Monday, April 27

Author: admin

கலை இயக்குனர் R.ராதா காலமானார்

கலை இயக்குனர் R.ராதா காலமானார்

சினிமா
கலை இயக்குனர் R.ராதா காலமானார் எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார் / கமலஹாசன் /ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர் நடிகையர் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் R.ராதா . அவர் 14.2.2023 விடியற்காலை 3.30 மணி அளவில் காலமானார் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கீழ்பாக்கம்மடுத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 88 லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர் இவர்முக்தா சீனிவாசன், SP முத்துராமன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றிய படங்கள் எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய் , அடிமைப்பெண் படங்களிலும் சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ஜெயலலிதா முத்துராமன் நடித்த சூர்யகாந்தி, கமலஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன், ரஜினிகாந்த் நடித்த பில்லா, சிவப்புச்ச...
தூரிகையின் தீண்டல்- மியூசிக் வீடியோ வெளியீட்டு விழா

தூரிகையின் தீண்டல்- மியூசிக் வீடியோ வெளியீட்டு விழா

சினிமா
Kanmani Productions சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், CD அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல்  "தூரிகையின் தீண்டல்". திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்கள். இப்பாடலில் நடித்ததோடு ஆதி இப்பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மாலா கோபால் கூறியதாவது..., "பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுத ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அளித்தது.  இசையமைப்பாளர் அன்புமணியின், பங்களிப்பு அளப்பரியது.  இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இந்த குழுவை ஒருங்கிணைத்து, அவருடைய கருவை  மிகச்சரியான படைப்பாக ...
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது !!!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது !!!

சினிமா
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “பொய் பொய் பொய்” ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது !!! நடிகர்,இசையமைப்பாளர்,இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில், சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்” எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றிச் செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது. ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். “பொய் பொய் பொய்” பா...
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம்

மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம்

கல்வி, செய்திகள்
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம் ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், சினிமா துறை பிரபலங்கள் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் சென்னை, பிப்ரவரி 12: மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளி தனது சமூகப் பணிகளில் ஒரு பகுதியாக சுமார் இருநூறு மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அழைத்துச் செல்கிறது. அதில் பெரும்பாலானோர் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவர். இடைநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு பாரபட்சமின்றி நடைமுறை அறிவியல் அறிவை வழங்கும் நோக்கத்தில், குயின் மீரா பள்ளி தனது சிறு மாணவர் குழுவுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் படிக்கும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ...
அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்

சினிமா
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது. “கல்கி:பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மணிரத்னம் இன்று (13 பிப்ரவரி 2023) வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான திருமதி. சீதா ரவி, திருமதி. லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர். “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இரு...
மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொகுதி.3”(“GUARDIANS OF THE GALAXY VOL. 3”)புத்தம் புதிய டிரெய்லர் அறிமுகம்

மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொகுதி.3”(“GUARDIANS OF THE GALAXY VOL. 3”)புத்தம் புதிய டிரெய்லர் அறிமுகம்

சினிமா
மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொகுதி.3”(“GUARDIANS OF THE GALAXY VOL. 3”) புத்தம் புதிய டிரெய்லர் அறிமுகம். கேலக்ஸியின் விருப்பமான பாதுகாவலர்கள் எடுக்கும் இந்த ஒரு கடைசி சவாரியை மே 5 அன்று பாருங்கள்! நேற்றிரவு, பிக் கேமின் போது, ​​மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் ஜேம்ஸ் கன் ஆகியோர் "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3 (“Guardians of the Galaxy Vol. 3,”)தொகுதிக்காக ஆன்லைனில் புத்தம் புதிய, அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டனர்.இது ஜேம்ஸ் கன் தலைமையில் "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி"(“Guardians of the Galaxy”) உரிமையின் இறுதிப் படம். இப்படத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டானா, டேவ் பாடிஸ்டா, கரேன் கில்லான், போம் க்ளெமென்டிஃப் ஆகியோர் நடித்துள்ளனர், இதில் வின் டீசல் க்ரூட்டாகவும், பிராட்லி கூப்பர் ராக்கெட்டாகவும், சீன் கன், சுக்வுடி இவுஜி, வில் பவுல்டர் மற்றும் மரியா பகலோவாவாகவும் நடித்து...
தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”!

தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”!

சினிமா
விகாஸ் நடிக்கும்"துச்சாதனன்" பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன் தான்! அப்படிப்பட்ட சுயநலவாதியின் கதைதான் இந்த துச்சாதனன்! படத்தின் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் அகிலா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, ஒற்றாடல் போன்ற படங்களில் நடித்துள்ளார்! இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரோகிணி நடிக்கிறார்! மேலும் இப்படத்தில் லொள்ளு சபா மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்! படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக்கடையில் திர...
வசந்த முல்லை -திரை விமர்சனம்

வசந்த முல்லை -திரை விமர்சனம்

சினிமா
உடலுக்கு தேவையான ஓய்வை தராமல் ஓடிகொண்டிக்கொண்டே, தான் பார்க்கும் மென்பொருள் துறையில் ஓயாமல் உழைக்கிறார்  ருத்ரன் (பாபி சிம்ஹா), அந்த கடின உழைப்பு அவருக்கு மன உளைச்சலை கொடுக்கவே வேலையிலிருந்து இடைவெளி எடுத்து, தன் காதலி நிலாவோடு (காஷ்மீரா பர்தேஸி) வெளியூருக்கு செல்கிறார். அங்கு அவர்கள் தங்கும் 'வசந்த முல்லை' என்னும் ஹோட்டலில் பல எதிர்பாராத சம்பங்கள் நடக்கிறது. அதனால் ஏற்படும் இடையூறுகளிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் அந்த சம்பவங்களுக்கு பின்ணணி என்ன ?இவற்றை மீதி படத்தின் கதை விவரிக்கிறது இந்தபடத்தின் கதை நாயகனாய் ‘ருத்ரன்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்ஹாவும், அவருக்கு இணையாக காஷ்மீரா பரதேசியும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்கள் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்,மற்றும் கொச்சு பிரேமன், சரத் பாபு ஆ...
டாடா -திரை விமர்சனம்

டாடா -திரை விமர்சனம்

சினிமா
நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் ஹீரோ மணிகண்டனுக்கும் (கவின்) அங்கேயே படிக்கும் சிந்துவிற்கும் (அபர்ணா தாஸ்) காதல் ஏற்படுகிறது.இவர்களின் காதல் கர்ப்பம் வரை சென்று விடுகிறது. கவின் அந்த கர்ப்பத்தை கலைக்கச் சொல்லியும் சிந்து  அதற்க்கு உடன்படமால்இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொ ள்வதோடு கல்லூரிப் படிப்பை முடிப்பதற்க்கு முன்பே தனியாக வாழ ஆரம்பிக்கிறார்கள், காதலன், கணவனாகிய பின்னும் மணி(கவின்) பொறுப்பின்றி குடியும் கும்மாளமும் ஆக இருக்க மனம் நொந்த சிந்து (அபர்ணா தாஸ்) குழந்தை பெற்ற பின், அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு, தனது பெற்றோருடன் சென்றுவிடுகிறார். இதன் பின் பிறந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதும் மணிக்கு (கவின்) வர அவரும் பொறுப்புள்ள தந்தையாக குழந்தையை வளர்க்கிறார் சில வருடங்களுக்கு பிறகு மணி(கவின்) சிந்துவை ( அபர்ணாதாஸ் ) மீண்டும் சந்திக்கும் ...
இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் !!!

இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் !!!

சினிமா
திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். “யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும். வன்...