Saturday, April 25

Author: admin

’சினம்’- ‘எமோஷன்ஸ், த்ரில்லர் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்-  இயக்குநர் குமரவேலன்

’சினம்’- ‘எமோஷன்ஸ், த்ரில்லர் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்-  இயக்குநர் குமரவேலன்

சினிமா
GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் குமரவேலன் பகிர்ந்து கொண்டதாவது, “’சினம்’ படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ‘ஹரிதாஸ்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் ‘வாகா’ ...
தெலுங்கில் தொடர் வெற்றிகளுடன் தமிழுக்கு திரும்பும் சேத்தன் சீனு

தெலுங்கில் தொடர் வெற்றிகளுடன் தமிழுக்கு திரும்பும் சேத்தன் சீனு

சினிமா
இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. ஸ்ரீநிவாஸ் என்பது இவரது பெயராக இருந்தாலும் அந்த பெயரில் இன்னும் சில நடிகர்கள் இருப்பதால் சேத்தன் சீனு என மாற்றிக்கொண்டார். சேத்தன் சீனுவின் பூர்விகம் தெலுங்கு என்றாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். சிறுவயதிலேயே இவருக்கு சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியது இவரது தந்தை தான்.. அந்த சமயத்தில் அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதான கனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு. ஜூனியர் என்டிஆர் நடனம் கற்றுக்கொண்ட அதே மாஸ்டரிடம் நடனத்தையும் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டையையும் கற்றுக்கொண்ட சேத்தன் சீனு, அப்படியே மாடலிங் பக்கம் கவனத்தை திருப்பினார். மாடலிங் மூலமாக விளம்பரப்பட வாய்ப்புகள் வரவே, ...
விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

சினிமா
கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்.. எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை,திரைக்கதை,வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷும் இசை ஜிப்ரானும்,நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும்,சண்டைக்காட்சியை தினேஷ் சுப்புராயன் அவர்களும் அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.,என்றும் அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்....
புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!  

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!  

சினிமா
TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் டிரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். டிரெய்லரில் படத்தின் காட்சியமைப்புகளும், நடிப்பும் ஒரு அழுத்தமிகு தரமான படைப்பாக ‘பரோல்’ இருக்குமென்பதை உறுதி செய்திருந்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது… “பரோல்” படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்...
டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

இலக்கியம், செய்திகள்
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் ஒரு அங்கமாக ஜெயகாந்தன் குடிலை பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம், பிரபல எடிட்டர் லெனின், இந்தோ ரஷ்ய வர்த்தக சபையின் பி. தங்கப்பன், கவிஞர் இந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நேற்று திறந்து வைத்தனர். மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்....
போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

சினிமா, செய்திகள்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி 10 லட்சம் பரிசுத் தொகையுடன் இளைஞர்களுக்கான மெகா உடற்பயிற்சி போட்டி போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார். இம்முயற்சி குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்றார். "இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் ...
கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!!

கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!!

சினிமா
சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவினில்,  அதர்வா நடிக்கும் “ட்ரிகர்”  படத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்த இந்த விழாவினில் இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளார் சுருதி நல்லப்பா, நடிகர் அதர்வா முரளி ஆகியோர் படம் குறித்து மாணவிகளிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்  திரைப்படம் “ட்ரிகர்”  இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.  இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இவ்விழாவினில் தயாரிப்பாளர்  சுருதி நல்லப்பா பேசியதாவது…எங்கள் படத்தினை பற்றி உங்கள் முன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இப்படத்தினை பற்றி முதன் முதலில் இயக்குநர் சாம் ஆண்டன் கூறியபோது கதை மிகவு...
மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சினிமா
இன்று (13.09.2022) உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000 (ரூபாய் பதிமூன்று லட்சத்தி அறுபதாயிரம்) “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் வழங்கினார். உடன் Additional Collector பாலசந்தர், Salem District Cheif Educational Officer முருகன், Red Giant Movies இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில், மாமன்னன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் P.K.பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஜருகுமலை மலைப் பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் (குவியா...
வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

சினிமா
சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் =வர்ஷினியின் தி...
மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

சினிமா
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.   தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர். &n...