Tuesday, September 1

சினிமா

*‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!*

*‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!*

சினிமா
*‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!* யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற...
*“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!*

*“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!*

சினிமா
*பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் உருவாக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் திரைப்படம் “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று பான் இந்தியா வெளியீடு !!* மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து  இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான “மஹாவீர் கர்ணா” படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ராட்சசன் மற்றும் கில்லாடி உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்த...
‘ராம் அண்ட் லீலா’ – திரை விமர்சனம்

‘ராம் அண்ட் லீலா’ – திரை விமர்சனம்

சினிமா
காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் முன்போ அல்லது காதல் வசப்பட்ட பிறகோ காதலி, காதலனுக்கு சில கண்டிஷன்கள் போடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ,இப்படியும் ஒரு கண்டிஷனா? என ஆச்சரியப்படும் அளவிற்கு“மாலை 6 மணிக்கு மேல் என்னை சந்திக்கக்கூடாது… எனும் காதலியின் இந்த ஒரு கண்டிஷன், ராமின் காதல் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றினால் என்ன ஆகும்?அந்த ஒரே கேள்வியைச் சுற்றி காதல், காமெடி, கலாட்டா, குடும்பம் என பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து கொடுத்திருக்கிறது ‘ராம் அண்ட் லீலா’. திருமண வயதை கடந்தும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் ஏக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ராம், ஒரு ரெயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அந்த காதலுக்கு வர்திகா போடும் ஒரே நிபந்தனை — “மாலை 6 மணிக்கு மேல் என்னை சந்திக்கக்கூடாது… நான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்” என்பதுதான்.வர்திகா...
*நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி*

*நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி*

சினிமா
*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது. ஒரு சில கமர்சியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நிச்சயமாக மனதிற்குள் தோன்றும் .அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறு திரை கதையுடன் பரபர கதைகளைத்துடன் வரப் போகும் படம் தான் கிட்டி.   நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் ...
ஒன் மேன் – திரை விமர்சனம்

ஒன் மேன் – திரை விமர்சனம்

சினிமா
ஒரு படத்தை உருவாக்க நூற்றுக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தேவைப்படும். ஆனால், ஒரு மனிதனே அந்தப் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டால்? அந்த அசாத்திய முயற்சிதான் ‘ஒன் மேன்’. தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் பல முக்கியப் பொறுப்புகளை ஒரே மனிதர் ஏற்றுக்கொள்வது புதிதல்ல. இயக்குநர் டி.ராஜேந்தர் படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு, பாடல் ,பின்னணி பாடகர் என பல துறைகளில் அவரது பங்களிப்பை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி, படத்தின் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து, தொழில்நுட்பப் பணிகளையும் கவனித்து, பின்னணி வேலைகள் வரை தனி மனிதராக ஒரு முழுத் திரைப்படத்தையே உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். நான்கு நண்பா்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் உட்பட ஐந்து நபர்கள் ஒரு பயணத்தை ம...
இருமுடி கட்டு – திரைப்பட விமர்சனம்

இருமுடி கட்டு – திரைப்பட விமர்சனம்

சினிமா
ஆன்மீகம்... குடும்ப பாசம்... மர்மங்கள்... இவற்றை ஒரே கதைக்குள் இணைத்து, ஒரு தந்தையின் உணர்வுப்பூர்வமான பயணமாக சொல்ல முயற்சிக்கிறது ‘இருமுடி கட்டு’. வருடம் முழுவதும் முரட்டுத்தனமாகவும் குடிப்பழக்கத்துடனும் வாழும் ஒரு மனிதர்... ஆனால், ஐயப்பனை தரிசிக்க விரதம் தொடங்கியதும் முற்றிலும் வேறொரு மனிதராக மாறுகிறார். பக்தி, குடும்பம், மகள் மீதான பாசம் என அவரது வாழ்க்கை ஒரு பக்கம் நகர, மறுபக்கம் அவரைச் சுற்றி நடக்கும் மர்ம மரணங்கள் கதைக்கு திரில்லர் சாயலைக் கொடுக்கின்றன. இந்த இரு உலகங்களையும் இணைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘இருமுடி கட்டு’. திரிநாத் என்ற கதாபாத்திரத்தில் ரவி தேஜா, மனைவி காவிரி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கம் கொண்ட முரட்டுத்தனமான மனிதராக இருந்தாலும், வருடந்தோறும் ஐயப்பனுக்காக விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.விரத காலங்களில் க...
மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம் 

மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம் 

சினிமா
ஒரு திருமணம்… ஒரு எதிர்பாராத உண்மை… அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதன்… அதன் பிறகு நடக்கும் உணர்வுப் போராட்டம் – இதுதான் ‘மொத ராத்திரி’ படத்தின் மையக்கதை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்புகிறார் ரிஷிகாந்த். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். திருமணத்தில் ஆர்வம் இல்லாத அவர், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் சம்மதிக்கிறார். இதையடுத்து அனிஷ்மா அனில்குமாருடன் அவரது திருமணமும் நடைபெறுகிறது.ஆனால், திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் செல்லும் நேரத்தில்தான் ரிஷிகாந்தின் வாழ்க்கையை மட்டுமல்ல, அந்த இரவின் அர்த்தத்தையே மாற்றும் ஒரு உண்மை தெரிய வருகிறது.தன்னை திருமணம் செய்திருக்கும் அனிஷ்மா ஏற்கனவே வேறொருவரை காதலித்து வருகிறார். குடும்பத்தினரின் கட்டாயத்தால் இந்தத் திருமணத்திற்கு அவர் சம்மதித்திருக்கிறார் என்பதை அறியும் ரிஷிகா...
*”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!*

*”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!*

சினிமா
*”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”...நடிகர் அப்துல் லீ!* ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார். திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார். வேலம்மாள் பள்ளியின் முன்னாள...
*வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!*

*வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!*

சினிமா
*வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!* தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது. குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தர...
*தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!*

*தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!*

சினிமா
*தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!* இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது! ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படு...