதுரையர் அமைப்பின் அகில.உலக தலைவர் க.திருமுருகன் அவர்களுக்கு வாழ...
ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ் 

ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ் 

சினிமா, செய்திகள்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் - சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர்.இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின்நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும்  பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். “ இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சி...
 தென்னிந்திய அளவில் நடைபெற்ற முதல் டென்பின் பவுலிங் போட்டி! – கிஷான்.ஆர் மற்றும் ஹிட்டாசா சிசோடியா பட்டங்கள் வென்றனர்

 தென்னிந்திய அளவில் நடைபெற்ற முதல் டென்பின் பவுலிங் போட்டி! – கிஷான்.ஆர் மற்றும் ஹிட்டாசா சிசோடியா பட்டங்கள் வென்றனர்

விளையாட்டு
பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி! முதலாவது தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார். இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார். மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார். ...
லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 போட்டியில் வெற்றி பெற்றது

லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 போட்டியில் வெற்றி பெற்றது

விளையாட்டு
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 பட்டம் பெறும் இறுதிப் போட்டியில், லோயோலா கல்லூரி கால்பந்து அணி STEDS HCLF SFC அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக டாக்டர் ஆர். ஆனந்த குமார், IAS, மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியின் சிறப்பம்சங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 18 முன்னணி அணிகள் மூன்று மாதங்கள் நீண்ட இந்த போட்டியில் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முன்னணி நான்கு அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் லோயோலா கல்லூரி மற்றும் STEDS HCLF SFC அணிகள் தீவிரமாக மோதின. விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள் 1. மிஸ்டர் நவநீதன், Managing Director, Motodoctor App 2. மிஸ்டர் சாண்டி, இந்தியாவின் புகழ்...