தற்கொலை எண்ணத்தை மாற்றும் விதமாக உருவாகியுள்ள ‘யோசி’ நாளை (ஏப்-7) வெளியாகிறது
15 வருடங்களுக்கு பிறகு ஊர்வசி-கலாரஞ்சனி சகோதரிகள் மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘யோசி’ திரைப்படம் நாளை (ஏப்-7) ரிலீஸ்
J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. நாளை (ஏப்-7) இந்தப்படம் வெளியாகிறது.இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்திற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்...









