Monday, May 25

செய்திகள்

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

செய்திகள்
Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 06/07/23 நடைபெற்றது. இவ்விழாவினை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மகன்கள் Dr.வம்சி மோகன் Dr.சுதாகர் மற்றும் மகள் மஹதி சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்,அதனை தொடர்ந்து கலைமாமணி Dr.k.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்கள் குழுவுடன் வழங்கிய இசை அஞ்சலியுடன் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது. Dr.வம்சி மோகன் வரவேற்புரையாற்றினார். பாரதிய வித்யா பவன் கோவை மண்டல தலைவர் Dr.B.K. கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை வழங்கினார்.மேலும் பரதநாட்டிய‌ கலைஞர் Dr.M . பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு Dr.M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் 2023ம் ஆண்டுக்கான "முரளி நாத...
வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை

வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை

செய்திகள்
கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த தகவலை மிகவும் அக்கறையுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இந்த திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்...
பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது

செய்திகள்
Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த ஆஷாட விசாகம் நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது.  இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன்  சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் பிரதான அரங்கில் நடத்துகின்றன.   இந்நிகழ்ச்சி கலைமாமணி Dr.K.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழுவுடன் வழங்கும் இசை அஞ்சலியுடன் துவங்கவிருக்கிறது.   நிகழ்ச்சியில் பங்குபெறவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் :- Dr.B.K.கிருஷ்ணராஜ் வானவராயர் - தலைவர்கோயமுத்தூர்...
முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! – லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! – லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

செய்திகள்
உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என்று பெரிய மனிதர்களுக்கு பிடித்த நபராக வலம் வருகிறார். கல்யாணம் அவர்களின் அன்பு பிடியில் சிக்காதவர்கள் இருக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு சினிமா மற்றும் பத்திரிகை வட்டாரத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் கல்யாணம் அவர்களின் மகள் வழி பேத்தி செல்வி.லக்‌ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று (ஜூன் 25) சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இதில், நடிகர் சிவக்குமார், பிரபல பரதநாட்டிய கல...
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி

செய்திகள்
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி   கார்த்தி பேசியதாவது: ”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான...
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.

செய்திகள்
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை' எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான 'எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்' எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கினர். மேலும் போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை பெரு மாநகராட்சி ஆணையரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன் போது சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் கூடுதல் ஆணையர் திரு. லோகநாதன், சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இண...
சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா

சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா

விளையாட்டு
சிலம்பம் நூல் வெளியீடு மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழாவிற்கு பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை, மற்றும் பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் பயிற்சிக் கூடம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரு.V.கிருபாநிதி (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) தலைமை வகித்தார். திரு.பவர் பாண்டியன் ஆசான் (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) மற்றும் திரு.K.கணேஷ்குமார் (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) முன்னிலை வகித்தனர். திரைப்படதயாரிப்பாளர் திரு.கலைப்புலி S.தாணு சிலம்பம் நூலை வெளியிட சிலம்பக்கலை பாதுகாவலர் திரு.N.R.தனபாலன் (TMASRDT-Chairman) நுாலை பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக யாத்திசை பட குழு பங்கேற்றனர். சிலம்பம் விளையாட்டு சான்றிதழை திரு.ராஜா அன்பழகன் MC (நியமன குழு உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி) வழங்கினார்....
ஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை வேலப்பன்சாவடியில் அக்ஷயா டிரஸ்ட்டின் இலவச முதியோர் இல்லம் திறப்பு

ஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை வேலப்பன்சாவடியில் அக்ஷயா டிரஸ்ட்டின் இலவச முதியோர் இல்லம் திறப்பு

செய்திகள்
ஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை வேலப்பன்சாவடியில் அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லம் திறப்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான திரு. பூச்சி.எஸ்.முருகன் திறந்து வைத்தார், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு இலாப நோக்கற்ற அறக்கட்டளையான அக்ஷயா டிரஸ்ட், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. முடிச்சூர், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் மற்றும் பாலவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அதன் இல்லங்கள் மூலம் 180 முதியவர்களை அக்ஷயா டிரஸ்ட் பராமரித்து வருகிறது. குடும்பத்தால் கைவிடப்பட்ட மூத்த குடிமக்களை முறையான மற்றும் விரிவான விசாரணைக்கு பிறகு கண்டறியும் அக்ஷயா டிரஸ்ட், அவர்களுக்கு தேவையான தங்குமிடம், ஆரோக்கியமான உணவு, மருத்துவ பராமரிப்பு, பொழுதுபோக்கு, மக...
விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

விளையாட்டு
கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார். அந்த தடகள வீரர்கள் விவரம்: 1. Dheena dhayalan - Pole vault (கோலூன்றி தாண்டுதல்) - All India Inter University & Khelo india University Games Medalist. 2. Hemamalini - Javelin throw (ஈட்டி எறிதல்) - State, National & All India Inter University Medalist. 3. S.V. Arun kumar - 100,200mts (Sprinter) - State & All india I...
சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற ,ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின்  மாணவி வே.ரிந்தியாவுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற ,ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் மாணவி வே.ரிந்தியாவுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டு

செய்திகள், விளையாட்டு
சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி வே.ரிந்தியா அவர்கள், ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெள்ளி, தங்கம், மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவ்வாறு உலகளவில் தமிழகத்தின் பெருமைதனை பறைசாற்றிக் கொண்டிருக்கும் வே.ரிந்திகா அவர்கள் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஷசுன் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவரின் வாழ்த்துதலையும் பாரட்டுதலையும் பெற்றார்....