முருகன்(யோகிபாபு) ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஆக உள்ளார்.இளம் வயது முதல்கொண்டே தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறார், இவருக்கு தெய்வயானை (ரேச்சல் ரபேகா) என்னும் மனைவியும், ஒரு மகனும் உள்ளார்கள், தனியார் நிறுவனத்தில் குறைந்த வருவாயில் பணியாற்றி வரும், அவர் ஒரு எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் முருகனுக்கு (யோகிபாபு) கார் பரிசாக விழுகிறது. அந்த காரை தன் வாழ்நாளின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என் அவர் கருதுகிறார் . அதற்குப்பின் அவரது வாழ்க்கை முன்னேற்ற திசையில் பயணிக்கிறது ,அதேசமயம் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருடன் ( வீரா)பகைமையை ஏற்படுத்திக்கொள்கிறார், அவரது காரும் திருடு போய் விடுகிறது .காரை பறிகொடுத்தபின் அவரது (யோகிபாபு) நிலை என்ன ? அந்த கார் மீண்டும் அவருக்கு கிடைத்ததா ?என்பதே படத்தின் மீதிக் கதை.,
கதையின் நாயகனாக யோகிபாபு முருகன் கதாபாத்திரத்தில் நம் கண் முன்னே உலாவும் சராசரி மனிதர்களை நினைவூட்டும் விதமாக நன்கு நடித்துள்ளார்.அவருக்கு இணையாக ரேச்சல்,மகனாக சாத்விக் போன்றோரும் கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வண்ணம் நன்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்,மேலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வீரா, அப்துல் லீ போன்றவர்களும் கவனிக்க தக்க வகையில் நடித்துள்ளார்கள்.
நகைச்சுவை கலந்த கதைக்கு இணக்கமான காட்சிகளையும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்தி ரங்களையும் கொண்டு, நல்ல க்ளைமாக்ஸுடன் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.படத்தை உருவாக்கியுள்ளார். அவருக்கு பக்கபலமாய் சந்தீப் கே விஜயின் ஒளிப்பதிவும் அமைந்திருந்தது .கதையின் ஓட்டத்துக்கு உறுதுணையாக ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பயணித்துள்ளது பாடல்களும் ரசிக்கும் படி உள்ளன .
லக்கி மேன் -குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் .