Sunday, April 19

அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மலர் அஞ்சலி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.24) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், அறக்கட்டளை உறுப்பினர் குமாரி சச்சு , செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதா சேதுபதி, திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமச்சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.சௌந்தர ராஜா, திரு.தாசரதி, நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Spread the love