Wednesday, July 15

இலக்கியம்

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

இலக்கியம், சினிமா
தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன். இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் ...
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

இலக்கியம், கல்வி
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு, பயில் வகுப்புகள் மூலம் இணைய வழியில் தமிழ் மொழியைத் தனித்துவமான அணுகுமுறையுடன் கற்பித்து வருகிறது. இவ்வகுப்புகளில், உலகம் முழுவதுமுள்ள தமிழார்வம் கொண்ட மாணவர்கள், வயதுவரம்பில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ் கற்று வருகின்றனர். இணைய வழியில் நேரடி அமர்வுகளின் மூலம் கற்பிக்கப்பட்ட இப்பயில் வகுப்புகள், இப்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகில் எங்கிருந்தும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தமிழைக் கற்கவியலும். முதற்கட்டமாக இந்த உலகத் தாய்மொழி நாளில், இரண்டு பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. - தமிழில் எழுத/ பட...
அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழாவில் இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” கவிதை புத்தகம் அறிமுகம்.

அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழாவில் இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” கவிதை புத்தகம் அறிமுகம்.

இலக்கியம்
அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழாவில் இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய "புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை" கவிதை புத்தகம் அறிமுகம். துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்பு ஆற்றினார். 1330 திருக்குறள் படி, 1330 பேர் பொங்கல் விட்டு, நேர்மை சுடர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் தேசிய விருது பெற்ற இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற "புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை" என்ற கவிதை புத்தகம் அறிமுகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் மாஸ் ஈவென்ட்ஸ் திரு முருகேசன் நன்றி உரைத்தார்....
ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது.- ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகர் கார்த்தி  பாராட்டு

ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது.- ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகர் கார்த்தி பாராட்டு

இலக்கியம், செய்திகள்
”நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம், ரம்யாவுடைய 'Stop Weighting' புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் வெளியிட்டார்கள் பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில் தனது பாராட்டுக்குரிய பயணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். முதன்முறையாக, அவர் தனது முதல் புத்தகமான 'ஸ்டாப் வெயிட்டிங்' மூலம் ஒரு எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என நேர்மறையான வகையில் வாசகர்கள்  எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்துள்ளது. சரியான டயட் உணவு மு...
கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்  வெளியிடப்பட்டது.

கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

இலக்கியம்
திரைப்பட வசனகர்த்தா கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் 'முக்கோண மனிதன்' சென்னை புத்தகக் கண்காட்சியில் 16.01.2023 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் நூலை வெளியிட இயக்குனர் என். லிங்குசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஷோபா சக்தி, கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பிருந்தா சாரதி, பேராசிரியர் இராம. குருநாதன் , பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்....
திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

இலக்கியம், செய்திகள்
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு,இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார், துணைவேந்தர் திருவாசகம், V.P. குமார், பேராசிரியர் ஆதிரா முல்லை உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்
ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

இலக்கியம்
பெருங்காமநல்லூரின் கலகக் குரல்...தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து ஓர்உலகக் குரல் என்று எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து பேசியிருக்கிறார். கபிலன்வைரமுத்து எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ஆகோள் என்ற நாவலின்அறிமுக விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதாவது: 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசைஎதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கையாக்கிஇருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கலவரத்தைமட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவணமாக முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற்கும் எ...
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

இலக்கியம், செய்திகள்
தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட எஸ் பி சக்ரபோர்த்தி என்கிற சோமன்.சக்ரபோர்த்தியின் பெற்றோர் மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறினர். சென்னையில் பிறந்து, அயன்புரத்தில் வளர்ந்த இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை குறித்து பேசிய சக்ரபோர்த்தி, "சிறு வயது முதலே தமிழ் மொழி மீது எனக்கு தீவிர பற்று ஏற்பட்டது. பள்ளி பருவத்தில் திருக்குறளில் உள்ள மனப்பாடச் செய்யுள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின்னர் திருக்குறளின் மொழிப் பெயர்ப்புகளைப் படிக்கும்போது, திருக்குறளை மிகவும் எளிமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிலர் இன்னுமொரு மொழிபெயர்ப்பு எதற்கு என்றும் ஐயம் எழுப்பினர். ஆனால், தமிழ் மொழிப் பற்...
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி

இலக்கியம்
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? * பிருந்தா சாரதி * இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாத மகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்தது வெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறது எழுத்தில் நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின் முகம் நீ நவீனத் தமிழின் அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாத மகாகவி நீ. பாட்டரசனே உன் மீசையின் ரசிகன் நான் அது தமிழுக்கு முளைத்த மீசை தமிழன்னையே முறுக்கிவிட்ட மீசை. மகன் மீசை முறுக்குவதைப் பார்த்து தாயே மகிழ்ந்தாள் அப்போது. முண்டாசுக் கவிஞனே உன் தலப்பாக்கட்டு தமிழுக்கு நீ சூட்டிய மகுடம் அல்லவா? நீ அணிந்த கோட்டு உன்னைத் தாக்கிய வறுமைக்கு நீ வைத்த வேட்டல்லவா? நீ கையில் ஏந்திய தடி உன் பேனாவின் பிறிதொரு வடிவம் அல்லவா? அன்னைத் தமிழுக்கு ஆயிரமாயிரம் ஆண்டு வரலாறு அதில் ஆயிரம் ஆயிரம் புலவர்கள் அவர்களில் நீ மட்டும்...
 கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

 கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

இலக்கியம், சினிமா
ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும் சிறப்பு காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகோள் குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில்: சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவு...