Sunday, April 26

Author: admin

காலங்களில் அவள் வசந்தம்  – விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

சினிமா
                                                                                  ஷ்யாம் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாய் கௌசிக் ராம் நடித்திருக்கிறார். இவர் திரை படங்களில் வருவது போன்றே யதார்த்தமான இயல்பு  வாழ்க்கையிலும் காதல் வரும் என்று நினைக்கிறார்.திரைப்படங்களில்  பார்ப்பதை  போலவே  காதலிக்க  வேண்டும் என்று லிஸ்ட் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஹிரோஷினி என்ற பெண்ணிடம் தன் காதலை சொல்லுகிறார்,  ஆனால் அஞ்சலியுடன்  திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது வெள்ளி திரையில் வருவதைப் போலவே தன்  இல்லற யதார்த்த திருமண வாழ்க்கையினையும்   வாழ நினைக்க்கும்  நாயகனுக்கு நிஜ வாழ்க்கை இதுதான் என்று உணர  வைக்கிறார் நாயகி அஞ்சலி .ஆனால் இதனால்  அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் மன முறிவு  ஏற்பட்டு  விவாகரத்து வரை செல்கிறது. இந்த நிலையில்   ஹிரோஷினியை கௌசிக் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிற...
‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

சினிமா
தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.   அஜித்குமார் நடிப்பில் 'மங்காத்தா' படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் 'பிக்பாஸ்' மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியான 'ஈமோஜி' வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் மஹத், தமிழில் நாயகனாக சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், அதிரடியாக பிரமாண்டமான இந்தி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகை...
Padavettu Movie Review

Padavettu Movie Review

சினிமா
ஒரு பழமையான வீட்டில் ரவி (நிவின்பாலி ) தனதுஅத்தையான புஷ்பாவுடன் (ரம்யா சுரேஷ்) வாழ்ந்து வருகிறார்  ரவி (நிவின் பாலி) ஒரு தடகள வீரர் மற்றும் ஸ்போர்ட்ஸ் நபராக இருந்தவர், ஆனால் ஒரு விபத்தின் காரணமாக அவரது வாழ்க்கை தடம் மாறுகிறது அவர் ஒரு சோம்பலான நபராக மாறி, அவரது சிறிய வீட்டில் விளையாடுவது மற்றும் எதையும் செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பது என்றே காணப்பட்டார் அவரது பழமையான வீட்டைப் புதுப்பித்து தருவதன் மூலம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பை அங்குள்ள ​​எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறார்கள், அதன்படி (ஷம்மி திலகன்) தலைமையிலான கட்சி ரவியின் வீட்டை புனரமைத்து,அந்த வீட்டின் முன்பாக பலகையை நிறுவுகிறது.அதன் பின் ரவியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.அந்த திருப்பம் ரவியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன என்பதே  படத்தின் எஞ்சிய கதை. கதையின்...
அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள்

அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள்

சினிமா
ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லயே' படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள் இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ...
லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..

சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் லைகா உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது .இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்...
ஹரிஷ் கல்யாண் திருமண நிகழ்வு புகைப்படங்கள்

ஹரிஷ் கல்யாண் திருமண நிகழ்வு புகைப்படங்கள்

சினிமா
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் திருமணம் பாரம்பரிய முறையில் சென்னையில் இன்று நடைபெற்றது, மணமகன் ஹரிஷ் கல்யாண் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து எழிலான தோற்றத்துடன் காணப்பட்டார் மணமகள் நர்மதா சிவப்பு நிற புடவையில் அழகுற காணப்பட்டார் இந்த திருமணம் குறித்த தகவல்களையும் ஹரிஷ்கல்யாண் முன்பே அறிவித்திருந்தார் இன்று நடைபெற்ற திருமணம் குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் படங்கள் வைரலாகி இருந்தது தன்னுடைய திருமணம் ,பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் காதல் திருமணம் அல்ல என்றும் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இருமனம் இணைந்த இந்த திருமண வாழ்வு சிறப்புடன் அமைய , அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.    ...
வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  

வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  

சினிமா
EINFACH ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் பூஜை இன்று (28.10.22) காலை சென்னையில் உள்ள வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது. 1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குநர் தயாள் பத்மனாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார்.  கன்னடத்தில...
11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’

11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’

சினிமா
11:11 தயாரிப்பு நிறுவனம் டாக்டர். பிரபு திலக் வழங்கி வரும் படங்கள் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'யூகி' படத்தை வழங்குகின்றனர். 11:11 புரொடக்‌ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், "'யூகி' படத்தின் உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில் பெருமை. பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையிலான சிறப்பான சில அம்சங்கள் இந்தக் கதையில் உள்ளது. 11:11 புரொடக்‌ஷன்ஸ் எப்போதுமே தனித்துவமான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும். அந்த வரிசையில் 'யூகி' படமும் நிச்சயமும் தனித்துவமான கதையாக அமையும் நடிகர்கள் கதிர், நடராஜன் சுப்பிரமணியம், நரேன், ஆன...
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. படத்தின் இசை வெளியீட்டு விழா

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. படத்தின் இசை வெளியீட்டு விழா

சினிமா
செம்பி இசை வெளியீட்டு விழா !!! Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நடிகை கோவை சரளா பேசியதாவது... இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடி...
புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து, இயக்கி புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பொள்ளாச்சி”திரைப்பட இசை வெளியீட்டு விழா!!

புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து, இயக்கி புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பொள்ளாச்சி”திரைப்பட இசை வெளியீட்டு விழா!!

சினிமா
புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து, இயக்கி புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பொள்ளாச்சி”இப்படத்தின் இசை வெளியீடு அரசியல் ஆளுமைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்..நடிகர் சங்கர் பேசியதாவது.. நான் மேடையில் இதுவரை பேசியதில்லை. என் முதல் படத்திற்கு பெரிய ஆளுமைகள் வந்திருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஶ்ரீகாந்த் தேவா அட்டகாசமாக பாடல்கள் தந்திருக்கிறார். படம் மிக நன்றாக வந்திருக்கிறது. எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நேசம் முரளி பேசியதாவது… இந்தப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, கடுமையாக உழைத்து இந்தப்படத்தை ...