Sunday, April 19

கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

திரைப்பட வசனகர்த்தா கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் 16.01.2023 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் நூலை வெளியிட இயக்குனர் என். லிங்குசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஷோபா சக்தி, கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பிருந்தா சாரதி, பேராசிரியர் இராம. குருநாதன் , பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Spread the love