Thursday, June 4

சினிமா

பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது

பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது

சினிமா
நடிகர் திலகம் நடிப்பில் திரையுலகை அலங்கரித்த முதல் திரைப்படம் பராசக்தி, கடந்த 1952, அக்டோபர் 17 அன்று தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியானது.பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது ஒரு குடும்பக்கதையை தனது திரைக்கதை, வசனத்தால் திறம்பட பட்டை தீட்டி அவற்றை  வைர வரிகளால் ஒளிரச்செய்தவர் கலைஞர் மு.கருணாநிதி. திரையுலகில் நுழைய விரும்பும் அக்கால இளைஞர்களுக்கு பராசக்தி வசனங்களே அடையாள அட்டையாய் திகழ்ந்தன. கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. ஏ . பெருமாள் ஆகியோர் ஆகும் நடிகர்திலத்தின் முதல் படம் என்ற பெருமையை மட்டும் இப்படம் பெற்றிருக்கவில்லை ,அதோடு கூட பல சமூக கருத்துகளை விதைத்த மு...
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

சினிமா
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார். நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் அவர் தனது காலை அசைக்க, அதே நேரத்தில் டிரம்மர்கள் அவரது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அடிக்கிறார்கள். இந்த ஃபர்ஸ்ட் லுக் பார்த்தவுடன் பெரும் உற்சாகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்...
சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11, 2022 அன்று வெளியாகிறது!

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11, 2022 அன்று வெளியாகிறது!

சினிமா
பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. மதிப்புமிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர். படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “’யசோதா’ இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத...
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின்

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின்

சினிமா
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். நிகழ்வில் பிரலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி  “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்....
ஆற்றல்- திரை விமர்சனம்

ஆற்றல்- திரை விமர்சனம்

சினிமா
கதையின் நாயகன் விதார்த் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் வித்தார்த்தின் தந்தை சார்லி, விதார்த்துக்கு ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது ஆனால் அதற்க்கு அவருக்கு 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அந்த பணம் இல்லாததால் அவரது கனவு நனவாகாமல் உள்ளது வித்தாரத்தின் தந்தை சார்லி. 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது சிலரால் கொலை செய்யப்படுவதோடு அவரது பணமும் கொள்ளை போகின்றது ,பிறகு ஒரு முறை பைக்கில் வரும் ஒரு கும்பல் ஒருநபரை அதன் பின் அடித்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை எடுத்துச் செல்கின்றனர். அதன் பின் விதார்த்துக்கு தன தந்தை சார்லிக்கும் இப்படித்தான் நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டு வில்லனை தேட ஆரம்பிக்கிறார்.அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை விதார்த் கண்டுபிடித்தாரா இல்லையா? கடைசியில் ஆட்டோமேட்டிக் கார் உருவாக்கும்அவரது கனவு நனவானதா? என்பதுதான...
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.

சினிமா, செய்திகள்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது. தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, பொருளாளராக என்.இராமசாமி ( தேனாண்டாள் முரளி) செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல்அமீது உட்பட 44 செயற்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர்.தேர்தல் அதிகாரியான சி.கல்யாண் பணியாற்றினார். பில்டிங் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற உறுதுணையாக இருந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் சேம்பர் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத் , ஜாகுவார் தங்கம், உட்...
ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை  சக்தி பிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது

ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது

சினிமா
'பனாரஸ்' படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பனாரஸ்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது. முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்து மக்களின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந...
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு

சினிமா
வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனியின் இயக்கத்தில் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, அக்டோபர் 21ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'NBK 107' என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஆர் எஃப் சியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் தலைப்பு அக்டோபர் 21ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும...
கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்.

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்.

சினிமா, செய்திகள்
சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் திரு. சிவகுமார் வழங்கினார். தமிழ் திரையுலகில் 'ஜெய் பீம்' போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது. அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்த...
இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

சினிமா
‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்...