Wednesday, April 29

Author: admin

ராம்சரண் – உபாசனா நட்சத்திர தம்பதிகளின் பிரத்யேக காணொளி படைத்திட்ட புதிய சாதனை

ராம்சரண் – உபாசனா நட்சத்திர தம்பதிகளின் பிரத்யேக காணொளி படைத்திட்ட புதிய சாதனை

சினிமா
 மீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள் வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்- உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்த காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் முன்னணி இந்திய நட்சத்திரமான ராம்சரண் தொடர்பான பிரத்யேக காணொளி, வேனிட்டி ஃபேர் என்னும் யூட்யூப் சேனலில் வெளியானது. 'ஆர். ஆர். ஆர்' நட்சத்திர நடிகர் ராம்சரண் ஆஸ்கார் விருதுக்கு தயாராகிறார்' என்ற பெயரில் வெளியான இந்த காணொளி, ஆறரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொள...
ரெட் கார்பெட் ஃபேன் ஈவண்ட்டின் புகைப்படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது மற்றும் சியோலில் நடைபெற்ற ஃபோட்டோகால் மற்றும் பாப்-அப் அனுபவ  பகிர்வு “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி. வால்யூம் 3”-ன் உலகளாவிய சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது!

ரெட் கார்பெட் ஃபேன் ஈவண்ட்டின் புகைப்படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது மற்றும் சியோலில் நடைபெற்ற ஃபோட்டோகால் மற்றும் பாப்-அப் அனுபவ பகிர்வு “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி. வால்யூம் 3”-ன் உலகளாவிய சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது!

சினிமா
ரெட் கார்பெட் ஃபேன் ஈவண்ட்டின் புகைப்படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது மற்றும் சியோலில் நடைபெற்ற ஃபோட்டோகால் மற்றும் பாப்-அப் அனுபவ  பகிர்வு "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி. வால்யூம் 3"-ன் உலகளாவிய சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது! இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி" டிரையாலஜியின் கடைசி படம் மே 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சியோலில் இன்றும் நேற்றும் நடைபெற்ற ஃபோட்டோகால், பாப்-அப் ஜோன் மற்றும் ரெட் கார்பெட் ஃபேன் நிகழ்வு ஆகியவற்றின் புகைப்படங்களைப் பகிர்வதில் மார்வெல் ஸ்டுடியோஸ் மகிழ்ச்சி அடைகிறது. சியோலில் நடந்த இந்த ரசிகர்களின் நிகழ்வுகள் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’க்கான உலகளாவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளது ஜேம்ஸ் கன், கிறிஸ் பிராட், கரேன் கில்லன் மற்றும் போம் க்ளெமெண்டீஃப் ஆகியோர் மகிழ்வுடன் இந்த நிகழ்வுகளில் ரசிகர...
 “அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

 “அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

சினிமா
மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் நடிகை ரோகிணி பேசியதாவது… படம் பார்த்தேன்... இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகமிக அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு ச...
மயில்சாமி இறுதியாக நடித்த விழிப்புணர்வு குறும்படம் ‘விளம்பரம்’

மயில்சாமி இறுதியாக நடித்த விழிப்புணர்வு குறும்படம் ‘விளம்பரம்’

சினிமா
வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறியது ; இயக்குனர் ராகுல் உருக்கம் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை A.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இன்று இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குனர்க...
ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு துவங்கியது

ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு துவங்கியது

சினிமா
சென்னைக்கு அருகே துவங்கிய ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான சர்தார், காரி, ரன் பேபி ரன் ஆகிய வெற்றிப் படங்களையடுத்து லப்பர் பந்து படத்தைத் தயாரிக்கிறது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர்.மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங...
தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது: கார்த்தி பெருமிதம்

தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது: கார்த்தி பெருமிதம்

சினிமா
 சென்னையில் நடைபெற்ற சிஐஐ தக்‌ஷின் விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கார்த்தி கலந்துக் கொண்டு பேசியது: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், சிஐஐ தலைவர் மற்றும் என் அன்பு நண்பர் திரு சங்கர் வானவராயர் மற்றும் இன்று கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் அவரது மனைவி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோரை உடனடியாக தன்பால் ஈர்த்துக் கொண்டது. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கதைகள் பெரும்பாலும் நமது ...
டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

சினிமா
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் 'ஆதி புருஷ்' தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது. இயக்குநர் ஓம் ராவத்- தயாரிப்பாளர் பூஷன் குமார் -நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்', டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை முன்னெடுத்திருக்கிறது. பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' விரைவில் வெளியாகவிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் காவியமாக கருதப்படும் ராமாயணத்தை தழுவி உருவாகி இருக்கிறது...
 ZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

 ZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

சினிமா
ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது... “ஒரு கோடை Murder Mystery” எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்குப் பிறகு இந்த சிரீஸ் முழுக்கவே புதுமையானதாக இருக்கும். முதல் முறை இன்றைய தலைமுறையின் டீன் டிராமா, நவீன தலைமுறை ரசிக்கும் திரில்லராக இது உருவாகியுள்ளது. இதன் வரவேற்பைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். முந்தைய வெப் சீரிஸ் போல் இதற்கும் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறோம். ZEE5 நிறுவனம் சார்...
‘குலசாமி’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

‘குலசாமி’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

சினிமா
விமல் நடிப்பில், இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில், “குலசாமி” ஏப்ரல் 21 முதல் திரையரங்குகளில் MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'. ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது… இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார...
நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!  

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!  

சினிமா
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர்  மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.   ’NTR 30’ திரைப்படம்  தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும்  ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி. ’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர். ...