இன்று திருவள்ளுவர் தினம்
உலக பொது மறை நூலான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . தனி சிறப்போடு திகழும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கருதப்படுகிறது.
திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 133 அதிகாரங்கள் 1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் திருக்குறளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய குறிப்பு என்னவெனில் தமிழ் என்ற சொல் அதில் பயன்படுத்தபடவேயில்லை என்பதாகும் .
வாழ்வியல் நெறி முறைகளை வையகத்தில் வாழும் மாந்தர்க்கு ரத்னசுருக்கமாக உவமைகளுடன் விளக்கி சொல்லும் திருக்குறள் ,ஆங்கில மொழியில் முதன்முதலாக ஜி .யு . போப் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது .
மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி எல்லா மக்களுக்கும் பொதுவான முறையில் நல்ல சிந்தனைளை தரக்கூடிய திருக்குறளை தந்த வள்ளுவப்பெருமகனார்க்கு மேலும் சிறப்பு சேர்க்...




