கலகத் தலைவன்- விமர்சனம்
கார்ப்ரேட் நிறுவனம் ஒன்று அதிகமான மைலேஜ் தரக்கூடிய டிரக்கை தயாரிக்கிறது.ஆனால் அது மாசு கட்டுப்பாடு குறியீட்டை அளவுகளை தாண்டி புகை வெளிவிடும் என்று தெரிய வருவதால் அதற்கு அனுமதி கிடைக்காது என்ற நிலை ஏற்படுகிறது இந்த ரகசியம் வெளியில் கசிந்து விட பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. கம்பெனி தகவல் தரவுகள் வெளியானது எப்படி? என்பதை கண்டுபிடிக்க ஒருவரை(ஆரவ்) நிறுவன அதிபர் நியமிக்கிறார்.கார்ப்ரேட் நிறுவனங்களின் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த திரு (உதயநிதி) திட்டமிட்டு ரகசியங்களை கைப்பற்றும் விவரம் அறிந்து அவரை நெருங்குகிறார் .அதன் பின் என்ன நடந்தது ? திருமாறன் எதற்காக வஜ்ராவை அழிக்க போராடுகிறார் என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது படத்தின் மீதிக்கதை.
திருமாறன் என்னும் பாத்திரத்தில் கதை நாயகனாய் நடித்துள்ள உதயநிதிக்கு, இந்தப் படத்தில் பல உ...









