தமிழகத்தில் விளையாட்டுத் துறை திரு .உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது-வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்பாராட்டு
உதயநிதியை பாராட்டிய வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்!
வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் ஃபுட்பால் பிளஸ் U-13, U-15 மற்றும் U-17 யூத் லீக்களுக்கான புதிய ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி, பாலக்காட்டை சேர்ந்த ஜிதினுக்கு ஸ்பெயினில் ஓராண்டு பயிற்சிக்காக தனது பங்களிப்பாக ரூ 22 லட்சத்திற்கான காசோலையும் ஐசரி கணேஷ் வழங்கினார்.
இது குறித்து ஐசரி கணேஷ் பேசியதாவது, “இன்று தமிழகத்தில் விளையாட்டுத் துறை உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது. முதல்வர் திரு. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இன்னும் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஃபுட்பால் விளையாட்டை தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே வேல்ஸ் ஃபுட்பால் அகாடெமி ஆரம்பிக்க இருக்கிறோம், இதற்காக நல்ல திறமையாளர்களை கண்டுபிடித்து அவர்...









