Monday, April 27

Author: admin

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமா
'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது. 'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார...
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி

இலக்கியம்
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? * பிருந்தா சாரதி * இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாத மகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்தது வெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறது எழுத்தில் நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின் முகம் நீ நவீனத் தமிழின் அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாத மகாகவி நீ. பாட்டரசனே உன் மீசையின் ரசிகன் நான் அது தமிழுக்கு முளைத்த மீசை தமிழன்னையே முறுக்கிவிட்ட மீசை. மகன் மீசை முறுக்குவதைப் பார்த்து தாயே மகிழ்ந்தாள் அப்போது. முண்டாசுக் கவிஞனே உன் தலப்பாக்கட்டு தமிழுக்கு நீ சூட்டிய மகுடம் அல்லவா? நீ அணிந்த கோட்டு உன்னைத் தாக்கிய வறுமைக்கு நீ வைத்த வேட்டல்லவா? நீ கையில் ஏந்திய தடி உன் பேனாவின் பிறிதொரு வடிவம் அல்லவா? அன்னைத் தமிழுக்கு ஆயிரமாயிரம் ஆண்டு வரலாறு அதில் ஆயிரம் ஆயிரம் புலவர்கள் அவர்களில் நீ மட்டும்...
‘குருமூர்த்தி’- விமர்சனம்

‘குருமூர்த்தி’- விமர்சனம்

சினிமா
பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ள குருமூர்த்தி படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார். குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோலில் நட்டியும், பூனம் பாஜ்வா பிரதான நாயகியாகவும் நடித்துள்ளார்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி மறு பிரவேசம் செய்துள்ளார்.மேலும் இப்படத்தில் ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம்,சஞ்சனா சிங், அஸ்மிதா என் நட்சத்ரப்பட்டாளமே நடித்துள்ளார்கள், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.எஸ். என். பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார். ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் ஒரு பெரிய பெட்டியில் எடுத்துச் செல்கிறார்.ஐந்து கோடி என்கிற போது அது கறுப்புப் பணம் தானே? அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில...
லவ் டுடே படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் -பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் -பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

Uncategorized, சினிமா
பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த லவ் டுடே குழு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, சிஎஃப்ஓ ரங்கராஜன், நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சிஎஃப்ஓ ரங்கராஜன், "நல்ல கதையம்சம் கொண்ட ப...
‘வரலாறு முக்கியம்’- விமர்சனம்

‘வரலாறு முக்கியம்’- விமர்சனம்

சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. யூடியூப் சேனல் வைத்து இருப்பவர் ஜீவா,ஆசிரியரான அவரது அப்பாவாக கே.எஸ். ரவிக்குமாரும், அம்மா சரண்யா பொன்வண்ணனும் அவருடன் உள்ளர்கள் . கேரளாவில் இருந்து அக்கா தங்கைகளான் காஷ்மீரா மற்றும் பிரக்யா குடும்பத்துடன் அதே தெருவில் வந்து குடியேறுகிறார்கள் ,காஷ்மீராவின் தந்தை தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார். ஜீவா காஷ்மீராவை ஒருதலையாக காதலித்து பிறகு பின்னர் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கின்றார்கள் அதன்பின்னர் நடந்தது என்ன? அவர்கள் காதல் நிறைவேறியதா?என்பதை ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக சொல்லி இருப்பதுதான்வரலாறு முக்கியம் படத்தின் கதை . கலகப்பான பக்கத்து வீட்டு பையன் போன்றதொரு கதாபாத்திரம...
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்- விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்- விமர்சனம்

சினிமா
எண்ணற்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் ஒரு சில படங்களில் நாயகனாயும் தன்னுடைய தனிப்பட்ட உடல்மொழியாலும் , வசன உச்சரிப்பாலும் ஏராளாமான ரசிகர்களை கொண்டுள்ள வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மீண்டும் மைய நாயகனாய் களம் இறங்கி உள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். பணக்கார வீட்டு நாய்களை கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘ கடத்தல் மன்னன் நாய் சேகராக வடிவேலு நடித்திருக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், நாய்களை கடத்தும் நாய்சேகர் , ரௌடி ஒருவரின் நாயைக் கடத்துவதால் வம்பில் சிக்கி க்கொள்கிறார். அதன் பின்னர் தன்னுடைய சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்திருப்பத்தை அறிந்து அந்த நாயை மீட்டு கொண்டு வர கிளம்புகிறார்,இறுதியில் தந்து சொந்த நாயை அவர் மீண்டும் மீட்டு, எப்படி கொண்டு வந்தார்.என்புதுதான் படத்தின் எஞ்சிய கதை.பல பவருடங்களாய் திரையில் பார்க்கமுடியாத வைகைபுயலை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாய்...
‘விஜயானந்த்’ -விமர்சனம்

‘விஜயானந்த்’ -விமர்சனம்

சினிமா
கர்நாடகாவில் ,சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விஜயானந்த்’ .பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் உருவானவிதம், அந்த நிறுவனத்தை கட்டமைக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஷ்வர் எப்படியெல்லாம் உழைத்தார், என்பதை ஒரு சுயசரிதை ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த். கர்நாடகாவில் கதக் என்ற இடத்தில் இரண்டு சகோதரர்களுடன் பிறந்து ,தந்தை பி.ஜி. சங்கேஷ்வர் நடத்தி வந்த பிரிண்டிங் பிரஸ் தொழிலில் பல புது தொழில் நுட்பங்களை கொண்டு ,அதில் வளர்ச்சியை கொண்டு வந்த பின் விஜய் சங்கேஷ்வர் மேலும் தன்னுடைய முயற்சியில் ஒரு லாரியை வாங்கி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபடுகிறார் அதன் பின் பத்திர...
கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் இணைந்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் இணைந்துள்ளார்.

சினிமா
தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !! சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம்,  அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ள...
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சினிமா
படப்பிடிப்புடன் தொடங்கிய நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி - ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், 'NBK108' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். தம்மி ராஜு பட தொகுப்பாளராக பணியாற்ற, கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக வி. வெங்கட் பணியாற்றுகிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்று...
கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !!

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !!

சினிமா
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவது மட்டுமல்லாமல் தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், படக்க...