Tuesday, June 2

சினிமா

*டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!*

*டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!*

சினிமா
*டோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி”  படக்குழு !   ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!* டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில்  வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியா...
*“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !!*

*“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !!*

சினிமா
*சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !* அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது. வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் ச...
*ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு*

*ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு*

சினிமா
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தனது அடுத்த படைப்பான “தடயம்” படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்க...
*‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*

*‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*

சினிமா
*‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!* இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு தங்கள் நடிப்பை வலுவாக வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தங்கள் கதாபாத்திரங்களான திரௌபதி, ஆயிஷா, கோதை ஆகியவற்றின் அனுபவங்களை நாயகிகள் பகிர்ந்துள்ளனர். திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ படத்தில் திரௌபதியாக நடித்தது என் சினிமா கரியரில் மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரம் தீவிரமான உணர்வுகளையும், எதையும் தாங்கும் உறுதியையும் அதே சமயம் நளினத்தையும் ஒருங்கே கொண்டது. அந்த ஆழமான உணர்ச்சிகளையும் வலிமையையும்...
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

சினிமா
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு  முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது  Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pi...
*“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!*

*“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!*

சினிமா
*“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!* பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார். “’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்...
*’மான சங்கர வர பிரசாத்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி*

*’மான சங்கர வர பிரசாத்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி*

சினிமா
*'மான சங்கர வர பிரசாத்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி* உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மான சங்கர வர பிரசாத் ' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி தனது இதய பூர்வமான -ஆழமான - உணர்ச்சி பூர்வமான- செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒரு தெலுங்குத் திரைப்படம் இந்த இலக்கை அடைவது இதுவே அதிவேகமான சாதனையாகும். இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லையும் கடந்து, சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாக உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி எட்டாவது நாளில்  வலிமையான வசூலை பதிவு செய்த MSG-  பெரு...
*இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்*

*இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்*

சினிமா
*இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர்* இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இயக்குநர் - தயாரிப்பாளர் அட்லீ - திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார். இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், '' எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்'' என பதிவிட்டு, பிரத்யே...
விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !!

விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !!

சினிமா
விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !! “விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் – 2026 ஜனவரி 14 அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார். அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்...
இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!*

இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!*

சினிமா
*பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!* தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர...