Wednesday, May 21

அம்…ஆ – திரை விமர்சனம்

வழக்கமான பாணி அம்சங்கள் கொண்ட கதை களங்களை கொண்ட படங்களினையே பார்த்து அயர்வுற்று இருந்த மனதுக்கு ,புத்துணர்வு தரும் வகையில் வந்துள்ள படைப்புதான் இந்த அம் ..ஆ .  படம்,ஏராளமானவர்களின்  பாரட்டுக்களையும் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் , தமிழ்ப்பதிப்பான “அம் ஆ”. படம் ,Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், பார்ப்பவர்களின் மனதை வருடும் , அருமையான அன்பை பிரதிபலிக்கும்  படைப்பாக உருவாகியுள்ளது.

தாய்மையின் அன்பை பேசும் ஒரு கலை படைப்பாக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் நேசத்தையும் பாசத்தையும் அன்பினையும் வெளிப்படுத்தும் வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார்

ஸ்டீபன் என்னும் சாலை ஒப்பந்ததாரர் ஒரு அழகிய மலை கிராமத்திற்கு வருகிறார், அவர் அங்குள்ள ஒரு தாயையும், மகளையும் அவர்களோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது. உண்மையில் அவர் சாலை ஒப்பந்ததாரரா ?அல்லது அவர் யார்? .தேவதர்ஷினி யார் ? இது போன்ற பல முடிச்சுகளுடன் கதை பயணிக்கிறது.

தேவதர்ஷினியை இதுவரை எத்தனையோ படங்களில்  விதவிதமான கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் பார்த்திருக்கிறோம் ,ஆனால் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அவர் மாறுபட்ட பரிமாணத்தில் அழுத்தமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் சாலை ஒப்பந்ததாரராக தோன்றி, பின்பு மாறுபட்ட பரிமாணத்தில் பரிமளிக்கும் கதாபாத்திரத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் திலீப் ,இவர்கள் மட்டுமின்றி, ஜாஃபர் இடுக்கி, மீரா வாசுதேவ் ,டி.ஜி.ரவி, மற்றும் பலரின் சிறப்பான நடிப்பில் இந்த படம் அமைந்துள்ளது . கவி பிரசாத் கோபிநாத்தின்  எழுத்தில் (தமிழ் மொழி மாற்ற எழுத்தில் எழுத்தாளர் -எஸ்.ஆர்.வாசன்) தாமஸ் செபஸ்டின் இயக்கியுள்ளார். தாய்மையின் அன்பை சித்தரிக்கும் கதையில், வாடகை தாய் கருத்தையும் மையப்படுத்தி உள்ளார் , கோபி சுந்தரின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஆழமான பின்புலத்தை கொடுத்துள்ளது.

மலையும் மலைசார்ந்த பகுதிகளையும்,கண்களுக்கு இனிமையாக,காட்சிகளுக்கு தெளிவாக திகழும் வண்ணம் அனிஷ்யால் ஆர் .எஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.பிஜித் பாலாவின் படத்தொகுப்பு ம் படத்தின் கதையோட்டத்திற்கு பெரும் பங்களிப்பினை வழங்கி இருக்கிறது .தாய்மையின் உணர்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களின் மனதில் ஆழமான ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Spread the love