Sunday, April 26

விளையாட்டு

 கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது

 கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது

விளையாட்டு
கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். 2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார். மேலும், லீக் அணியில் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில்,வாய்ப்புகள் மற்றும் எங்கு அணுகுவது என்பது அவருக்குத் தெரியாததால், லீக் அணியில் சேருவது அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தோன்றிய யோசனையே '22 யார்ட்ஸ்'. தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும் '22 யார்ட்ஸ்' அமைந்தது. பின்பு தங்கள் வீரர்களின் திறமைகளை சுவைக்க மேட்ச் எக்...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிரந்த அங்கீகாரம் கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிரந்த அங்கீகாரம் கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது

சினிமா, விளையாட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிரந்த அங்கீகாரம் நமது கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... தமிழ்நாட்டில் கிக்பாக்ஸிங் விளையாட்டிற்கு வழிகாட்டி,ஊக்கமளித்து அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு விளையாட்டு துறையை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் முன்னணியில் கொண்டு வரும் தொலைநோக்கு சிந்தனையில் பெரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் *மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் *திரு.உதயநிதி ஸ்டாலின் * அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்தின் சார்பாகவும், வீரர் & வீராங்கனைகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம...
44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

விளையாட்டு
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான்! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா ”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறன் வேண்டும், அதிலும் விளையாட்டு திறன் என்பது மிக மிக முக்கியம், என்பதை தற்போதைய காலக்கட்டம் நிரூபித்து வருகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், வெற்றி, தோல்விகளை தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் ...
“XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

“XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

செய்திகள், விளையாட்டு
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் திரு கலைச்செல்வன், திரு சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது இந்த போட்டியின் முதல் நாளில் (டிசம்பர் 30, 2022) திரைப்பட இயக்குனர் திருமதி கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா, தொழிலதிபர் திரு சூர்யபிரகாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பி...
சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

செய்திகள், விளையாட்டு
சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க 75 வது இந்திய சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் “இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவசம் அணிந்து” ஆசியா/இந்திய அளவிலான சாதனை நிகழ்ச்சியை (Asia and India Book of Records) 12.08.2022 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தியது. இந்நிகழ்வில் மாணவர்களை ஈடுபடுத்தியதன் வாயிலாக இக்கல்வி நிறுவனம் சாதனை மிக்க இளைய தலைமுறையினரை உருவாக்கியுள்ளது. இச்சாதனை நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 79 பள்ளிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 75 மாணவர்கள், எமது ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் 3000 மாணவியருடன் இணைந்து, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவச...
9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் –  13 ஆகஸ்ட் 2022

9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் –  13 ஆகஸ்ட் 2022

விளையாட்டு
9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் -  13 ஆகஸ்ட் 2022 அபிஷேக் சாம்பியன் பட்டம் வென்றார் ஆகஸ்ட் 13, 2022 சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுலில் முடிவடைந்த நிப்பான் பெயிண்ட் 9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அபிஷேக் துதாசியா அக்ரமுல்லா பெய்க்கை (353-351) தோற்கடித்தார். இரண்டு கேம்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், அக்ரம் முதல் ஆட்டத்தை அபிஷேக்கை (207-191) 16 எனும் எண்ணிக்கையில் முடித்தார். ஆட்டம் 2 இல், கடைசி சட்டத்தில் இரட்டை எண் அடிக்க வேண்டிய அக்ரம் அதை ஒரு விஸ்கர் மூலம் தவறவிட்டார் மற்றும் கேம் 2 (146-160) என்ற எண்ணிக்கையில் தவறவிட்டார் மற்றும் இறுதியில் இரண்டு கேம் பின்ஃபாலில் குறுகிய இரண்டு பின்களில் ஆட்டத்தை இழந்தார். முந்தைய நாள், இரண்டு கேம்களின் ஒட்டுமொத்த பி...
பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய ஆதித்யராம் குழுமம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய ஆதித்யராம் குழுமம்

செய்திகள், விளையாட்டு
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆதித்யாராம் குழுமத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) பிரிவான ஆதித்யராம் ஹெல்பிங் ஹேண்ட்ஸ், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகுதியுடையவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. சமீபத்தில், ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே சுரேஷ் மற்றும் ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கே சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்தார். மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய பாடி பில்டிங் மற்றும் பிஸிக் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் - 2022-இல் பங்கேற்க சுரேஷ் விரும்பினார்.ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்த...
டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி

டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி

சினிமா, விளையாட்டு
தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்கின் (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அவெஞ்சர்ஸ், டப்பிங் சூப்பர் கிங்ஸ், டோலிவுட் டைகர்ஸ், வலிமை 11ஸ் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டியில் மோதின. இரண்டு நாட்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் முடிவில் வலிமை 11ஸ் வெற்றிபெற்றது. டோலிவுட் டைகர்ஸ் இரண்டாவது இடம், டப்பிங் சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடம் மற்றும் அவெஞ்சர்ஸ் நான்காம் இடம் பெற்றனர். தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தால் அதன் உறுப்பினர்களுக்காக இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 2018-ஆம் ஆண்டு முதல், டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக தலைவர் டத்தோ ராதாரவி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குற...
ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி – ரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி – ரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

கல்வி, செய்திகள், விளையாட்டு
ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி - ரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 44-வது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார்.   இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேச அளவிலான 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ் ஒ...
மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான்  பரிசுகளை வென்றுள்ளார்.

மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான் பரிசுகளை வென்றுள்ளார்.

சினிமா, செய்திகள், விளையாட்டு
மெட்ராஸ் ரேஸ் கிளப் வருடம் தோறும் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். சாதாரண விளையாட்டு போட்டியில் உள்ளது போல் அல்லாமல், இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உடை அணிவது முதல் டிசிப்ளின் என் ஏராளமான விதி முறைகள் உள்ளன. இதில் கலந்து கொண்டு சிங்கிள்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து பரிசு கோப்பையும் டபிள்ஸ் போட்டியில் முதல் பரிசு கோப்பையும் வென்றுள்ளார். ஆனால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறவில்லை. இதை பற்றி அவர் கூறுகையில் " இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற வேண்டுமென்றால் முதலில் மனதால் நம்மை தயார் படுத்த வேண்டும் . கவனம் ( concentration) சிதற கூடாது. ஆனால் படங்களின் டப்பிங் வேலைகள் மற்ற வேலை பளுக்கள் காரணமாக எனக்கு என்னை தயார் படுத்தவோ கவனமாக விளையாடவோ இயலவில்லை. அடுத்த முறை நிச்சயமாக மீண்டும் போட்டிகளில...