Tuesday, May 26

Author: admin

மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் ! 

மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் ! 

சினிமா
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது ! 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட இத்தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் 2022 ஏப்ரல் 22 முதல்  டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப...
நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்…

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்…

சினிமா, செய்திகள்
தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது, இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்....
கோயம்பத்தூர்,ஊட்டியை தொடர்ந்து Trip Factoryன்  மூன்றாவது கிளையை சென்னை அடையாரில் நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் ,

கோயம்பத்தூர்,ஊட்டியை தொடர்ந்து Trip Factoryன் மூன்றாவது கிளையை சென்னை அடையாரில் நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் ,

சுற்றுலா, செய்திகள்
அடையாரின் புதிய அடையாளம் Trip Factory என்றென்றும் வாடிக்கையாளர்களின் சேவையில் Trip Factory Trip Factory சுற்றுலா நிறுவனம் உலகம் முழுவதும் பதினேழு நிறுவனங்களை இயக்கி வருகிறது . இதில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளத்திருக்குக்கும் சுற்றுலா செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் . Trip Factory இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு உள்ளது. கோயம்பத்தூர் , ஊட்டியை தொடர்ந்து சென்னை அடையாரில் தனது மூன்றாவுது கிளையை திறந்துள்ளது.இதை திரைப்பட நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் , Trip Factory யின் நிர்வாக இயக்குநர் திரு. JP அவர்கள் கூறியதாவது. எங்களின் பல கிளைகள் சென்னையில் வருங்காலத்தில் உருவாக உள்ளது. Trip Factory சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படும் . சுற்றுப்பயணங்கள் மட...
Simon & Schuster India  பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில்   Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது.

Simon & Schuster India  பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில்   Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது.

சினிமா, செய்திகள்
திங்கள் 18 ஏப்ரல் 2022 புதுடெல்லி : இன்று Simon & Schuster India பதிப்பக நிறுவனம்  பிரபல எழுத்தாளர் போரியா மஜும்தார் எழுத்தில்,  Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தை, 20 மே அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது இப்புத்தகத்தை, “தலைவி, 83” படங்களின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி திரைப்படமாக தயாரிக்கவுள்ளார். எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான போரியா மஜும்தார் கூறுகையில்.., ஐபிஎல்லின் வெற்றி கடந்த ஒன்றரை தசாப்தங்களில் இந்திய கிரிக்கெட் விளையாட்டில் நடந்த  மிகப்பெரிய அற்புதம். மேலும் இந்த மலர்ச்சி அத்தனை எளிதாக நடந்தது அல்ல. இந்த ஐபிஎல்லின்  உருவாக்கத்தின் போது கமிஷனர் லலித் மோடியிடம் இருந்ததெல்லாம் ஒரே  ஒரு யோசனை. அவர் கிரிக்கெட்டின் எதிர்காலம் நோக்கிய கனவை, ஒரு பார்வையை அனைவரிடமும் புரிய வைக்க முயன்றார் .  ஐபிஎல் எப்படி நடந்தது? அதன் பின் கதைகள் என்ன, ல...
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

இலக்கியம், சினிமா
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது....
நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

சினிமா, செய்திகள்
பயோகிராபி இந்தியா பதிப்பகத்தின் புத்தக வெளியீடு விழா நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக்கொண்டார். இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பான 'Aesthetics Recaptured' நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். 'Aesthetics Recaptured' நூலை ஹேமாமாலினி குணாநிதி எழுதியுள்ளார். 20 தலைப்புகளுடன், 20 பகுதிகளாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் நூலின் திறனாய்வை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் விஜயலட்சுமி இ...
அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் பணியாற்றிய அதிரடியான அனுபவங்கள் – நடிகர் அருண் விஜய்

அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் பணியாற்றிய அதிரடியான அனுபவங்கள் – நடிகர் அருண் விஜய்

சினிமா
முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது. நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இய...
லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

சினிமா
ஒரு மருத்துவர்(பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது. நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம்(சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை. பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கபட்டுள்ளது, இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதபட்டுள்ளது. இந்த வித்தியாசமான கான்செப்ட்க்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பாடல்வரிகள் அமைக்கபட்டுள்ளது. பிராங்க்ஸ்டர் ராகுல் ஒரு நடிகனாக அவரது திறனை தாண்டி, இதை புரிந்து கொண்டு இந்த பாடலுக்கு ஏற்ற அசத்தலான நடனத்தை கொடுத்துள்ளார். சுரேன்.M பாடலின் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் அர்விந்த் கைலாசம் பாடலுக்கு ஒரு புது திரை வண்ணத்தை அளித்துள்ளார். இசையமைப்பாளர்...
வைகைப்புயலுடன், நடனப்புயல் கலக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வைகைப்புயலுடன், நடனப்புயல் கலக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சினிமா
பிரமாண்ட படப்பிடிப்பில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் ! தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்க...
இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி

இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி

கல்வி, செய்திகள்
ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு ஏற்பாடு:இப்தார் விருந்து நிகழ்வில்20 மாணவர்களுக்கு கல்வி உதவி முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு சென்னை, ஏப் 17 ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ரமலான் திருநாளையொட்டி  இப்தார் விருந்து மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் பலராலும் நன்கு அறியப்பட்டது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி, பெண்களின் மாண்பைப் போற்றும் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி, பசித்தவர்களுக்கு உணவிடும் விருந்தாளி எனும் திட்டம் என ரெயின்ட்ராப்ஸ் எண்ணற்ற சமூக பணிகள் ஆற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு மத...