Thursday, April 16

இலக்கியம்

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி & 2022 முடிவுகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி & 2022 முடிவுகள்

இலக்கியம்
வணக்கம்! தமிழ்க் கவிதை உலகின் தனித்த அடையாளமான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையிலும், ‘ஹைக்கூ’ கவிதை வடிவத்தை தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையிலும் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியை அறிவித்திருந்தோம். எங்களின் முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று, எட்டாயிரத்து நாநூறு கவிதைகளை அனுப்பியிருந்தனர். நடுவர்கள் குழுவின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற கவிதைகளை இயக்குநர் என்.லிங்குசாமி அவர்கள் தேர்வு செய்துள்ளார். கவிதை எழுதியவர்களின் பெயர்களை இத்துடன் இணைத்துள்ளோம். முதல் பரிசு (ரூபாய் 25,000) : நடா (மலேசியா) இரண்டாம் பரிசு (ரூபாய் 15,000) : இரா.தயாளன் (ஆரணி) மூன்றாம் பரிசு (ரூபாய்: 10,000) : ஜி.கஜபதி (சென்னை)...
ஏப்ரல் 17 முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

ஏப்ரல் 17 முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

இலக்கியம், சினிமா
  கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது நாட்படு தேறல் இரண்டாம் பருவம் தயாராகியிருக்கிறது. 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறல் 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது. ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி - இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது. மேல்நாடுகளில் திரைப்படங்களைவிட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்க...
“வைரமுத்து இலக்கியம் 50”

“வைரமுத்து இலக்கியம் 50”

இலக்கியம்
வைகறை மேகங்களில் உதித்திட்ட கதிரவன் ,பொன்மாலை பொழுதில் புறப்பட்ட பூபாளம் என திகழும் கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் எழுத்திலக்கிய துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவதையொட்டி ‘வைரமுத்து இலக்கியம் 50’ எனும் பொன்விழா இலட்சினையை சமீபத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் வெளியிட்டார்.   கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 1972இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவராக பயின்று கொண்டிருந்த காலத்தில் அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’வெளிவந்தது, அந்த நூலுக்கு கவியரசு கண்ணதாசன் அணிந்துரை வழங்கியிருந்தார். வைகறை மேகங்களில் துவங்கிய அவரது இலக்கியப்பணி இந்த 50 ஆண்டுகளில் 38 நூல்களையும், 7500 பாடல்களையும் வழங்கியிருக்கிறது. கவிப்பேரரசு அவர்களின்இலக்கியப் பொன்விழா இந்த ஆண்டுமுழுவதும் நம் நாட்டிலும் பிற நாடுகலிலும் சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது . கவிப்பேரரசுவின் பட...
இன்று திருவள்ளுவர் தினம்

இன்று திருவள்ளுவர் தினம்

இலக்கியம்
உலக பொது மறை நூலான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . தனி சிறப்போடு திகழும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கருதப்படுகிறது. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 133 அதிகாரங்கள் 1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் திருக்குறளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய குறிப்பு என்னவெனில் தமிழ் என்ற சொல் அதில் பயன்படுத்தபடவேயில்லை என்பதாகும் . வாழ்வியல் நெறி முறைகளை வையகத்தில் வாழும் மாந்தர்க்கு ரத்னசுருக்கமாக உவமைகளுடன் விளக்கி சொல்லும் திருக்குறள் ,ஆங்கில மொழியில் முதன்முதலாக ஜி .யு . போப் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது . மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி எல்லா மக்களுக்கும் பொதுவான முறையில் நல்ல சிந்தனைளை தரக்கூடிய திருக்குறளை தந்த வள்ளுவப்பெருமகனார்க்கு மேலும் சிறப்பு சேர்க்...