Tuesday, June 2

சினிமா

செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

சினிமா
உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ' தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்...
‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!*

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!*

சினிமா
*தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!* இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும். திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல்,...
மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்*

மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்*

சினிமா
*இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் "பேட்ரியாட்" ( “Patriot” )  திரைப்படம்**ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது !!* இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் "பேட்ரியாட்" -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ரும்...
வங்களாவிரிகுடா- திரைவிமர்சனம்

வங்களாவிரிகுடா- திரைவிமர்சனம்

சினிமா
முழு நீள படத்தையும் ஒருவரே தன் தோளில் தூக்கி சுமந்து இருக்குறாருனு பலப்படங்களில் சிலரை குறிப்பிட்டு சொல்வது உண்டு ,அது இந்த படத்துக்கு நூறு சத விகிதம் பொருந்தும் என்று சொல்லலாம் .ஆம் ஒருவரே படத்தின் 21 துறைகளையும் கையாண்டு வெளிவந்துள்ள படம்தான் இந்த வங்காள விரிகுடா. அண்ணாச்சின்னு எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுற தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார் தூத்துக்குடியில் இருக்காரு ,ஒருசமயம் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில ரொம்ப மன வேதனை அடைந்து கடற்கரையில தனிமையில இருக்கிறப்ப,அவரோட முன்னாள் காதலி கடல்ல குதிச்சு தற்கொலைக்கு முயற்சி செய்றாங்க ,அத பாக்குற அண்ணாச்சி அவங்கள காப்பாத்துறாரு, அதுக்கு அப்புறம் தன்னுடைய காதலிய கொடுமை பண்ற அவளோட கணவனை கொன்னுட்டு,காதலிய தனி வீட்டுல வசிக்க வைக்கிறாரு , தன்னோட பள்ளியில் படிக்கும் மகளை அண்ணாச்சி ஏற்கனவே திருமணம் செஞ்சிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு தான் தங்க...
ஜாக்கி- திரை விமர்சனம்

ஜாக்கி- திரை விமர்சனம்

சினிமா
தமிழ் சினிமாவுல சேவல் சண்டை ,ஜல்லிக்கட்டு போன்ற மண் மணக்கும் கிராமிய விளையாட்டுக்கள் சார்ந்த சில படங்கள் திரைக்கு வந்ததுண்டு ,அந்த வரிசையில் கிடா சண்டையை மையமாக வைத்து கதையம்சம் கொண்ட படமாக இந்த ஜாக்கி திரைப்படம் வெளிவந்திருக்கிறது . ஆட்டோ ஓட்டுனர் ஆன யுவன் கிருஷ்ணா,காளி என்ற கிடாவை வளர்த்து வருகிறார், அந்த கிடா சண்டையில் களமிறக்கப்பட்டால் அதனுடன் மோதும் கிடாக்களை வெல்லுவதில் சிறந்த கிடா வாக திகழும் பெருமை பெற்றது. அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாவும் கிடா வளர்ப்பில் ஆர்வமாக உள்ளார் ,ஒரு சமயம் யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாவுடனான மோதலில் வெற்றி பெறுகிறது ,இந்த வெற்றி ,கிடா உரிமையார்களிடையே இடையே பகைமையை உருவாக்குகிறது இதனால் அவர்களுக்கு இடையே மோதல்கள் வெடிக்கின்றன ,அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பகையை, அதே கிடா சண்டையை வைத்தே முடிவுக்கு கொண்டுவர அந்த ஊரின் முக்...
திரௌபதி 2 -திரை விமர்சனம்

திரௌபதி 2 -திரை விமர்சனம்

சினிமா
14 ஆம் நூற்றாண்டு காலகட்டக் கதையில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடிக்க, மோகன். ஜி இயக்கியுள்ள படம். வீர வல்லாள மகாராஜா(நட்டி) என்ற மன்னர் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார் அந்த வல்லாள மகாராஜாவின் கருட படையில் குறுநில மன்னர் வாரிசான வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி) என்பவர் இணைந்து பணியாற்றுகிறார், வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முயற்சிக்கும்போது, அவர்களை எதிர்த்து போரிடும் வல்லாள மன்னர் கொலை செய்யப்படுகிறார். மன்னரையும் , கருட படை வீரர்களையும் காப்பாற்ற இயலாததை நினைத்து மனம் வருந்தும் வீரசிம்ம காடவராயர், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது, மன்னர் அவர் முன் தோன்றி சில பொறுப்புகளை அவரிடம் கொடுக்கிறார்,அத்தகைய பொறுப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம க...
பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது: பட விழாவில் நடிகர் நகுல் பேச்சு!

பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது: பட விழாவில் நடிகர் நகுல் பேச்சு!

சினிமா
நகுலைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது இயக்குநர் மனோஜ்குமார் பேச்சு! பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா.இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் கே எஸ் அதியமான், மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.எஸ் அதியமான் பேசும்போது, "தம்பி நகுலின் ஒரு துடிப்பானநடிப்பை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆகாஷ் ...
கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த ‘தயை’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த ‘தயை’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இலக்கியம், சினிமா
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த 'தயை' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புனே நகரத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் புனே பாரதி வித்யாபீட் பல்கலை கழகத்தின் பதிவாளர் ஜெயக்குமார் புத்தகத்தை வெளியிட புனே நகரத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் சத்தியநாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிஞர் #சீனுராமசாமி, புனே நகரத் தமிழ் சங்க உறுப்பினர்கள் ரங்கராஜன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை புனே நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அருள் செல்வன் துணைத் தலைவர் பாஸ்கர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்....
கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார்.

கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார்.

இலக்கியம், சினிமா
49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது 49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்து விஜய் மில்டன் கவிதைகள் நூலை வெளியிட்டது. காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா, இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது. ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார். புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார், " இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,'ரோஜா கனவு', 'வெள்ளைப் புறாக்கதை' போன்ற ...
17 ஆண்டுகள் கழித்து..*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா*

17 ஆண்டுகள் கழித்து..*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா*

சினிமா
17 ஆண்டுகள் கழித்து..*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா* கடந்த 2009ல் டைரக்டர் ராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட படம் “*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” ! SPB சரண் தயாரிப்பில் வெளியான இந்த ‘குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’.. இயக்கிய ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன். ஏ,.வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.டைரக்டர் சேரன் உதவியாளரான ராமகிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகமானார்.யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பாபுலரானது. இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது சிறப்பு வாய்ந்ததாக திரையுலகினர் கருதுகிறார்கள்.அறம் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.. சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்த கண்காட்சி திருவிழாவில் இப்புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. ...