Thursday, April 23

Author: admin

K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் வழங்கும்,SP Cinemas வெளியீட்டில்,அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம்  ஜூன் 24, 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது  !

K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் வழங்கும்,SP Cinemas வெளியீட்டில்,அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம்  ஜூன் 24, 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது  !

சினிமா
தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனைகள் செய்து புகழ்பெற்று விளங்கும்  திரு.கேசவன், தமிழ்த் திரையுலகில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தயாரிப்பாளராக  ‘வேழம்’ படம் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 வருடங்களாக உதவி இயக்குனராகவும், விளம்பரப் பட இயக்குநராகவும், குறும்படத் இயக்குநராகவும் பரந்த அனுபவமுள்ள சந்தீப் ஷ்யாம், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், வணிக ரீதியாக எண்ணற்ற உள்ளடக்கம் சார்ந்த, வெற்றிகரமான பொழுதுபோக்கு திரைப்படங்களை தயாரித்து, விநியோகித்த SP Cinemas, ‘வேழம்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளது. “வேழம்”  திரைப்படம் ஜூன் 24...
எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது

சினிமா
சென்னை (மே 27, 2022) – இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”, திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். நடிகர் ராம் சரண் கூறும்போது...
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’.  படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

சினிமா
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி இருந்ததோடு, படத்தை பார்...
நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !

சினிமா
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக...
நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

சினிமா
வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். காதல் கதைகளை மயக்கும் விதத்தில் சித்தரிப்பதில் பெயர் பெற்ற ஹனு ராகவாபுடி இப்படத்தை இயக்குகிறார், ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் முன்னோட்டம் மூலம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது வெளியிட்டுள்ளனர். “சீதா ராமம்” திரைப்ப்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. படத்தின் இசை பாடல் குறித்த முன்னோட்ட விளம்பரங்கள் ...
பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேர மல்லிப்பூ

பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேர மல்லிப்பூ

சினிமா
21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி ந...
“போத்தனூர் தபால்  நிலையம்  திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும்.”- இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன் !

“போத்தனூர் தபால்  நிலையம்  திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும்.”- இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன் !

சினிமா
Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் சிறந்த  உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். அவர்களது  அடுத்த வெளியீடாக மே 27, 2022 முதல் ஆஹா தமிழில் ஓடிடி உலகளாவிய வெளியீடாக “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம்  வெளியாகிறது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'போத்தனூர் தபால் நிலையம்' என்ற தலைப்பில் வரும்போதே, இது ஒரு மென்மையான மெலோடிராமாடிக் டிராமாவாக இருக்கும் என்று நினைக்கையில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஷுவல் ப்ரோமோக்கள் நம் அனுமானங்களை முற்றிலும் தவறென நிரூபிக்கின்றன. ஆம்! இந்த படம் ஒரு முந்தைய காலகட்டத்தில்-குற்றம்-விசாரணை சம்பந்தபட்ட சஸ்பென்ஸ் திரில்லராக இருக்குமென சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் கூறுகிறது, மற்றும்  அந்த டிரெயலர் நமது ஆர்வத்தையும் அதிகரிக்கவைக்கிறது. மேலும், 'தபால்...
Sathya Jyothi Films, T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில்,ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !

Sathya Jyothi Films, T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில்,ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !

சினிமா
புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘இது சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ARK சரவணன் இயக்கும் “வீரன்”  படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 25, 2022) காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது. படக்குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள். இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர், இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  நடிக்கிறார்கள். வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டும...
A.R. Murugadoss Productions  நிறுவனம் Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து வழங்க, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம்   “1947 ஆகஸ்ட் 16” !

A.R. Murugadoss Productions  நிறுவனம் Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து வழங்க, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம்   “1947 ஆகஸ்ட் 16” !

சினிமா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களை இயக்குவது தொடங்கி பாலிவுட்டில் அமீர் கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தது வரை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனும் பெயர் இந்திய அளவில்  பெரும் புகழ் பெற்றது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்  இயக்குநராக மட்டுமன்றி அவரது நிறுவனத்தின் மூலம், சில திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு பிரகாசமான அறிமுகத்தை உருவாக்கி, இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர் பல ஆண்டுகளாக மறக்கமுடியாத பல திரைப்படங்களை கொடுத்துள்ளார், அவரது முதல் தயாரிப்பு, Fox Star Studios உடன்  இணைந்து உருவாக்கப்பட்டது. பல்வேறு களங்களிலான உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான கதைகளை உருவாக்கும் ஆர்வத்துடன் இயங்கும், கஜினி இயக்குனர் இப்போது Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். இவர்களின் முதல் ம...
விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது!

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது!

சினிமா
கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார். விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிக்ரகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அக்கதாப்பாத்திரமாக மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விகரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த புதிய திரைப்ப...