Tuesday, May 26

Author: admin

‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம்,  சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம்,  சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

சினிமா
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இயற்கை அன்னையின் அழகை அங்கீகரித்து ‘மன்னிப்பு’ என்ற அழகிய சுயாதீன ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். இது குறித்து ரனினா கூறுகையில் “இந்தப் பாடலை 16 வயதில் இசையமைத்தேன் மற்றும் இந்த பாடல் எனது ஆத்மாவின் ஆழத்தில் இருந்து உருவானது. பெல்காமில் வேறு பாடலுக்கு இசையமைக்கும் போது இந்த அற்புதம் நடந்தது. அந்தி நேரத்தில் நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தேன். நான் நிலாவை பார்த்து எனது  நன்றியுணர்வை வெளிப்படுத்தினேன், கடவுளுக்கு எனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினேன். ஒளி போன்ற அத்தியாவசியமான ஒன்றை இயற்கை நமக்கு எவ்வா...
நடிகர் ரஹ்மான்  பிறந்த நாளையொட்டி ,காப்பகங்களில் சேவை செய்து அவரது ரசிகர்கள்  பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

நடிகர் ரஹ்மான் பிறந்த நாளையொட்டி ,காப்பகங்களில் சேவை செய்து அவரது ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

சினிமா
இன்று (மே 23) நடிகர் ரஹ்மான் பிறந்த நாள். மலையாளத்தில் அறிமுகமாகி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான். கேரள ரசிகர்கள் இவரை எவர் க்ரீன் ஹீரோ என்றே அழைக்கிறர்கள். இவரது பிறந்த நாளை, தமிழ் மற்றும் கேரளாவில் உள்ள ரசிகர் மன்றங்கள் கொண்டாடி வருகிறா்கள். அவரது ரசிகர்கள் முதியோர்,ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர் , அனாதை இல்லங்களில் பொது தொண்டு செய்து வருகிறார்கள். இன்று கேரளா மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள ஶ்ரீபார்வதி சேவா நிலையம் மன நல மற்றும் முதியோர் காப்பகத்தில் சேவை செய்து ரசிகர்கள் ரஹ்மானின் பிறந்த நாள் கொண்டாடினார்கள். இவர் இப்பொழுது, தமிழில் பொன்னியின் செல்வன், நிறங்கள் மூன்று, மலையாளத்தில் ‘சமாறா எதிரே’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.டைகர் ஷெராப்புடன் ‘கண்பத்” என்ற இந்தி படத்தில் இன்று படபிடிப்பில் உள்ளார்....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்.

சினிமா
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் தர்சன் கணேசன் ஹீரோவாக விரைவில் அறிமுகம். சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது.அவருக்கு அடுத்தவர் தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல கம்பெனிகள் அழைப்பு  விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது. தாத்தா போலவே தெருக் கூத்து நாடகத்தில் நடித்து, அன்னை இல்லத்திலிருந்து மீண்டும் ஒரு நடிகர் உருவாகிறார்.  ...
திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரத்தை  தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி.

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரத்தை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி.

சினிமா
 யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி உண்மையான நட்பை போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் விருமன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்திருப்பவர் யுவன். அவருக்கு இந்த விலையுயர்ந்த பரிசை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் கார்த்தி. விருமன் படத்தின...
RS Infotainment Pvt Ltd தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும்,இளையராஜா இசையமைப்பில்,விஜய் சேதுபதி – சூரி நடிக்கும்,இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை !

RS Infotainment Pvt Ltd தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும்,இளையராஜா இசையமைப்பில்,விஜய் சேதுபதி – சூரி நடிக்கும்,இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை !

சினிமா
இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே போன்ற உள்ளடக்கத்தில் சிறந்த பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த RS Infotainment Pvt Ltd சார்பில் திரு. எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், 'விடுதலை' திரைப்படம், இந்திய மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது. உலக தரத்தில் இணையற்ற படைப்புகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் குவிய, முக்கிய காரணமாக விளங்குகிறார். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் மற்றும் மிகவும் பிரபலமான நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ...
RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

சினிமா
RRR மற்றும் KGF அத்தியாயம் 2 ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரு முக்கிய தூண்களான,  ஜூனியர் NTR மற்றும் பிரசாந்த் நீல்,  ஆகியோர் Mythri Movie Makers & NTR Arts தயாரிக்கும் NTR31 இல் இணைந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இரத்தத்தில் நனைந்த மண் மட்டுமே நினைவில் கொள்ளத்தக்கது!!! அவனது மண்..... அவனது ஆட்சி ஆனால் சிந்தியது  அவனுடைய இரத்தம் அல்ல.... திரைப்பட ஆர்வலர்கள் முதல் திரைப்பட விமர்சகர்கள் வரை, உலகெங்கிலும் உள்ள மக்கள் RRR மற்றும் KGF படத்தின் மீது தொடர்ந்து பாராட்டுக்களையும் அன்பையும் பொழிந்து வருகின்றனர். இரண்டு படங்களும் ரசிகர்களின்  இதயங்களை வென்றதோடு, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளன. பார்வையாளர்கள் இப்போது NTR31 இல் அவர்களது கவனத்தை குவித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை, மேலும...
”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” ‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” ‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

சினிமா
அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது, பழிவாங்கும் அதிரடி ஆக்‌ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடினமான கதையாகவும், புத்திசாலித்தனமான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் சினிமாவாகவும் இருப்பது போக, அனைவருக்கும் பிடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்புக்காகவும் படம் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ’சாணிகாயிதம்’படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சங்கையாவாக வாழ்ந்த இயக்குநர் செல்வராகவனின் பாத்திரச் சித்தரிப்பை பலரும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்,  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்,  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !

சினிமா
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச்சிறந்த ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான,  'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம்,  மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறந்த கதைகள்  மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் சிறந்த ஓடிடி தளமாக புகழ் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான ‘டாணாக்காரன்’ விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  தற்போது மே 27, 2022 அன்று இந்த ஆண்டின் மிகப்பெரிய ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமை கொள்கிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய க...
‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்காக நிருபராக மாறிய விமல்..!

‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்காக நிருபராக மாறிய விமல்..!

சினிமா
'ஓடியன் டாக்கீஸ்' சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.( Thudikkum Karangal ) மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, 'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர். இந்தப்படம் குறித்து இயக்குனர் வேலுதாஸ் கூறும்போது, “இந்தப்படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக...
கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சினிமா
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன.இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வேட்டுவம் பட...