Tuesday, June 2

சினிமா

*மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்*

*மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்*

சினிமா
*‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிறகு’* ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் ( First Copy Productions ) சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர். ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, கோவையைச் சேர்ந்த அக்ஷிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் குரோலி இசையமைக்க, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அருண்குமார் வி.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். *‘சிறகு’ படம் குறித்து தயாரிப்பாளர் மாலா மணியன் கூறும்போது,* “எந்த காலத்திற்கும் ஏற்ற ...
*நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ‘உயிரே உயிரே’ (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்*

*நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ‘உயிரே உயிரே’ (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்*

சினிமா
*செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட 'மென்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்* தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இய...
*‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் !!*

*‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் !!*

சினிமா
*ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட   'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !!* மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஜ...
*ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!*

*ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!*

சினிமா
*ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!* நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும். ‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண...
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

சினிமா
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!  பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.   நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்...
*விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!*

*விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!*

சினிமா
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!* ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது படம் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த செழுமையா...
*அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்*

*அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்*

சினிமா
*அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்* 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது. டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரி...
*ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது*

*ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது*

சினிமா
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது. Neo Castle Creations-இன் சத்யா கரிகாலன், Million Dollar Studios-ன் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின்...
’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

சினிமா
*பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!* தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி- சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைவத...
’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’- திரை விமர்சனம்

’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’- திரை விமர்சனம்

சினிமா
தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில், சீதாராம் பென்சி கேஸ் நம்பர் 18 மற்றும் கேஸ் ஆஃப் கொண்டனா என்னும் பட பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள படம் ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’. உடுப்பி பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் கதையின் நாயகன் விஜய் ராகவேந்திரா,அந்தப் பகுதியில் பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள், கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த கொலைகளை செய்திருப்பது ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது .மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் குறிப்பிட்ட வயதினைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் .இந்தக் கொலைகளை செய்பவர் யார் ? எதற்காக இந்த கொலைகள் செய்யப்படுகின்றன ?இதன் பின்னணி என்ன? இவைகளை கண்டறிய கதையின் நாயகன், காவல்துறை அதிகாரி விஜயராகவேந்திரா களமிறங்குகிறார். அவரால் கொலையாளியை பிடிக்க முடிந்ததா ?அதன் பின் நட...