தென்னிந்திய அளவில் நடைபெற்ற முதல் டென்பின் பவுலிங் போட்டி! – கிஷான்.ஆர் மற்றும் ஹிட்டாசா சிசோடியா பட்டங்கள் வென்றனர்
பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி!
முதலாவது தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார். இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார்.
மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார்.
...









