Sunday, April 26

விளையாட்டு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்!

விளையாட்டு
கோவாவில் நடைபெறவுள்ள 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 530 விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின்  தலைவர் Dr. ஐசரி K. கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். கோவாவில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 9 வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின்  தலைவர் Dr. ஐசரி K. கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 37 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது. அப்போது உரையாற்றிய ஐசரி கணேஷ் பேசியதாவது  கடந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஐந்தாம் இடம் கிடைத்தது, ...
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.  

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.  

விளையாட்டு
கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர்,திரு M.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி, பல உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்கு ,அவர்களுக்கு தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கி  உதவிகளைச் செய்துள்ளார். ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல மெடல் பரிசும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் சில்வர் மெடல் பெற்று சாதனை செய்துள்ளார். ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தே...
வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்பு; ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்பு; ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

விளையாட்டு
இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் முதன்மை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் பாராட்டு விழா நிகழ்ச்சியில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் 2--வது இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதா ஸ்ரீ, உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வில் மாண்புமிகு விளையாட்டு ம...
தமிழகத்தில் விளையாட்டுத் துறை திரு .உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது-வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்பாராட்டு

தமிழகத்தில் விளையாட்டுத் துறை திரு .உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது-வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்பாராட்டு

சினிமா, விளையாட்டு
உதயநிதியை பாராட்டிய வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்! வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் ஃபுட்பால் பிளஸ் U-13, U-15 மற்றும் U-17 யூத் லீக்களுக்கான புதிய ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி, பாலக்காட்டை சேர்ந்த ஜிதினுக்கு ஸ்பெயினில்  ஓராண்டு பயிற்சிக்காக தனது பங்களிப்பாக ரூ 22 லட்சத்திற்கான காசோலையும் ஐசரி கணேஷ் வழங்கினார். இது குறித்து ஐசரி கணேஷ் பேசியதாவது, “இன்று தமிழகத்தில் விளையாட்டுத் துறை உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது. முதல்வர் திரு. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இன்னும் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஃபுட்பால் விளையாட்டை தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே வேல்ஸ் ஃபுட்பால் அகாடெமி ஆரம்பிக்க இருக்கிறோம், இதற்காக நல்ல திறமையாளர்களை கண்டுபிடித்து அவர்...
தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்! – வெற்றியாளருக்கு பரிசு வழங்கிய ‘ஜெயிலர்’ பாடலாசிரியர் சூப்பர் சுப்பு

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்! – வெற்றியாளருக்கு பரிசு வழங்கிய ‘ஜெயிலர்’ பாடலாசிரியர் சூப்பர் சுப்பு

விளையாட்டு
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தரவரிசை டென்பின் பவுலிங் லீக்! - நடப்பு மாநில சாம்பியன் அபிஷேக் துதாசியா வெற்றி தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்புடன் இணைந்தது) சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டியு பவுலில் நடந்த தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்கின் இறுதிப் போட்டியில், நடப்பு மாநில சாம்பியன் அபிஷேக் துதாசியா, ஷபீர் தன்கோட் மற்றும் பார்த்திபன்.ஜே ஆகியோரை வீழ்த்தினார். கடந்த ஒரு மாதம் காலமாக நடைபெற்ற லீக்கின் இறுதிப் போட்டி மூன்று பக்க நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில், அபிஷேக் துதாசியா, ஷபீர் தன்கோட் மற்றும் பார்த்திபன்.ஜே ஆகியோர் போட்டியிட்டனர். இரண்டு போட்டிகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், அபிஷேக், பார்த்திபன் மற்றும் ஷபீர் ஆகியோர் தங்களில் நாக் அவுட் அரையிறுதியை வென்ற பிறகு ஒருவருக்கொருவர...
முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

விளையாட்டு
முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்! கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம்  நாள்  ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள இலங்கை நகரமான காலி (Galle) நகருக்கு மிக அருகில் உள்ள ஒரு இடத்தில் அவர் நாளைக் கழிக்க திட்டமிட்டிருந்தார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றவாதிகளால் நிறுவப்பட்ட கோட்டையான பழைய நகரமான காலி (Galle) கோட்டைக்கு அந்த இடம் மிகவும் பிரபலமானது. முரளிதரன் அவரது மேலாளரான குசில் குணசேகரவால் நடத்தப்படும் ’பவுண்டேஷன் ஆஃப் குட்னஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கற்றல் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்தார். முரளிதரன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ...
சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா

சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா

விளையாட்டு
சிலம்பம் நூல் வெளியீடு மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழாவிற்கு பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை, மற்றும் பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் பயிற்சிக் கூடம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரு.V.கிருபாநிதி (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) தலைமை வகித்தார். திரு.பவர் பாண்டியன் ஆசான் (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) மற்றும் திரு.K.கணேஷ்குமார் (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) முன்னிலை வகித்தனர். திரைப்படதயாரிப்பாளர் திரு.கலைப்புலி S.தாணு சிலம்பம் நூலை வெளியிட சிலம்பக்கலை பாதுகாவலர் திரு.N.R.தனபாலன் (TMASRDT-Chairman) நுாலை பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக யாத்திசை பட குழு பங்கேற்றனர். சிலம்பம் விளையாட்டு சான்றிதழை திரு.ராஜா அன்பழகன் MC (நியமன குழு உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி) வழங்கினார்....
விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

விளையாட்டு
கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார். அந்த தடகள வீரர்கள் விவரம்: 1. Dheena dhayalan - Pole vault (கோலூன்றி தாண்டுதல்) - All India Inter University & Khelo india University Games Medalist. 2. Hemamalini - Javelin throw (ஈட்டி எறிதல்) - State, National & All India Inter University Medalist. 3. S.V. Arun kumar - 100,200mts (Sprinter) - State & All india I...
சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற ,ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின்  மாணவி வே.ரிந்தியாவுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற ,ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் மாணவி வே.ரிந்தியாவுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டு

செய்திகள், விளையாட்டு
சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி வே.ரிந்தியா அவர்கள், ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெள்ளி, தங்கம், மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவ்வாறு உலகளவில் தமிழகத்தின் பெருமைதனை பறைசாற்றிக் கொண்டிருக்கும் வே.ரிந்திகா அவர்கள் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஷசுன் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவரின் வாழ்த்துதலையும் பாரட்டுதலையும் பெற்றார்....
திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE இறகுப்பந்து போட்டி  நடத்தப்பட்டது.

திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE இறகுப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

சினிமா, விளையாட்டு
டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL - DUBBING BADMINTON LEAGUE என்ற இறகுப்பந்து போட்டி ஆண்,பெண் இரு பாலருக்கும் இணைத்து நடத்தப்பட்டது. "ஜெயா டிவி" யின் பின்புறம் உள்ள "ரக்கஸ் ஹெர்லி" என்ற இறகுப்பந்து அரங்கில் ஏப்ரல் 16ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. சம்மேளனம் மற்றும் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி மற்றும் இசையமைப்பாளர் தீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் பேசுகையில்,இந்த போட்டியை பார்த்தபோது தன்னையும் மறந்து ஆட்டத்தில் லயித்துப்போனதாக கூறினார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை ஊக்குவித்ததை பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.இதுதான் யூனியன் என்பது...ஒரு குடும்பமாக இருப்பது. இன்று ந...