Wednesday, July 15

இலக்கியம்

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை.

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை.

இலக்கியம், சினிமா
என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை. அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் வரும் வரிகள்தான் இது. காத்தோடுதான் காத்தாக மெதப்போம் நீரோடுதான் நீராக கலப்போம் இயற்கையின் மடியில் கொஞ்சம் வா சோம்பல் முறிப்போம்… இதை எழுதியவர் வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன். இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார் இவர். தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரம்...
எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேச்சு

எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேச்சு

இலக்கியம், செய்திகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2022   கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டி இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது முதல் பரிசு 25000 இரண்டாவது பரிசு 15,000 மூன்றாவது பரிசு 10,000 மேலும் ஐம்பது கவிதைகளுக்கு தல ஆயிரம் ரூபாய் இந்த ஐம்பத்தி மூன்று கவிதைகளும் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் நூலாக வெளியிடப்படும் இந்த ஆண்டு வாடியது கொக்கு என்ற தலைப்பில் நூல் வெளியாகிறது முதல் பரிசு பெற்ற கவிதைகள் ஒரு வரியில் ஒவ்வொரு ஆண்டும் நூலின் தலைப்பாக வைக்கப்படும். இவ்வாண்டு முதல் பரிசை பெறுபவர் மலேசியாவைச் சேர்ந்த நடா. இரண்டாம் பரிசு ஆரணி இரா. தயாளன். மூன்றாம் பரிசு சென்னையைச் சேர்ந்த ஜி. கஜபதி *நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் பரிசுகள் வழங்கி நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிற...
 இரண்டு வசீகரிக்கும் பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை

 இரண்டு வசீகரிக்கும் பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை

இலக்கியம்
கேரளா, 1900. செல்வம், அழகு, அறிவு இவையெல்லாம் கொண்டவள் 16 வயது பத்மா. அவளை வணங்கும் கணவன், போற்றும் மாமியார் மற்ற அனைவரும் கண்டு வியக்கும். அவளுடைய ஆன்மா ஒரு விஷயத்திற்காக கிடந்துதவிப்பது: குழந்தைகள். வாரிசுக்காக குடும்ப அழுத்தங்களுக்கு அடிபணிந்து இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார் அவளுடைய கணவர். தலைகீழாக மாறுகிறது பத்மாவின் வாழ்க்கை. இன்றைய நாள், மும்பை. நைனா தனது வாழ்க்கையை விரும்பி வாழ்கிறாள்- விளம்பரத்தில் ஒரு உற்சாகமான தொழில், அவளுடைய வாழ்க்கையின் காதலை மணந்தார், மேலும் அவர்கள் ஒரு குடும்பத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள். மிகச்சரியாக இருக்கிறதா? இல்லை. நைனா தனது கணவருக்கு அவர் விரும்புவதைக் கொடுக்க முடியாது என்பதை விரைவில் கண்டுபிடித்தார். உறுதியான, அவர்கள் தங்கள் நம்பிக்கையை In vitro fertilization (IVF) மீது வைத்தனர். ஆனால் இது நைனாவின் வாழ்க்கையை விரைவில் துண்டாடும்...
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

இலக்கியம், சினிமா
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது....
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி & 2022 முடிவுகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி & 2022 முடிவுகள்

இலக்கியம்
வணக்கம்! தமிழ்க் கவிதை உலகின் தனித்த அடையாளமான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையிலும், ‘ஹைக்கூ’ கவிதை வடிவத்தை தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையிலும் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியை அறிவித்திருந்தோம். எங்களின் முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று, எட்டாயிரத்து நாநூறு கவிதைகளை அனுப்பியிருந்தனர். நடுவர்கள் குழுவின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற கவிதைகளை இயக்குநர் என்.லிங்குசாமி அவர்கள் தேர்வு செய்துள்ளார். கவிதை எழுதியவர்களின் பெயர்களை இத்துடன் இணைத்துள்ளோம். முதல் பரிசு (ரூபாய் 25,000) : நடா (மலேசியா) இரண்டாம் பரிசு (ரூபாய் 15,000) : இரா.தயாளன் (ஆரணி) மூன்றாம் பரிசு (ரூபாய்: 10,000) : ஜி.கஜபதி (சென்னை)...
ஏப்ரல் 17 முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

ஏப்ரல் 17 முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

இலக்கியம், சினிமா
  கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது நாட்படு தேறல் இரண்டாம் பருவம் தயாராகியிருக்கிறது. 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறல் 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது. ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி - இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது. மேல்நாடுகளில் திரைப்படங்களைவிட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்க...
“வைரமுத்து இலக்கியம் 50”

“வைரமுத்து இலக்கியம் 50”

இலக்கியம்
வைகறை மேகங்களில் உதித்திட்ட கதிரவன் ,பொன்மாலை பொழுதில் புறப்பட்ட பூபாளம் என திகழும் கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் எழுத்திலக்கிய துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவதையொட்டி ‘வைரமுத்து இலக்கியம் 50’ எனும் பொன்விழா இலட்சினையை சமீபத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் வெளியிட்டார்.   கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 1972இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவராக பயின்று கொண்டிருந்த காலத்தில் அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’வெளிவந்தது, அந்த நூலுக்கு கவியரசு கண்ணதாசன் அணிந்துரை வழங்கியிருந்தார். வைகறை மேகங்களில் துவங்கிய அவரது இலக்கியப்பணி இந்த 50 ஆண்டுகளில் 38 நூல்களையும், 7500 பாடல்களையும் வழங்கியிருக்கிறது. கவிப்பேரரசு அவர்களின்இலக்கியப் பொன்விழா இந்த ஆண்டுமுழுவதும் நம் நாட்டிலும் பிற நாடுகலிலும் சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது . கவிப்பேரரசுவின் பட...
இன்று திருவள்ளுவர் தினம்

இன்று திருவள்ளுவர் தினம்

இலக்கியம்
உலக பொது மறை நூலான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . தனி சிறப்போடு திகழும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கருதப்படுகிறது. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 133 அதிகாரங்கள் 1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் திருக்குறளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய குறிப்பு என்னவெனில் தமிழ் என்ற சொல் அதில் பயன்படுத்தபடவேயில்லை என்பதாகும் . வாழ்வியல் நெறி முறைகளை வையகத்தில் வாழும் மாந்தர்க்கு ரத்னசுருக்கமாக உவமைகளுடன் விளக்கி சொல்லும் திருக்குறள் ,ஆங்கில மொழியில் முதன்முதலாக ஜி .யு . போப் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது . மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி எல்லா மக்களுக்கும் பொதுவான முறையில் நல்ல சிந்தனைளை தரக்கூடிய திருக்குறளை தந்த வள்ளுவப்பெருமகனார்க்கு மேலும் சிறப்பு சேர்க்...