Thursday, July 16

செய்திகள்

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 24 வது நினைவு தினத்தையொட்டி  (21.07.2025) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை   செலுத்தப்பட்டது

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 24 வது நினைவு தினத்தையொட்டி (21.07.2025) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திரையுலகின் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் கலைத்தாயின் மூத்த மகன் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 24 வது நினைவு தினத்தையொட்டி இன்று (21.07.2025) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்க துணைத்தலைவர் திரு.பூச்சி S.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.தளபதி தினேஷ், திரு.ஸ்ரீமன் ,நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.சௌந்தரராஜா , திரு.தாசரதி, மற்றும் நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். #தென்னிந்திய நடிகர் சங்கம்...
பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

செய்திகள்
பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” ...
தமிழ் திரைப்பட நடிகரும் மற்றும் பாடகருமான மு.க.முத்து மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்!

தமிழ் திரைப்பட நடிகரும் மற்றும் பாடகருமான மு.க.முத்து மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்!

சினிமா, செய்திகள்
மு.க.முத்து மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்! அஞ்சுகத் தாயின் புதல்வர், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூத்த புதல்வர் மற்றும் முத்து வேலரின் முத்தான மூத்த பேரன் இன்றைய தமிழக முதல்வராக இருக்கும் முக.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் இன்றைய துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும், தமிழ் திரைப்பட நடிகரும் மற்றும் பாடகருமான பாசத்துக்குரிய சகோதரர் மு.க.முத்து அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் செவிக்கு எட்டியது, என்னுடைய மனதை வாட்டியது. இவர் 'பிள்ளையோ பிள்ளை' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 'பூக்காரி' படத்திலே பூ மணம் வீசினார். 'அணையா விளக்கு' படத்தில் நடித்து, கொழுந்து விட்டு எரிந்தார். மற்றும் 'சமையல்காரன்' 'இங்கேயும் மனிதர்கள்' போன்ற படங்களில் நடித்தவர். இவருடைய இழப்பு பேரிழப்பாகும். இவர...
 ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ – மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி

 ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ – மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி

செய்திகள்
மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி கிராமி விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' (GANDHI - Mantras of Compassion) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை ஆல்பம் ஜூலை 14 அன்று வெளியானது. இந்...
*சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!*

*சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!*

செய்திகள்
*சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!* *சென்னை:* வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத அசல் கலைப்படைப்பை கடந்த 3,000+ நாட்களாக சூரஜ் பார்தி உருவாக்கியுள்ளார். தொடர்ச்சியாக இதை செய்ததன் மூலம் ஒழுக்கம், ஆர்வம், பாரம்பரியம் மற்றும் பரிசோதனை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் சாத்தியமாக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஆரம்பித்த இந்த விஷயம் ஒரு தசாப்தம் கடந்து இப்போது அவரது கலை, தத்துவம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. "இது அவுட்புட் சார்ந்தது மட்டுமல்ல! நம் இருப்பை நிலைநாட்டுவதும், மன ஒருமைப்பாடும் சேர்த்ததுதான்” என்றார். தலைசிறந்த புடவை வடிவமைப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் சூரஜ். நெசவாளர் சேவை மையத்தின் முன்னாள் இய...
’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை

’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை

வணிகம்
’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! - வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய இருப்பிடம், சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் முதலீட்டு திறனுக்காக தனித்து நிற்கிறது. ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், 19,000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை ...
*“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!*

*“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!*

சினிமா, விளையாட்டு
 ‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உரு...
திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!

திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!

சினிமா, செய்திகள்
Ballpark Padel Club-க்காக Ceri Digital நடத்திய சண்டே ஸ்மாஷ் லீக்! இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது. டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2...
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள்இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள்இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

செய்திகள்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), R. தங்கவேலு மற்றும் பொதுச் செயலாளரான ஆ. அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் உடன் சென்றிருந்தார்கள்....
உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ்  எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;

உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ்  எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;

செய்திகள், விளையாட்டு
மே 29 -சர்வதேசஎவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் ஆசிஷ் யு, தனது சாதனையுடன் இளைஞர்களுக்கு புதிய முத்திரை பதித்துள்ளார்.ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், தனது தந்தை திரு. யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வென்றுள்ளார். பள்ளி கல்வியை முடித்ததும் (2024-இல் பன்னிரண்டாம் வகுப்பு), ஒரு வருட இடைவெளியில் அவருடைய பயிற்சி துவங்கியது (டிசம்பர் 2023). அனுபவப் பயணம், அடிப்படை மற்றும் மேம்பட்ட மலை ஏறுதல் பயிற்சிகளை A தரத்தில் முடித்துள்ளார். இதன் பின்னர், ஹிமாலயன் பகுதியில் பல சவாலான நடைபயணங்களையும் மேற்கொண்டார். ஆசிஷின் சாதனை: • ஆசிஷ் தனது அணியின் தலைவர் – உலகின...