Saturday, April 25

Author: admin

நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி – டாக்டர். பிரியா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி – டாக்டர். பிரியா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

சினிமா
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர்.இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவருக்கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்பதே லட்சியம். பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க ரெடியாகி வருகிறார். இந்த நிலையில், கோபிநாத் ரவிக்கும், சென்னையை சேர்ந்த டாக்டர்.பிரியா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை ஐடிசி நட்சத்திர ஓட்டலில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் சரத்குமார், சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் மகேந்திரன், சுரேஷ் சக்கரவர...
கணம் ஆழமான, அர்த்தமுள்ள படம்; இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமை அடைகிறேன்! – நடிகை அமலா

கணம் ஆழமான, அர்த்தமுள்ள படம்; இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமை அடைகிறேன்! – நடிகை அமலா

சினிமா
கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்துக் காட்டியிருக்கிறார். இசையில் மெலடியை அழகாக கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் பணியாற்றும்போது, நேரத்தை கைப்பற்ற முடிந்தது. அப்படத்தில் 'இன்னு...
அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்  நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார்

அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம் நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார்

சினிமா
பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு 'அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்'. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் Children of Heaven. செப்டம்பர் 1 அன்று இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார். மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது. உரையாடலின் இடையில் ஆரம்பித்த மழை கடைசி வரை பெய்ய, "இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்" என்று உரையை முடித்தார் மிஷ்கின்....
ஓடிடியில் சிறப்பாக மக்கள் ஆதரவை பெற்று வெற்றிப் பெற்றுள்ளது மாமனிதன் திரைப்படம்

ஓடிடியில் சிறப்பாக மக்கள் ஆதரவை பெற்று வெற்றிப் பெற்றுள்ளது மாமனிதன் திரைப்படம்

சினிமா
உலகின் தலைசிறந்த 10 திரை மேதைகளில் ஒருவரான  இங்மர் பெர்க்மன்ஸ் இயக்கிய  திரைப்படம் வெர்ஜின் ஸ்பிரிங்.அந்த திரைக் காவியத்தின்  பெயராலே மேற்கு வங்காளத்தில் ஒரு திரைப்பட விழாவை நடத்தி  வருகிறார்கள். உலக சினிமா  ஆர்வலர்களும்  மேற்கு வங்க திரைப்படக் கலைஞர்களும்  இணைந்து நடத்தும் விழா இது. இத்தகைய விழாவில்  மாமனிதன் திரைப்படம்  சிறந்த திரைப்படம் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த நடிகர் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது....
நடிகர் ரவி ராகுல் இயக்கும் “ரவாளி”

நடிகர் ரவி ராகுல் இயக்கும் “ரவாளி”

சினிமா
ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர். ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, வெளிமாநிலம் இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை தேடுவது தான் மீதி கதை. கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம...
 யோகிபாபு நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் “யானை முகத்தான்”.பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்குகிறார்.

 யோகிபாபு நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் “யானை முகத்தான்”.பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்குகிறார்.

சினிமா
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. 'யானை முகத்தான்' இப்படத்தில்,கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார்.இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார்.இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன்ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம்...
 புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் இனிதே துவங்கியது !!!

 புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் இனிதே துவங்கியது !!!

சினிமா
SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம்,  ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப...
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

சினிமா
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். தனது திருமணம் குறித்து பேசிய ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்...
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment  ஆகிய நிறுவனங்கள் மீண்டும்  இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் .

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment  ஆகிய நிறுவனங்கள் மீண்டும்  இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் .

சினிமா
விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment  நிறுவன தயாரிப்பாளர்கள் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார்  மீண்டும்  இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி,  பரபரப்பாக  தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும்...
இளையராஜாவின் 1417வது படம் ,ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் – மனிஷா யாதவ் நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பு நிறைவு!!

இளையராஜாவின் 1417வது படம் ,ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் – மனிஷா யாதவ் நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பு நிறைவு!!

சினிமா
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் "நினைவெல்லாம் நீயடா". இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது. இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முத்திரை பதித்திருக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடி...