Friday, April 24

Author: admin

ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் “யசோதா” படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது,!!

ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் “யசோதா” படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது,!!

சினிமா
முன்னதாக வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பிபையும் முடித்துள்ளது. மூத்த தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்களின் 14வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறுகையில்.., இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் ...
Thor: Love and Thunder Review

Thor: Love and Thunder Review

சினிமா
Thor: Love and Thunder Review ஆஸ்கார் வின்னர் டைகா வெயிட்டிடி இயக்கிய இந்தப் படத்தில், ரசிகர்களின் இதயங்களை வென்ற அவெஞ்சர் தோர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நட்சத்திர நடிகர்கள் டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் மற்றும் கிறிஸ்டியன் பேல் ஆகியோர் நடித்துள்ளார்கள்   Marvel Studios's Thor: Love and Thunder தன்னுடைய இனமே அழிந்து போன நிலையில், மிச்சமிருக்கும் தன்னுடைய மகளையாவது ஏதோ ஒரு கடவுள் எப்படியாவது காப்பாற்றி விட மாட்டாரா என உதவிகேட்டு செல்லும் நிலையில், கடவுள்கள் விதி வசம் என கூறிய நிலையில் தனது மகளை இழந்த கோர், கடவுள்கள் மீது கோபமுற்று இனி உங்களை போன்றவர்களை கொல்வது தான் என் வேலை என காட்'ஸ் பட்சராக மாறி விட அவனிடம் இருந்து கடவுள்களையும் ஆஸ்கார்டில் உள்ள குழந்தைகளையும் தோர் எப்படி காப்பாற்றுகிறார் ? தோர் காதலிக்கு கேன்சர் என்றும் அவர் விரைவில் இறந்து விடுவார் என்னும் சூழ்நி...
மாயோனுக்கும், பக்ரீத் பண்டிகைக்குமான தொடர்பு !

மாயோனுக்கும், பக்ரீத் பண்டிகைக்குமான தொடர்பு !

சினிமா
மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா ! ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம், எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக “மாயோன்” திரைப்படக்குழு“பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களை கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பை தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. “மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரபட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பை பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாடுவோம் என வா...
“தி வாரியர்” தீவிர புரமோஷன் பணிகளின் நடுவே, நடிகர் ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார்

“தி வாரியர்” தீவிர புரமோஷன் பணிகளின் நடுவே, நடிகர் ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார்

சினிமா
ராம் பொத்தினேனியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படமான ‘ தி வாரியர்” திரைப்படம் ஜூலை 14, 2022 அன்று வெளியாக உள்ளது. இது நடிகர் ராமின் முதல் தமிழ் படம். எனவே, தற்போது இந்த படத்தை தமிழில் விளம்பரப்படுத்தும் பணியில் அவர் பிஸியாக உள்ளார். சரளமாக தமிழ் பேசும் ராம், தமிழ் ஊடகங்களுடன் உரையாடி விரிவான பேட்டிகளை கொடுத்து வருகிறார். இன்று புரமோஷன் நிகழ்ச்சியின் போது, ​​ராம் பொதினேனி தனது அன்பு நண்பரான நடிகர் சிலம்பரசன் அவர்களை சந்தித்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரத்தை பகிர்ந்துகொண்டனர். அந்த புகைப்படம் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராம் பொத்தினேனி தனது ஸ்டைலான தோற்றத்தால் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறார், அதே நேரத்தில் சிம்பு தனது முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் நீண்ட தாடியால் அனைவரையும் ஈர்த்து வருகிறார். ராம் பொத்தினேனியின் அன...
லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’

லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’

சினிமா
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடியும் வரை காத்திரு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை பற்றி பேசிய ரவீந்திரன், ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக 'விடியும் வரை காத்திரு' இருக்கும் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறினார். "ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலை...
லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

சினிமா
லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய கல்வெட்டு ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாக படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான தமிழர்களுக்கும்,...
விஜய் ஆண்டனியின் “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் பிருத்வி அம்பருக்கு நடிகர் நகுல் டப்பிங் பேசியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் பிருத்வி அம்பருக்கு நடிகர் நகுல் டப்பிங் பேசியுள்ளார்.

சினிமா
கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும்,  பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பரின் காட்சிகளுக்கு, பன்முக திறமை கொண்ட நடிகர் நகுல் தமிழில் டப்பிங் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பன்முக நடிகரான நடிகர் நகுல், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு என எந்த ஒரு அரங்கிலும் தனது திறனை வெளிக்கொண்டுவர தவறியதில்லை. அவர்  தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைக்கதைகள், அவர் கதாப்பாத்திரத்திற்காக தரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. தமிழ் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கூட்டத்தின் பணியாற்றி அனைவரது...
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா

சினிமா
ஒரு நாவலை படமாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது; அதை மணி சார் அழகாக செய்து முடித்திருக்கிறார் - நடிகர் கார்த்தி லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், 5 பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்....
 பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

 பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

செய்திகள்
பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92 வது பிறந்த நாள் ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது. Dr.M.பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் ssvm institutions இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணா அவர்களின் பிரதான சீடர்களான Dr. K. கிருஷ்ணகுமார் மற்றும் திருமதி.பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழு பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி துவக்கி வைத்தனர். கர்நாடக இசை உலகின் உச்சத்தை தொட்ட இசை கலைஞர்ககள் Dr.T.K.மூர்த்தி (மிருதங்கம்), திரு.M. சந்திரசேகரன் ( வயலின்)...
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

சினிமா
தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மற்றும் சாவி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். வெல்டன், கடைசி பெஞ்ச் கார்த்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “மூத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார் ,விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை K.R.விஜயா நட...